கெட்ட சக்திகள் விலகி ஓட அனுமன் மந்திரம்

hanuman manthiram
- Advertisement -

ராமனின் தீவிர பக்தரான அனுமன் ராமருடைய படைக்கும் திறனும், சிவபெருமானுடைய அழிக்கும் திறனையும் ஒன்றாக பெற்றவர். பக்தர்களுக்கு துன்பம் என்றால் உடனே ஓடி வந்து தாங்கி பிடிப்பவரும் இந்த அனுமன் தான். பூலோகத்தில் பக்தர்களை காக்க வேண்டியே தேவலோகத்திற்கு செல்லாமல் இங்கே இருந்து அருள் பாலிக்கும் அற்புதமான கடவுள் தான் இந்த அனுமன்.

சிலருடைய வாழ்க்கையில் பிரச்சனைகளை நாம் எண்ணிப் பார்க்க முடியாத அளவில் இருக்கும். அவற்றையெல்லாம் தீர்த்து அவர்கள் வெளிவருவது என்பது அத்தனை சாதாரணமான காரியம் கிடையாது. மனிதன் சந்திக்கக் கூடிய எந்த விதமான பிரச்சனைகளாக இருந்தாலும் அதிலிருந்து அவரை காப்பாற்றக் கூடிய ஆற்றல் இந்த அனுமனுக்கு உண்டு.

- Advertisement -

அந்த அனுமனை அவருக்கே உகந்த இந்த மந்திரங்களால் வழிபடும் போது நம்முடைய இந்த பிரச்சனைகள் அனைத்தும் காணாமல் போகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன மந்திரம் என்பதை மந்திரம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

துன்பங்கள் கஷ்டங்கள் தீர அனுமன் வழிபாடு

முதலில் மனிதன் பிரச்சனைகளை கண்டு சோர்ந்து விடாமல் இருக்க வேண்டும். எந்த பிரச்சனைகள் வந்தாலும் அவ்வளவு தான் இதிலிருந்து நாம் தப்பிக்க முடியாது எல்லாம் முடிந்து விட்டது என்ற மனநிலை வந்து விட்டால் நிச்சயமாக அதிலிருந்து வெளிவர முடியாது.

- Advertisement -

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை துணிவோடு எதிர் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதற்கான போராட்டங்களையும் முயற்சிகளையும் நிச்சயம் நாம் தான் எடுக்க வேண்டும். தெய்வங்கள் அதற்கான துணை மட்டுமே செய்யும். அப்படி நம்முடைய போராட்டத்திற்கு மன தைரியத்திற்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய தெய்வம் தான் அனுமன்.

அவரின் இந்த மந்திரத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஜெபித்து வரும் போது நம்முடைய துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திர வழிபாட்டிற்கு வீட்டில் அனுமன் படம் இருந்தால் துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். பஞ்ச பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை வைத்துக் கொண்டு கீழ் வரும் மந்திரத்தை சொல்லுங்கள்.
1. ஓம் நமோ ஹரி ராமதூத ஆஞ்சநேய
அதிபல பராக்ரம சூலா
அண்ட ரண்ட பகிரண்ட சண்ட பிரசண்ட
உத்தண்ட கோலாகலா அகோர ஸத்ரு சம்ஹாரா
வரமருள் கிருபா தயாளா
சிவசிவ யோகாசன பிரியா
வாயு குமாரா சீதா லட்சுமி சுதா சுதா
பிரம்ம பிரசாகுல மிகுலா
பிரண்டகால மித்ரா
பம்பம்பம் ரரர ரிரிரி நமஹ சிவாய
மமவசிவசி சுவாஹா

- Advertisement -

2. ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே
ராமதூதாய லங்காவித்வம்ஸயை
அஞ்சனா கரிப்ப ஸம்பூதாய சாகினீ
டாகினீ வித்வம்ஸனாய கில கில
பூ பூ காரிணே விபீஷணாய
ஹனுமத்தேவாய ஓம் ஐம் ஹ்ரீம்
ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரூம் பட் ஸ்வாஹா

இந்த மந்திரத்தை 11, 21, 108 என்ற எண்ணிக்கையில் சொல்ல வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரில் சிறிதளவு எடுத்து வீடு முழுவதும் தெளித்து விட்டு உங்கள் தலையிலும் தெளித்துக் கொண்டு மீதம் இருக்கும் தண்ணீரை குடித்து விடுங்கள். இந்த மந்திர வழிபாட்டோடு அனுமன் சாலிசா தெரிந்தால் அதையும் சொல்லுங்கள். அனுமனின் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களில் அதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே: குடும்ப பிரச்சினை தீர மந்திரம்

இது போல காலை மாலை இருவேளையும் வீட்டில் விளக்கேற்றி இந்த மந்திர வழிபாடு செய்து வாருங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் எல்லாம் எங்கே போனது என்று நீங்களே யோசிக்கும் அளவிற்கு எல்லாம் மாறிப் போகும். இந்த மந்திர வழிபாட்டை தொடர்ந்து செய்து வந்தால் எந்த வித பயமும் இன்றி வாழ்க்கையை நிம்மதியான முறையில் வாழலாம்.

- Advertisement -