வேலை கிடைக்க பரிகாரம்

Velai kidaika pariharam in Tamil
- Advertisement -

தற்காலத்தில் என்னதான் லட்ச, லட்சமாக பணம் கட்டி படித்தாலும் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினமானதாக இருக்கின்றது. இதற்கு நாட்டின் பொருளாதாரம், மக்கள் தொகை காரணங்கள் இருந்தாலும் சிலருக்கு அவர்களின் கர்ம வினை காரணமாகவும் வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். அந்த வகையில் தங்களுக்கு மிக விரைவில் வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

நல்ல வேலை கிடைக்க பரிகாரம்

தாங்கள் சிறந்த கல்வி கற்றும், நல்ல திறமை இருந்தும் தங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையே என மனவேதனை படுபவர்கள். இறைவனின் தன்மை கொண்ட இந்த பிரபஞ்சத்திடம் இந்த மந்திரத்தை துதித்து தங்களின் வேலை வாய்ப்பு கோரிக்கையை விடுப்பதால் மிக விரைவிலேயே அவர்களின் விருப்பம் நிறைவேறும்.

- Advertisement -

த்ராயணம் தேவனம்
த்ரிகுணஜநிதானம் தவ் ஷிவே
பவேத் பூஜை பூஜை தவ்
சரணயோர்ய விரசிதா

மேற்சொன்ன மந்திரம் என்பது இந்த பிரபஞ்சத்தையே வழிபடுது போல் ஆகும். அதோடு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் இந்த மந்திரம் மூலம் நாம் வழிபாடு செய்வதாகிறது. தங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தொடர்ந்து இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் ஒரு நாளைக்கு 108 என்கிற எண்ணிக்கையில் துதித்து வந்தால் மிக விரைவிலேயே அவர்கள் வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள் என கூறப்படுகிறது.

- Advertisement -

படிகம் என்பது இறையாற்றலை வெளிப்படுத்தக் கூடிய ஒரு இயற்கையான கல்லாகும். 350 கிராம் அளவிற்கு படிகக் கல்லினால் செய்யப்பட்ட ஸ்ரீ எந்திரம் வாங்கி, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைக்க வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்ரீ எந்திரத்துக்கு சந்தனம், மஞ்சள், குங்கும பொட்டிட்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி, கற்கண்டுகள் நைவேத்தியம் வைத்து ஸ்ரீ சூக்தம் மற்றும் லட்சுமி சூக்தம் ஆகிய மந்திர ஸ்தோத்திரங்களை ஸ்ரீ இயந்திரத்திற்கு முன்பாக நின்றவாறே துதித்து வழிபடுவதால் விரைவிலேயே நல்ல வேலை கிடைக்கும்.

தங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்க வேண்டும் என விரும்புபவர்கள் வியாழக்கிழமைகள் தோறும் குருவார விரதம் இருப்பது நல்லது. ஜோதிட சாஸ்திர அடிப்படையில் குருபகவான் என்பவர் முழு சுப கிரகம் ஆவார். குரு பகவான் அருள் ஒருவருக்கே கிடைக்கும் பட்சத்தில், அவருக்கு வேலை வாய்ப்பு, பொன் பொருள் சேர்க்கை போன்றவை ஏற்படும். எனவே குரு பகவானின் அருளை பெற ஏதாவது ஒரு வளர்பிறை வியாழக்கிழமை தொடங்கி தொடர்ந்து 9 வியாழக்கிழமை குருவார விரதம் இருந்து குரு பகவானை வழிபாடு செய்வதால் நல்ல வேலை கிடைக்கும்.

- Advertisement -

வேலை வாய்ப்பு பெற முயற்சிப்பவர்கள் ஒரு காரட் அளவிற்கு மேலான புஷ்பராக கல்லை தங்கத்தில் பதித்து அந்த மோதிரத்தை அவர்களது இடது கை ஆட்காட்டி விரலில் ஒரு வளர்பிறை வியாழக்கிழமை அன்று காலையில் வருகின்ற குரு ஓரை நேரத்தில் அணிந்து கொண்டால் விரைவிலேயே அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பித்ரு சாப பரிகாரம்

ஏதேனும் ஒரு ஓடும் நதியில் வெல்லம் கொண்டு செய்யப்பட்ட இனிப்புகளையோ அல்லது வெல்ல துண்டுகளையோ அந்த நீரில் கரைத்து வந்தாலும் உங்களின் தோஷங்கள் நீங்கி விரைவிலேயே உங்கள் மனம் விரும்பிய வேலை (Velai kidaika pariharam in Tamil) கிடைக்கும்.

- Advertisement -