வியாழக்கிழமையில் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்தால் பிடித்த வேலை நல்ல சம்பளத்துடன் உங்களைத் தேடி வருவது உறுதி.

job lemon
- Advertisement -

போட்டி நிறைந்த இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நல்ல வேலை கிடைப்பதை குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதிலும் மனதிற்கு பிடித்த மாதிரியான வேலை அமைந்து நிறைவான சம்பளத்துடன் ஒரு வாழ்க்கை அமைவதெல்லாம் பெரிய வரம் என்றே சொல்லலாம். அப்படி நீங்கள் நினைத்த வேலை உங்களுக்கு கிடைக்க ஒரு அற்புதமான எளிய தாந்த்ரீக பரிகாரம் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கட்டாயமாக அந்த வேலைக்காக தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். இது தான் முதல் படி. அதன் பிறகு அந்த வேலை கிடைப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் சரிவர எடுத்து தெய்வத்தின் அனுகிரகத்தையும் முழுமையாக பெற்று அத்துடன் இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வேலை கிடைக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் வியாழக்கிழமை இரவு எட்டு மணிக்கு மேல் செய்ய வேண்டும். இதற்கு புள்ளிகள் இல்லாத நல்ல முழு மஞ்சள் நிறத்தில் உள்ள எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த பழத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு உங்கள் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் ஒரு முறை சுற்றி வந்த பிறகு வீட்டில் வெளியே வந்து உங்களுடைய தலையையும் மூன்று முறை சுற்றிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த பழத்தை உங்கள் மூக்கின் அருகே கொண்டு வந்து மூன்று முறை உங்களுடைய மூச்சை வேகமாக இழுத்து இந்த பழத்தின் மேல் விட வேண்டும். அதன் பிறகு யாரிடமும் எதையும் பேசாமல் நேரடியாக உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் நான்கு சந்துகள் கூடும் இடத்தில் சென்று அங்கு நின்று இந்த பழத்தை உங்கள் கையில் வைத்துக் கொண்டு வேலை கிடைக்க எனக்கு இருக்கும் அனைத்து வகை தடைகளையும் நீக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் உங்களுடைய குலதெய்வம், இஷ்ட தெய்வத்தையும் ஒரு முறை நினைத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு இந்த எலுமிச்சை பழத்தை நான்காக நறுக்கி நான்கு மூலையிலும் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு வந்து விட வேண்டும்.

- Advertisement -

வீட்டிற்குள் நுழையும் முன்பே கை கால் முகம் எல்லாம் அளம்பி தலையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துக் கொண்டு அதன் பிறகு செல்ல வேண்டும். இந்த எளிய தாந்த்ரீகமானது நம்முடைய கிரக சூழ்நிலையால் நமக்கு கிடைக்க வேண்டிய வேலைகள் தாமதமானாலும் கண் திருஷ்டி அல்லது நாம் முன்னேறக் கூடாது என தீய எண்ணத்துடன் செயல்பட்டு இருந்தாலும் அனைத்தையும் முறியடித்து விடும் என்று சொல்லப்படுகிறது. இத்துடன் வியாழன் சனிக்கிழமை இந்த இரண்டு நாளில் ஏதேனும் ஒரு நாளில் ஆஞ்சநேயருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வாரம் ஒரு முறை இந்த 3 பொருட்களை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுங்கள். வீட்டை பிடித்த பீடை நீங்கி, வறுமை நீங்கி, ஐஸ்வர்ய கடாட்சம் அமைதியாக தங்கும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஏழு வாரங்கள் செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமாக முடிய முடிய உங்களுடைய முயற்சிக்கான பலன்கள் கை கூடுவது உங்களுக்கு நன்றாக தெரியும். இதையெல்லாம் செய்து விட்டு வீட்டிலே அமர்ந்து கொண்டிருந்த வேலை உங்களைத் தேடி வராது. உங்களுடைய முயற்சிகள் முழுவதும் வெற்றி அடைவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமே இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -