வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை கண்டுபிடிக்க பரிகாரம்

vasal2
- Advertisement -

சில வீடுகளில் எதிர்பாராத கஷ்டங்கள், எதிர்பாராத நேரத்தில் வந்து பெரிய அளவில் தாக்கத்தை உண்டு பண்ணி விடும். நிம்மதியாக இருந்த குடும்பம் நிலை குலைந்து விடும். காரணத்தை தேடினால் கிடைக்காது. எதனால் இந்த பிரச்சனை வந்தது என்று யோசித்துப் பார்த்தால் அதுவும் தெரியாது.

திடீரென்று பூகம்பம் வந்தது மாதிரி வீடு இரண்டாக போயிருக்கும். இதற்கெல்லாம் என்ன காரணம். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி உங்கள் வீட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு நெகட்டிவ் எனர்ஜி உங்கள் வீட்டில் வந்து தங்கி விட்டது. அதை எப்படி கண்டுபிடிப்பது.

- Advertisement -

இதற்கு ஆன்மீகத்தில் ஒரு எளிமையான வழி சொல்லப்பட்டுள்ளது. இந்த பொருளை வாங்கி நிலை வாசலில் கட்டி வைத்தாலே உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை கண்டுபிடித்துவிடலாம். அது மட்டும் இல்லாமல் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தானாக வீட்டில் இருந்து வெளியேற்றப்படும். அது என்ன பொருள் அதை வாங்கி வீட்டில் எப்படி கட்டுவது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வீட்டுக்குள் இருக்கும் கெட்ட சக்தியை கண்டுபிடிக்க பரிகாரம்

நாட்டு மருந்து கடைகளில் இந்த பொருள் விற்கும். ஆகாச கருட கிழங்கு என்று சொல்லுவார்கள். இதை வாங்கிக் கொள்ளவும். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த பொருளை வாங்கி, இதற்கு மஞ்சள் குங்குமப்பொட்டு வைத்து, பூஜையறையில் வைத்து குலதெய்வத்தின் நாமத்தை 108 முறை சொல்லி, பூஜையறையில் விளக்கு ஏற்றி இந்த ஆகாச கருட கிழங்குக்கு தூபம் காண்பித்து, பிறகு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு இந்த ஆகாச கருடன் கிழங்கை அப்படியே கொண்டு போய் உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் வெளி பக்கமாக கட்டி விடுங்கள்.

- Advertisement -

இந்த ஆகாச கருடன் கிழங்கு நிலை வாசலில் கட்டிய மூன்று நாட்களில் அழுகிவிட்டால், உங்கள் வீட்டில் ஏதோ ஒரு கெட்ட சக்தியின் ஆதிக்கம் இருந்தது. அதை இந்த ஆகாச கருடன் கிழங்கு தன்னகத்தை ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம். அழுகிய ஆகாச கருடன் கிழங்கை பார்த்ததுமே கண்டுபிடித்து விடலாம் உங்கள் வீட்டில் ஏதோ கட்ட சக்தி இருந்தது என்று. இப்படி அழகிய ஆகாச கருடன் கிழங்கை உடனடியாக நிலை வாசலில் இருந்து எடுத்து ஊருக்கு ஒதுக்குப்புறம் கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

ஒரு வேலை நீங்கள் கட்டியாக ஆகாச கருட கிழங்கு பச்சை நிறத்தில் முளைவிட்டு வளர்ந்து கொண்டே செல்கிறது என்றால், உங்களுடைய வீட்டில் கெட்ட சக்தி எதுவும் இல்லை. ஏதோ கிரக சூழ்நிலையால் பிரச்சனை வந்தது என்று அர்த்தம். அந்த ஆகாச கருட கிழங்கு அப்படியே உங்கள் வீட்டு நிலை வாசலில் இருக்கலாம். அது அப்படியே முளைவிட்டு வளர்ந்து கொண்டே செல்லட்டும்.

- Advertisement -

தவறு ஒன்றும் கிடையாது. இந்த ஒரு ஆகாச கருட கிழங்கு உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் இருந்தால் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியாலும் நுழைய முடியாது. விஷ ஜந்துக்களும் உங்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கும் என்பது அர்த்தம். இந்த ஆகாச கருடக் கிழங்கை கருடனுக்கு சமமாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லி வைத்துள்ளார்கள்.

இதையும் படிக்கலாமே: குடும்ப பிரச்சினை தீர பரிகாரம்

இதனால் இந்த ஆகாச கருடன் கிழங்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வராமல் இருக்கும் என்பதும் நம்முடைய சாஸ்திரத்தில் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் பெரிய அளவில் பிரச்சனைகள் வரும் சமயத்தில் கண் திருஷ்டி அதிகமாகிவிட்டது, அதனால் பிரச்சனை என்னும் சமயத்திலும் இந்த கிழங்கை வாங்கி நிலை வாசலில் கட்டினால் குடும்பத்தில் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -