கண் திருஷ்டியை போக்கும் எளிமையான பரிகாரம்

sudam
- Advertisement -

நம்முடைய முன்னேற்றத்திற்கு முதல் முட்டுக்கட்டையாக நிற்பது இந்த கண்திருஷ்டி. நமக்கு ஒரு நல்லது நடக்கப்போகுதோ இல்லையோ. ஆனால் நடக்கப் போகும் நல்லதை தடுப்பதற்கு கண் திருஷ்டி வைக்க கட்டாயம் நாலு பேர் வந்து விடுவார்கள். என்னதான் செய்தாலும் சில விஷயங்களை மூடி மறைக்க முடியாது அல்லவா. நாலு பேருக்கு தெரிந்து விடும். அவ்வளவு தான், பிறகு நமக்கு நடக்க வேண்டிய நல்லது நடக்காமலே போய்விடும்.

இதையெல்லாம் தாண்டியும் இன்னும் ஒரு சில பிரச்சினைகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கு. சொந்த பந்தங்கள் நண்பர்கள் என்று இவர்கள் வீட்டுக்கு வருவார்கள். அவர்களை நம் வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால் கெட்ட எண்ணம் கொண்டவர்கள், எதிர்மறை எண்ணத்தை கொண்டவர்கள், நம் வீட்டிற்கு வந்து சென்றால் வீட்டில் ஒரு சண்டை நடந்து விடும். இந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கண் திருஷ்டி விலக எளிய பரிகாரம்

உங்க சொந்தங்களும் நண்பர்களும் உங்க வீட்டுக்கு வந்து சந்தோஷமாக நேரத்தை கழித்து விட்டு செல்கிறார்கள். ஆனால் அவர்கள் வந்து சென்ற பிறகு வீட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் உடல் அசதியாக இருக்கிறது. ஒற்றுமையாக இருந்த கணவன் மனைவிக்குள் சண்டை வருகிறது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விழுந்து அடிபட்டு விட்டது.

நன்றாக சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தை சரியாகவே சாப்பிடவில்லை, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வரத் தொடங்கினால் வந்தவர்களுடைய எண்ணத்தில் ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் இருப்பதாக அர்த்தம். அந்த எதிர்மறை ஆற்றல் உங்கள் வீட்டையே சுற்றி சுற்றி வரும் போது நிச்சயமாக வீட்டில் பிரச்சனைகள் தொடரத்தான் செய்யும். இதிலிருந்து விடுபட உடனடியாக இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். ஒரு சின்ன மண் அகல் விளக்கு எடுத்துக்கோங்க.

- Advertisement -

அதில் கட்டி கற்பூரத்தை வைத்து ஏற்றி விடுங்கள். அந்த கற்பூரத்தில் 3 கல் உப்பு போட்டு, ஒரே 1 கிராம்பு போட்டு இந்த புகையை வீடு முழுவதும் காண்பித்து விடுங்கள். உங்கள் வீட்டை சுற்றிவரும் அந்த எதிர்மறை ஆற்றல் அதாவது கண் திருஷ்டியானது இந்த நெருப்பில் பொசுங்கிவிடும். நேர்மறை ஆற்றல் உங்கள் வீட்டில் நிறைந்துவிடும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவோ பெரிய அளவில் பாதிப்புகளோ ஏற்படாமல் தடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே: கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்

வீட்டில் வரக்கூடிய எல்லோரையும் குறை சொல்லவில்லை. நமக்கு வேண்டப்பட்டவர்களும் வீட்டிற்கு வருவார்கள். ஆனால் வேண்டப்பட்டவர்களாகவே இருந்தாலும் அவர்கள் ஆழ்மனதில் நினைக்கக்கூடிய எண்ணத்திற்கு ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியை நம்மால் கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் நம் வீட்டில் நடக்கும் மாற்றத்தை வைத்து இதை நன்றாக புரிந்து கொள்ளலாம். கண் திருஷ்டியால் வீட்டில் பெரிய பாதிப்புகள் வராமல் இருக்க எளிமையான ஆன்மீகம் சொல்லும் இந்த பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -