வேல் மாறல் பாடல் வரிகள்

- Advertisement -

முருகனுக்கு உண்டான பாடல் என்றால் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இவை எல்லாம் நம்முடைய நினைவுக்கு வரும். ஆனால் பார்வதி தேவி தன்னுடைய ஒட்டு மொத்த சக்தியையும் வேலாக உறுமாற்றி, அந்த வேலை முருகப்பெருமான் கையில் கொடுத்துள்ளார்கள். அந்த வேலை போற்றும் வகையில் அமைந்துள்ள வேல் மாறலை பற்றிய சிறப்பை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தினமும் எவர் ஒருவர் வேல் மாறலை பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு முருகப்பெருமான் கையில் இருக்கும் வேலினுடைய சக்தி முழுமையாக கிடைக்கும். சில பேருக்கு இந்த வேல் மாறலை முழுமையாக படிக்கக்கூடிய அளவுக்கு நேரமும் இருக்காது. அந்த வரிகளை உச்சரிப்பதில் சிரமமும் இருக்கும். கவலைப்படாதீங்க.

- Advertisement -

வேல் மாறலை முழுமையாக படிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த வேல் மாறலில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த நான்கு வரிகளை தினமும் படித்து வந்தாலே போதும். வேல் மாறலை முழுமையாக படித்த பலனை நம்மால் பெற முடியும். அது என்ன வரிகள் அதை எப்படி படிப்பது, எந்த நேரத்தில் படிப்பது என்பதை பற்றிய விரிவான தகவலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வேல்மாறல் படிக்க வேண்டும் என்றால் பூஜை அறையில் சின்னதாக ஒரு வேல் வாங்கி வைத்துக் கொள்ளவும். அந்த வேலைக்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்து, பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு பக்கத்தில் வைத்து விடுங்கள். காலையில் எழுந்து அந்த வேலுக்கு முன்பாக ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வேல்மாறல் பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை தோறும் அந்த வேலைக்கு சின்னதாக ஒரு அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வீட்டில் வேல் இல்லை. நாங்கள் இந்த பாடலை படிக்கலாமா என்று கேட்டால் நிச்சயம் படிக்கலாம். முருகப்பெருமானை மனதில் நினைத்து நின்ற இடத்தில் இருந்து இந்த பாடலை படித்தாலும் முருகனின் வேல் உங்களுக்கு வந்து துணையாக நிற்கும்.

காலை நேரம் மாலை நேரம் இரவு நேரத்தில் எப்போது வேண்டும் என்றாலும் இந்த பாடல் வரிகளை சொல்லலாம். தீராத துன்பத்தில் வெளியில் எங்கேயோ சிக்கிக்கொண்டீர்கள். காப்பாற்றுவதற்கு யாருமே இல்லை முருகா! முருகா! என்று கூப்பிட்டு இந்த பாடல் வரிகளை சொன்னால் முருகப்பெருமான் ஓடி வந்து உங்களை காப்பாற்றி விடுவார்.

- Advertisement -

வேல்மாறல் வரிகள்

திருத்தணியில் உதித்(து)தருளும்
ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன்
மயில் நடத்துகுகன்வேலே.

வேல் மாறலை முழுமையாக படிக்க முடியும் என்பவர்கள் அந்த முருகப்பெருமான் வேலுக்கு முன்பாக அமர்ந்து முழுசாக அந்த பாடல்களை படிக்கலாம். முடியாதவர்கள் இந்த 4 வரிகளை, 16 முறை சொன்னாலே போதும். அந்த முருகப்பெருமான் அருள் ஆசியை உங்களால் முழுமையாக பெற முடியும்.

என்ன வேண்டுதல் வைத்து வேண்டுமென்றாலும் இந்த வேல் மாறலை படிக்க தொடங்கலாம். இந்த வேல் மாறலை படிக்கத் தொடங்கிய பின்பு உங்களுக்குள் ஏற்படும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக அந்த முருகப்பெருமான் உங்களுக்குள் வருவதை உணரும் சக்தியை கொடுக்கக் கூடிய பாடல் வரிகள் தான் இவை.

பூஜை அறையில் சின்னதாக இருக்கும் வேலை வைத்து இந்த பாடலை சொல்லி பூஜை செய்துவிட்டு, தேவைப்பட்டால் அந்த வேலை உங்களுடனே துணைக்கு எடுத்துச் செல்லலாம். முக்கியமான வேலைக்கு செல்லும்போது காரிய தடை வராமல் இருக்க இந்த வேல் உங்கள் கையில் இருந்தாலே போதும். தடைகள் விலகும் நினைத்தது நடக்கும்.

வேல் மாறலை பற்றி ஒருவர் சொல்லி தெரிந்து கொள்வதை விட 48 நாள் தொடர்ந்து பூஜை அறையில் அமர்ந்து முருகனை நினைத்து இந்த நான்கு வரிகளை சொல்லிப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடக்காத அதிசயங்கள் நல்ல மாற்றங்கள் எல்லாம் நடக்கும். அது போலவே வேல்மாறல் படிக்கத் தொடங்கிய உடனே உங்கள் வாழ்க்கையில் தீராத துன்பம் வந்துவிட்டால், உடனே வேல்மாறல் படிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: பணப் பிரச்சனை தீர மந்திரம்

முருகன் உங்களுடைய கர்மாக்களை முதலில் கழிக்கின்றான். பிறகு நல்லதை வாரி வாரி கொடுப்பான் என்பது தான் அதற்கு பின்னால் மறைந்திருக்கும் அர்த்தம். முருகா முருகா என்ற நாமத்தை சொல்லி அவன் பாதங்களைப் பற்றிக் கொண்டால் நிச்சயம் ஏமாற்றம் கிடையாது என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -