வாஸ்து தோஷம் நீக்கும் ஸ்படிகக்கல்

spadiga kal vasthu
- Advertisement -

சொந்தமாக வீடு கட்டுவது என்பது பெரிய செயலாக இருக்கிறது. அப்படி கட்டிய வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இல்லாமல் இருப்பது என்பது மிகப்பெரிய விஷயமாக திகழ்கிறது. என்னதான் பார்த்து பார்த்து வீட்டை கட்டினாலும் ஏதாவது ஒன்றில் வாஸ்து குறைபாடு ஏற்பட்டு அதனால் பல பாதிப்புகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகிறது. அப்படிப்பட்ட வாஸ்து குறைப்பாட்டை நீக்க ஸ்படிக கல்லை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வாஸ்து தோஷம் நீங்குவதற்கு பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை பின்பற்றும் பொழுது வீட்டில் ஒரு சில பகுதியை இடிக்க வேண்டிய அல்லது மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படி எதுவும் ஏற்படாமல் மிகவும் எளிமையான முறையில் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷத்தை நீக்குவதற்கு ஸ்படிகக்கல் உதவுகிறது.

- Advertisement -

புதிதாக வீடு கட்டிக் கொண்டிருப்பவர்கள் ஸ்படிக கல் இரண்டு கிலோ வாங்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் தரை போடுவதற்காக டைல்ஸ் அல்லது மார்புலை போடுவோம் அல்லவா? அவ்வாறு போடுவதற்கு முன்பாக ஸ்படிக கல்லை ஹாலின் நடுப்பகுதியில் பரப்பி அதற்கு நடுவில் பஞ்சலோகம், தங்கம் அல்லது வெள்ளி இந்த மூன்றில் ஏதாவது ஒன்றால் செய்யப்பட்ட நாணயத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு மேல் டைல்ஸ் அல்லது மார்பில் போன்றவற்றை ஒட்ட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வீட்டில் எந்த விதமான வாஸ்து தோஷம் இருந்தாலும் அது நீங்கிவிடும். வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்கும்.

வீடு கட்டுபவர்கள் இந்த செயலை செய்யலாம். ஏற்கனவே வீடு கட்டி விட்டோம் நாங்கள் என்ன செய்வது என்று பலரும் கேட்பீர்கள்? அப்படிப்பட்டவர்கள் பூக்களை போட்டு வைக்கும் உருளியை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வீட்டின் மையப் பகுதியில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு ஸ்படிக கல்லை அதில் போட்டு அதற்கு மேல் விபூதி, தாமரைப்பூ, அருகம்புல், ஒரு ரூபாய் நாணயங்கள், வாசனை திரவியங்கள் ஆன பன்னீர், ஜவ்வாது போன்றவற்றையும் அதில் போட்டு வைக்க வேண்டும். தினமும் இதை சுத்தம் செய்து மாற்ற வேண்டும்.

- Advertisement -

பழைய தண்ணீரை செடிகளில் ஊற்றிவிட்டு ஸ்படிக கல்லை சுத்தமாக கழுவி மறுபடியும் புதிதாக தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலமாகவும் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷங்கள் நீங்கும். மேலும் வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஸ்படிக கல் என்பது சுக்கிரனின் அம்சம் நிறைந்ததாக திகழ்வதால் மகாலட்சுமி தாயாரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்பது சூட்சுமமான உண்மை.

மேலும் இதில் போடப்பட்டுள்ள தாமரைப்பூ, அருகம்புல், விபூதி, பன்னீர், ஜவ்வாது போன்ற அனைத்துமே தெய்வ கடாட்சத்தை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் என்பதால் வீட்டில் தெய்வ கடாட்சம் நிறைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: சொந்தமாக வீடு வாங்க வாராகி வழிபாடு

வாஸ்து தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முறையில் தோஷ நிவர்த்தியை செய்து மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருளையும் பெற்று சந்தோஷத்துடனும், மகிழ்ச்சியுடனும், நிம்மதியுடனும், செல்வ செழிப்புடனும் வாழலாம்.

- Advertisement -