இந்த சத்தங்கள் உங்கள் வீட்டில் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தால் லட்சுமியும் குபேரரும் நிரந்தரமாக தங்கி பொன்னையும் பொருளையும் வாரி வழங்க தொடங்கி விடுவார்கள்.

lalshmi kuberar wall clock
- Advertisement -

வீடு சகல ஐஸ்வர்யங்களுடன் நிறைந்து இருக்க வேண்டும் எனில் அந்த வீட்டில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்ய வேண்டும். அப்படி தாயாரின் அனுகிரகத்தோடு வரக் கூடிய செல்வத்தை தக்க வைத்து அந்த இடத்தில் அதை பெருக செய்யும் பொறுப்பில் இருப்பவர் குபேரர். இந்த இருவரும் ஒரு இடத்தில் ஒன்றாக தங்கி விட்டால் அந்த இடத்தில் செல்வத்திற்கு குறைவே இருக்காது. இந்த இருவரும் ஒரு வீட்டில் நிரந்தரமாக தங்கி பொன்னையும் பொருளையும் வழங்க சில சத்தங்கள் நம் வீட்டில் தொடர்ந்து கேட்கும் படி செய்தால் போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அது என்ன மாதிரியான சத்தம் என்பன குறித்த தகவலை ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

லட்சுமி குபேரர் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய
இவர்கள் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய முதலில் வீட்டில் எப்போதும் மங்களகரமான இசைகள் ஒலிக்க வேண்டும். அதிலும் கனகதாரா ஸ்தோத்திரம் தினமும் வீட்டில் ஒலிக்க வேண்டும். ஏனெனில் துன்பத்தில் இருக்கும் பிராமணனின் வறுமையை நீக்குவதற்காகவே இந்த சோஸ்திரம் பாடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே இந்த ஸ்தோத்ரம் ஒலிக்கும் வீட்டில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு வியாழக்கிழமை மாலை வேளை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் சுக்கிர ஓரை இந்த இரண்டில் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு சின்ன கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள. இதற்கு சில்வர் தவிர மற்ற எந்த கிண்ணத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் அதில் நிறைய சில்லறை காசுகளை கொட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விளக்கேற்றிய பிறகு இந்த சில்லரை நாணயங்களை உங்கள் கையில் எடுத்து கிண்ணத்தில் மறுபடியும் போடுங்கள். இந்த நாணயத்தில் ஒலி வீடு முழுவதும் கேட்கும்.

உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் எல்லாம் இது போல செய்து கொண்டே இருந்தால், வீட்டில் பண வரவு அதிகரிக்கும். ஏனெனில் லட்சுமி குபேரர் இருவருக்குமே இந்த சில்லறை நாணயத்தின் சத்தம் மிகவும் பிடிக்கும். இதை நீங்கள் வியாபாரம் செய்யும் இடத்திலும் கடைப்பிடிக்கலாம். அதே போல் வீட்டில் ஒலி எழுப்பும் கடிகாரத்தை மாற்றி வைக்கலாம். முன் காலத்தில் எல்லாம் கடிகார முள்ளிலிருந்து சிறிய மணி போல இருக்கும். அது டிங் டாங் என்று இரண்டு ஒலியை மட்டும் நிதானமாகவும் அமைதியாகவும் எழுப்பும். இந்த ஒலி வீட்டில் கேட்பதும் மிகவும் சுபிட்சத்தை தரும்.

- Advertisement -

அதுமட்டுமின்றி இவர்கள் வீட்டில் நிரந்தரமாக இருக்க வீடு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு வாசனை திரவியங்களை பயன்படுத்துவது நல்லது. வாசனை திரவியங்கள் என்றால் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்கள் அல்ல. வீடு துடைக்கும் தண்ணீரில் மஞ்சள் கல் உப்பு வேப்பிலை சிறிதளவு ஜவ்வாது சேர்த்து துடைக்கும் போது இந்த மணம் வீடு முழுவதும் நிறைந்து வீடு தெய்வீக தன்மை நிறைந்ததாக காணப்படும். இந்த மணம் வீசும் இடத்தில் தாயார் வீற்றிருப்பார் என்று சொல்லப்படுகிறது .

இதையும் படிக்கலாமே: திங்கள் கிழமையில் 3 தேங்காயை இப்படி மட்டும் செய்யுங்கள் முந்திக் கொண்டு நிற்கும் எல்லா பிரச்சனைகளையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்கலாம்!

இந்த பதிவில் உள்ளவற்றைப் கடைப்பிடிப்பதில் நமக்கு எந்த விதமான நடைமுறை சிக்கலும் கிடையாது. ஏனெனில் இவை அனைத்தும் மிக மிக எளிமையான வழி தான். அதுவும் நம் முன்னோர்கள் கடை பற்றிய வழியும் கூட, இந்த முறையை நீங்களும் பின்பற்றி லட்சுமி குபேரர் இருவரின் அருளாசியை பெற்று செல்வ செழிப்புடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.

- Advertisement -