பணம் சேர பரிகாரம்

nilai vasal cash
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பணம் எத்தனை அவசியமானது என்று அனைவருக்கும் புரியும். இதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது கிடையாது. அப்படியான பணத்தை சேர்க்க தான் நாமும் ஒவ்வொரு நாளும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அப்படியும் நம்மால் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை சேர்க்க முடிவதில்லை. இந்த பணம் நம்மிடம் தங்கவும் சேரவும் சில தாந்த்ரீக பரிகாரங்களை நம் முன்னோர்கள் சொல்லி வைத்து சென்றிருக்கிறார்கள்.

அவற்றில் ஒரு அற்புதமான தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நம்முடைய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதுடன் பணம் மேலும் பெருகுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணம் சேர பரிகாரம்

பணம் நம்மை தேடி வரவும் பணம் நம்மிடம் தங்கவும் முதலில் பணத்தை சம்பாதிப்பதற்கான வழிமுறைகளை நாம் சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் சேர்த்து இந்த ஒரு பரிகாரத்தையும் செய்தால் பணத்தை தேடி நீங்கள் அடைய வேண்டாம் பணம் உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த பரிகாரம் செய்வதற்கு சமையலுக்கு பயன்படுத்தும் பட்டை தேவை. அதை நன்றாக தூள் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலையில் ஆறிலிருந்து ஏழுமணிக்குள் சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். இதற்கு கையில் 200 ரூபாய் தாளையும், அதில் கொஞ்சமாக பட்டை தூளையும் கொட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை கையில் வைத்துக் கொண்டு உங்கள் நிலை வாசலுக்கு வெளியில் சென்று வீட்டின் உள்ளே பார்த்தவாறு ஊதி விடுங்கள். அதன் பிறகு வீட்டிற்குள் வந்து பூஜை அறையில் மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக நெய் விளக்கு ஏற்றி பண வரவிற்காக மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு செய்யும் பொழுது பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த பட்டைக்கு பணத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு 200 என்ற எண் சந்திரனை குறிக்கும் இவை இரண்டும் செய்யக்கூடிய அந்த நாள் வெள்ளிக்கிழமை அது மகாலட்சுமி தாயாருக்கும் ஆறிலிருந்து ஏழு சுக்கிர ஓரை இவை அனைத்தும் ஒன்றாகும் இந்த பரிகாரம் நல்ல பலனை தரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இத்துடன் நம்முடைய மோதிர விரல், நடுவிரல், ஆட்காட்டி விரல் இந்த மூன்று விரலிலும் கொஞ்சமாக தண்ணீரை தொட்டு அதன் பிறகு இந்த பட்டை தூளில் தொடுங்கள். இதை 200 ரூபாய் நோட்டில் தேய்த்தால் இந்த பட்டை தூள் நோட்டில் ஒட்டிக் கொள்ளும். அதை மடித்து அப்படியே பணம் வைக்கும் பர்ஸ் பீரோ போன்ற இடங்களில் வைக்கும் போது பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகக்கல்

பண வரவை அதிகரிக்க இது போல பல தாந்திரீக பரிகாரங்கள் இருந்தாலும் இந்த பரிகாரம் நல்ல பலனை தருவதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை தவிர்த்து அமாவாசை பௌர்ணமி போன்ற தினங்களில் செய்யும் போது மேலும் நல்ல பலனை தருவதாக அமையும் இந்த பரிகாரம் வழியில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையலாம்.

- Advertisement -