வீட்டில் பொன் பொருள் சேர, வீட்டில் இருப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்க செவ்வாய்க்கிழமை அன்று பூஜை அறையில் கட்டாயம் இந்த 1 பொருளை வைக்க வேண்டும்.

mahalakshmi
- Advertisement -

வீடு என்று இருந்தால் அது சொர்க்கத்துக்கு இணையான ஒரு இடமாக இருக்கவேண்டும். அந்த வீட்டை நரகமாக மாற்ற ஒருபோதும் நாம் அனுமதி கொடுக்கக் கூடாது. வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்க செய்ய வேண்டிய விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். பொன் பொருள் சேர்க்கை, ஆடை ஆபரணங்கள் சேர்க்கை இருக்க வேண்டும். அக்கம்பக்கத்தில் சுமூகமான உறவு இருக்க வேண்டும். உறவினர்களிடம் சுமூகமான உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சந்தோஷம் எப்போதும் வீட்டில் நிறைந்திருக்க வேண்டும். இதற்கு வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அன்று நாம் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mahalakshmi1

உப்பை நம் முன்னே வைத்து என்ன வேண்டிக் கொள்கின்றோமோ அது நமக்கு அப்படியே நடக்கும். நம்பிக்கையுடன் உப்பை வைத்து வழிபாடு செய்தவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன் உண்டு. அதுவும் செவ்வாய்க்கிழமையில் குறிப்பிட்ட இந்த நேரத்தில் உப்பு வைத்து வேண்டிக் கொண்டால் அது மிக மிக சீக்கிரம் பலிக்கும். செவ்வாய்க்கிழமை வழக்கம் போல உங்களுடைய பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியிலிருந்து 2 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து விடவேண்டும். நேரம் மிக மிக முக்கியம்.

- Advertisement -

ஒரு சிறிய கண்ணாடி பௌலில் புதியதாக இருக்கக்கூடிய கல் உப்பை 2 ஸ்பூன் அளவு போட்டுக்கொள்ள வேண்டும். இந்த உப்புக்கு மேலே நுணி உடனடியாத விரலி மஞ்சளை வைக்க வேண்டும். இந்த கண்ணாடி பௌலிலை அப்படியே பூஜையறையில் வைத்து விடுங்கள். தீபமேற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. (தீபம் ஏற்றி வழிபட்டாலும் தவறு இல்லை.) பூஜை அறையில் இந்த உப்பை வைத்து விட்டு உங்களுடைய பிரார்த்தனையை இறைவனிடம் மனதார சொல்ல வேண்டும்.

salt

அவ்வளவு தான். உப்பை பூஜை அறையில் அப்படியே விட்டு விடுங்கள். மறுவாரம் செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியிலிருந்து 2 மணிக்குள் பழைய உப்பை உங்கள் கஷ்டங்கள் கர்ம வினைகள் அனைத்தும் தண்ணீரில் கரைந்து போகவேண்டும் என்று எண்ணிக்கொண்டே தண்ணீரில் கரைக்க வேண்டும். (ஒவ்வொரு வாரமும் புதிய விரலி மஞ்சளை தான் உப்பின் மேலே வைக்க வேண்டும். புதிய உப்பை வைக்க வேண்டும்.)

- Advertisement -

பழைய விரலி மஞ்சளை ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வாரங்கள். அதை உங்களுடைய பயன்பாட்டிற்கு நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இழைத்து முகத்தில் பூசிக்கொள்ளலாம். மஞ்சள் பொடியாக செய்து பூஜை புனஸ்காரங்களில் இந்த மஞ்சள் கிழங்கை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படியாக 12 வாரங்கள் தொடர்ந்து, 12 செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். வீட்டில் நடக்காத நல்லது கூட நடக்க தொடங்கும்.

virali-manjal

சில பேர் வீடுகளில் பணம் தங்காது. எந்த ஒரு பொருளையும் வாங்கி சேர்க்க முடியாத சூழ்நிலை இருக்கும். உறவுகள் இடையே சண்டை சச்சரவு இருக்கும். இப்படிப்பட்டவர்கள் பணக்கஷ்டம் தீர, மனக் கஷ்டம் தீர வேண்டும் என்று இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயமாக ஏதாவது ஒரு வகையில் நல்ல மாற்றம் குடும்பத்தில் நிகழும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -