இந்தத் தீர்த்தத்தை வீட்டில் தெளித்தால் போதும். நம் குடும்பத்திற்கு கஷ்டமோ கெடுதலோ வரவே வராது. தோஷ நிவர்த்தி தீர்த்தம் தயார் செய்ய பூஜை அறையில் இருக்கும் இந்த 3 பொருள் போதும்.

theertham
- Advertisement -

நம் குடும்பத்திற்கு தொடர்ந்து கஷ்டங்கள் வருவதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத தோஷங்கள் தான். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்கள் பல உண்டு. குறிப்பாக கோவிலில் இருந்து வாங்கி வரக்கூடிய தீர்த்தத்தை உங்களுடைய வீட்டில் எல்லா மூலை முடுக்குகளிலும் தெளித்து விட வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் தோஷம் நிவர்த்தியாகும். வீட்டில் இருக்கும் பொருட்களுக்கு கண்ணுக்கு தெரியாத தோஷங்களின் மூலம் தாக்கம் இருந்தால், வீட்டில் இருக்கும் பொருட்களும் அடிக்கடி பழுதாகும். செலவு வைத்துக் கொண்டே இருக்கும்.

thulasi-theertham

இப்படி நம் வீட்டில் பயன்படுத்தும் வண்டி வாகனம் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் தோஷ நிவர்த்தி செய்ய வேண்டியது மிக மிக அவசியமான ஒரு விஷயம். இப்படி கோவிலில் கொடுக்கக்கூடிய தீர்த்தத்துக்கு இணையாக நம்முடைய வீட்டில் ஒரு தீர்த்தம் தயாரிப்பதாக இருந்தால் அதை எப்படி தயார் செய்வது. மிக மிக சுலபமான முறையில் சக்தி வாய்ந்த ஒரு குறிப்பு நமக்கு சொல்லப்பட்டுள்ளது. கோவிலுக்கு செல்ல முடியவில்லை தீர்த்தம் வாங்க முடியவில்லை எனும் பட்சத்தில் வீட்டிலேயே நீங்கள் உங்கள் கையால் இந்த தீர்தத்தை தயாரித்துக் கொள்ளலாம். வெறும் 3 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். தோஷநிவர்த்தி தீர்த்தத்தை நீங்களே தயார் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு சிறிய சொம்பு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தேவையான அளவு பன்னீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த பன்னீரில் பச்சைக் கற்பூரத்தையும் போட்டு, மஞ்சள்தூள் 2 சிட்டிகை சேர்த்துக் இந்த தீர்தத்தை நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த தீர்த்தத்தை கலந்து பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தினமும் உங்களுடைய வீட்டில் இந்த தீர்த்த தண்ணீர் தெளிக்கலாம். நீண்ட தூரம் பயணம் செய்வதாக இருந்தால் வண்டி வாகனங்களில் இந்த தீர்த்தத்தை தெளித்து விட்டு அதன் பின்பு பயணத்தைத் தொடங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

- Advertisement -

சிலபேர் வண்டியை ஓட்டுவதற்காக எடுத்தால் அடிக்கடி எங்கேயாவது கொண்டு போய் முட்டி விபத்தை ஏற்படுத்தி விடுவார்கள். விபத்து நேராமல் இருக்கவும் இந்த தீர்த்தம் நமக்கு துணையாக இருக்கும். சில வீடுகளில் எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவு இருக்கும். மன நிம்மதி இல்லாமல், நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கும் போது வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீடு முழுக்க குலதெய்வத்தை வேண்டி இந்த தீர்த்தத்தை தெளித்து விட்டு உங்கள் தலை மீதும் இந்த தீர்த்தத்தை தெளித்து கொண்டு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் போதும் வீட்டிற்கு நிம்மதி கிடைக்கும்.

pachai-karpooram1

இந்த தீர்த்தத்தை வீட்டில் தயார் செய்து வைத்துக்கொண்டால் ஒரு வாரம் கெட்டுப்போகாது. தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதைப்போல் நீங்கள் தினந்தோறும் வாசல் தெளிக்கும் தண்ணீரில் ஒரு மூடி பன்னீர், ஒரு சிட்டிகை மஞ்சள் தூங, கலந்து வாசல் தெளியுங்கள் உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் நுழையாமல் இருக்கும். இந்த மங்களகரமான தண்ணீரை வீட்டு வாசலில் தெளித்துவிட்டால் வீட்டிற்குள் மகாலட்சுமி நுழைவதற்கு எந்த தடையும் இருக்காது. முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும்.

- Advertisement -