இந்த 6 விஷயங்களை கவனிக்காமல் புறக்கணிப்பதால் உங்கள் வீட்டில் பணப்பற்றாக்குறை மற்றும் எதிர்மறை சக்தி உண்டாகும்

gajalakshmi-cash
- Advertisement -

வாழ்வில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும். அதிலும் பலருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சனைகள் வரத்தொடங்கும். இவ்வாறு இருப்பதற்கு என்ன காரணம் என்று பலரும் யோசிப்பதில்லை. சிலர் நம் தலைவிதிப்படி தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்று தங்களுக்கு தானாகவே சொல்லிக் கொள்வர்கள். ஆனால் சிலரின் வீட்டின் அமைப்பினை பொருத்தும் இவ்வாறான பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கும். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து வீட்டில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் வீட்டில் உருவாகும் எதிர்மறை எண்ணங்களையும், பணப் பற்றாக்குறையையும் தவிர்க்க முடியும்.

வீட்டில் வாஸ்து சாஸ்திரப்படி மாற்ற வேண்டிய விஷயங்கள்:
1. தண்ணீர் குழாய்:
சில வீடுகளில் தண்ணீர் குழாய்களில் இருந்து நீர் சொட்டிக்கொண்டே இருக்கும். அதே போல் வீட்டின் சுவர்களில் ஈரப்பதம் நிறைந்திருக்கும். இவ்வாறு நீர் சம்பந்தமான பிரச்சினைகள் வாஸ்துவில் சரியான விஷயமாக இல்லை. இவ்வாறான நீர் சம்பந்தமான பிரச்சினைகள் மூலம் வீடுகளில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அருள் கிடைக்காமல் போகும்.

- Advertisement -

2. பறவைகளின் கூடு:
வீட்டின் கூரைகளிலோ அல்லது மூலைகளிலோ பறவைகள் கூடு கட்டுவது என்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி நன்மை கிடையாது. இது வாஸ்துவின் படி வறுமையை வீட்டிற்குள் அழைப்பதாக கருதப்படுகிறது. ஏனெனில் ஒரு பறவை தனது கூட்டில் முட்டையிட்டு அது உடைந்து விட்டால் அது நம் வீட்டிற்கு தான் பொருளாதாரப் பிரச்சினையை ஏற்படுத்தும்.

3. காலணிகள்:
வீட்டில் எப்பொழுதும் கிழிந்த காலணிகளை வைத்திருக்கக் கூடாது. கிழிந்த ஷூ, செருப்பு வீட்டில் இருப்பதினால் சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். எனவே உடனடியாக இவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

- Advertisement -

4. உடைந்த பொருட்கள்:
வீட்டிலுள்ள பொருட்கள் மற்றும் கண்ணாடி உடைந்திருந்தால் அவற்றை வீட்டில் வைத்திருக்க கூடாது. இந்தப் பொருட்கள் ராகுவை குறிப்பதனால் அவை உடைந்து இருக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களுக்கு மன வலியையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்துகிறது. அதேபோல் வீட்டின் சுவரில் விரிசல் இருந்தாலும் குடும்பத்தில் பல பிரச்சினைகள் உண்டாகும் அதனையும் உடனே சரிசெய்ய வேண்டும். அப்பொழுது மட்டுமே உங்கள் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்படும்.

5. பழைய பொருட்கள்:
தேவையில்லாத பொருட்களையும், குப்பைகளையும் ஒரே இடத்தில் சேர்ப்பது கூடாது. இவ்வாறு செய்வதால் அந்த இடத்தில் ஒட்டடை சேர்ந்து அந்த இடமே பாழ் அடைந்தது போல் மாறிவிடும். இவற்றை உடனே சுத்தம் செய்து விட வேண்டும். இல்லாவிடில் வீட்டில் வறுமையும் வேதனையும்தான் நிறைந்திருக்கும்.

6. கடிகாரம்:
ஓடாமல் இருக்கும் கடிகாரத்தை வீட்டில் மாட்டி வைக்க கூடாது. உடனே அவற்றை பழுது பார்த்து சரி செய்ய வேண்டும். பழுதடைந்த கடிகாரத்தை வைத்திருப்பதால் நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளை தூங்குவதற்கு பல தடங்கல்கள் வந்து கொண்டிருக்கும். வாஸ்துவின் படி இதுவும் தீமையை உண்டாக்கும்.

இவ்வாறு வீட்டில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை நீங்கள் கவனிக்காமல், பொருட்படுத்தாமல் இருந்தீர்கள் என்றால் நிச்சயம் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும். இதனை மனதில் கொண்டு உடனடியாக உங்கள் வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -