மனதிற்குப் பிடித்த நல்ல வேலை கிடைக்க செய்ய வேண்டிய எளிய ஆன்மீக பரிகாரங்கள் என்னென்ன உங்களுக்கு தெரியுமா?

bairavar-hanuman
- Advertisement -

ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடைய பொறுப்புகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றமடைந்து கொண்டே வரும். படிப்பு முடித்ததும் வேலை கிடைக்கவில்லையே என்கிற புலம்பல் பலரிடமும் இன்று வெகுவாக காணப்படுகிறது. மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமைய என்னென்ன தடைகள் ஆக இருக்கும்? அந்த தடைக்கற்களை உடைத்தெறிய கூடிய எளிய பரிகாரங்கள் தான் என்ன? என்கிற ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

lemon

வேலை கிடைப்பதில் மட்டுமல்ல, எந்த ஒரு தடைகளையும் நம்மிடமிருந்து முதலில் உடைத்து எறிய, எதிர் மறை சக்திகளை விரட்டியடிக்க வேண்டும். இதற்கு ஏழு நாட்கள் தொடர்ந்து புள்ளிகள் இல்லாத ஒரு நல்ல எலுமிச்சை பழத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் தலையை சுற்றி பதிமூன்று முறை திருஷ்டி கழித்துக் கொள்ளுங்கள். பின்னர் நான்கு துண்டுகளாக வெட்டி 4 சந்துகள் இணையும் நாற்சந்தியில் ஒவ்வொரு திசையை நோக்கியும் ஒவ்வொரு துண்டுகளை வீசி எறிந்து விடுங்கள். இதனால் உங்களிடம் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் ஓடிவிடும்.

- Advertisement -

பின்னர் இதே போல கொஞ்சம் கல் உப்பை கையில் வைத்துக் கொண்டு உங்கள் தலையைச் சுற்றி இடது புறத்திலிருந்து வலது புறமாக இருபத்தி நான்கு முறை சுற்றுங்கள். பின்னர் அந்த உப்பை வாசலில் கொண்டு போய் ஓரமாகப் போட்டுவிட்டு உள்ளே வந்து கையை கழுவி விடுங்கள். பின்னர் மீண்டும் கொஞ்சம் கல் உப்பை எடுத்து ஒரு பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை உங்கள் பர்ஸில் எப்போதும் வைத்திருங்கள். வேலை கிடைத்தவுடன் இந்த உப்பை தூக்கி போட்டுவிடலாம்.

poovarasa-ilai

நல்ல வேலையும், மனதிற்குப் பிடித்த அற்புதமான வேலையும் கிடைக்க தொடர்ந்து 43 நாட்கள் வரை அரச மரத்தில் இருக்கும் வேருக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். மரத்தடி விநாயகருக்கு கூட நீங்கள் தண்ணீர் ஊற்றி வழிபடலாம். மேலும் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி சனிக் கிழமைகளில் வழிபட்டு வரவும் நல்ல வேலை அமையும்.

- Advertisement -

பைரவ பகவானுக்கு 9 வாரங்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் மிளகு தீபம் ஏற்றி வழிபடலாம். அதாவது ஒரு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். ஒரு சிறிய அளவிலான கருப்பு துணியில் இருபத்தி ஏழு என்கிற எண்ணிக்கையில் மிளகுகளை வைத்து நன்கு முடிச்சாக கட்டி அந்த எண்ணெயில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். ஒன்பது வாரங்கள் நிறைவடைந்த பின் பைரவருக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ள வேண்டும். இப்படி செய்து வர பைரவர் பகவானுடைய அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்து வேலையில் இருக்கும் தடைகள் நீங்கி, நல்ல வேலை கிடைக்கும்.

el deepam

அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை, மனதிற்குப் பிடித்த நல்ல வேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவுகள் இருக்கும். இது அவரவர்களின் ஜாதக அமைப்பை பொறுத்து அந்தந்த சமயங்களில் நடைபெறும் என்றாலும் அதற்குரிய எளிய பரிகாரங்களை செய்து வருவதன் மூலம் வேலை கிடைப்பதில் இருக்கும் தடைகளும், இடையூறுகளும் நீங்கும். மேலும் காலையில் எழுந்ததும் சூரிய உதயத்திற்கு முன்னரே எழுந்து குளித்து முடித்து விட வேண்டும். பின்னர் சூரிய பகவான் உதிக்கும் சமயத்தில் கிழக்கு நோக்கி ஒரு விளக்கை ஏற்றி வைத்து சூரிய நமஸ்காரம் செய்து கொள்ள வேண்டும். சூரியனிடம் மனதார பிரார்த்தித்து கொண்டால் உங்கள் மனதில் இருக்கும் வேண்டுதல்கள் அப்படியே பலிக்கும்.

- Advertisement -