வாரம் ஒரு முறை இந்த 3 பொருட்களை சேர்த்து சாம்பிராணி தூபம் போடுங்கள். வீட்டை பிடித்த பீடை நீங்கி, வறுமை நீங்கி, ஐஸ்வர்ய கடாட்சம் அமைதியாக தங்கும்.

dhupam
- Advertisement -

வீட்டைப் பார்த்த உடனேயே ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குள் நுழையும் போதே நாம் கண்டுபிடித்து விடலாம். அந்த வீட்டில் இறை சக்தி நிறைந்துள்ளதா இல்லையா என்பதை. நிறைய பேர் புதுசாக வாடகைக்கு குடி போக வீடு தேடுவார்கள். பார்த்த உடனே அந்த வீடு அம்சமாக லட்சுமி கடாட்சம் பொருந்தியதாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். வாடகைக்கு குடி போவதற்கு முன் அந்த வீட்டிற்கு உள்ளே ஜாமான்கள் எதுவும் இருக்காது. வீடு பூட்டு போட்டு தான் கிடக்கும். ஆனால் வீட்டை திறந்து உள்ளே வந்தவுடன் வீடு பார்ப்பதற்கு ஒரு கலை, ஒரு லட்சணத்தோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்.

இப்படிப்பட்ட உணர்வு பெரும்பாலும் எல்லா வீட்டிலும் இருக்காது. சில வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி இல்லாமல், இருள் சூழ்ந்த சூழ்நிலை இருக்கும். பெரும்பாலும் இப்படிப்பட்ட வீடுகளை தேர்ந்தெடுத்து யாரும் குடி போக மாட்டார்கள் ஆனால் சில பேரின் சூழ்நிலை இப்படிப்பட்ட வீட்டில் குடியிருந்து தான் ஆக வேண்டும் என்பது. இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் என்ன செய்வது? அந்த வீட்டில் சில விஷயங்களை செய்யும் போது பாசிட்டிவாக மாற்ற முடியும். அது எப்படி என்பதை பற்றித்தான் இன்றைய பதிவு.

- Advertisement -

இந்தப் புகையை, இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த பொடியை சாம்பிராணி தூபத்தோடு கலந்து போட்டால் உங்களுடைய வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜி வெளியே விரட்டி அடிக்கப்படும். வீட்டில் ஐஸ்வரியம் தங்கும். அந்த மூன்று பொருட்கள் என்னென்ன அதை எப்படி சாம்பிராணி தூபத்தோடு சேர்ப்பது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ உங்களுக்காக.

வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்க சாம்பிராணி தூபம் போடும் முறை:
வெட்டிவேர், நன்னாரி வேர், வெள்ளை குங்கிலியம். இந்த மூன்று பொருட்களும் உங்களுக்கு பொடியாக தேவை. நாட்டு மருந்து கடைகளில் கேட்டாலே இப்போது கிடைக்கின்றது. செவ்வாய்க்கிழமை வெள்ளிக்கிழமை சாம்பிராணி தூபம் போடும்போது அந்த தூபத்தில் இந்த மூன்று பொடியையும் ஒவ்வொரு ஸ்பூன் அளவு கலந்து விடுங்கள். இந்த புகை கொஞ்சம் கொஞ்சமா ஆக வெளியேறும். உங்கள் வீடு முழுவதும் பரவும். வீட்டில் இருப்பவர்களுடைய சுவாசத்திலும் இந்த புகை கலக்கும்.

- Advertisement -

இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வீட்டின் ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ரொம்ப நல்லது. வீட்டில் இருக்கும் பண கஷ்டம் வெளியே விரட்டி அடிக்கப்பட்டு, வீட்டில் இருக்கும் கடன் சுமை வெளியே விரட்டி அடிக்கப்பட்டு, வீட்டிற்குள் மகாலட்சுமியை அழைக்க இந்த தூபம் சிறந்த ஒரு தூபமாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: சம்பளம் பணத்தை சிறிது நேரம் இதில் வைத்த பிறகு எடுத்து பயன்படுத்தினால் ஒரு ரூபாய் கூட நிச்சயமாக வீண்விரயம் ஆகாமல் பணம் பல மடங்கு பெருகும்.

எங்க வீட்டில் ரொம்பவும் நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கிறது என்றால் தினமும் காலையில் 6:00 மணிக்கு எழுந்து வீட்டை சுத்தம் செய்துவிட்டு விளக்கு ஏற்றி இந்த தூபத்தை போட்டு விட்டு பிறகு உங்களுடைய வேலையை தொடங்கி பாருங்கள். அன்றைய நாள் முழுவதும் அமோகமான வெற்றியை பெறுவீர்கள். இந்த எளிமையான ஆன்மீக குறிப்பு உங்களுக்கு நம்பிக்கை தரும்படி இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -