செல்வம் பெருக குபேர வழிபாடு

kuberar vetrilai
- Advertisement -

நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக வேண்டும் சம்பாதிக்கும் பணம் பல மடங்காக அதிகரிக்க வேண்டும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க வேண்டும் எனில் அங்கு தெய்வங்களின் அனுகிரகம் நிச்சயமாக இருக்க வேண்டும். எவ்வளவு தான் நாம் பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும் வீட்டிற்குள் வரும் பணம் தங்கிப் பெருகினால் தான் நம்மால் வளமுடன் வாழ முடியும்.

அப்படியான செல்வ வளத்தை வாரி வழங்கக் கூடிய ஆற்றல் சில தெய்வங்களுக்கு உண்டு. அதில் முக்கியமானவர் குபேரர். செல்வத்துக்கு அதிபதியான இவர் செல்வங்களை வாரி வழங்கும்தன்மை கொண்டவர். குபேரரை நினைத்து நாம் செய்யும் இந்த எளிய வழிபாடு நம்முடைய வீட்டில் செல்வ வளத்தை பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அதை குறித்தான தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

செல்வம் பெருக குபேர வழிபாடு

பொதுவாகவே குபேரர் வழிபாடு எனில் அதை வியாழக்கிழமை அன்று செய்வோம். இந்த வழிபாடை வியாழக்கிழமை அன்றும் தொடங்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை அன்றும் துவங்கலாம். இந்த வழிபாட்டை வியாழக்கிழமை தூங்குவதாக இருந்தால் மாலையில் துவங்குங்கள் வெள்ளிக்கிழமை எனில் காலை நேரத்தில் துவங்குங்கள்.

இதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் பித்தளை கிண்ணம் அல்லது மண்ணாலான சிறிய தட்டு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளித் தட்டு இருந்தால் அதையும் பயன்படுத்தலாம் சில்வர் தவிர வேறு எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் இந்த வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தில் ஒரு வெற்றிலை பாக்கு ஒரு பாக்கு ஒரு குண்டு மஞ்சள் வைக்க வேண்டும்.

- Advertisement -

இத்துடன் காணிக்கையாக 11, 101, 51 என உங்களால் எவ்வளவு வைக்க முடியுமோ அந்த பணத்தை வையுங்கள். மேலும் இதில் இரண்டு பச்சை கற்பூரங்களை போட்டு அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதை வைக்கும் போது குபேரரை நினைத்து உங்கள் வீட்டில் செல்வ வளம் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

வெற்றிலை, பாக்கு, மஞ்சள் வைத்து இந்த தட்டிற்கு நீங்கள் தினமும் சாம்பிராணி ஊதுபத்தி போன்ற வாசனை திரவியங்களை காட்டி வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு முன் தீபம் ஏற்றி வைத்து விட்டு அமர்ந்து வழிபட்டால் இன்னும் சிறப்பு. இந்த வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கை மட்டும் தினந்தோறும் மாற்றி விடுங்கள். மற்ற பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்கட்டும்.

இதையும் படிக்கலாமே: சித்திரை மாத சுக்கிர வார வழிபாடு

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது வீட்டில் குபேரர் மட்டும் என்று சகல தெய்வங்களின் அனுக்கிரகமும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி செல்வம் பெருக் கெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. குபேரரை நினைத்து எளிமையாக செய்யப்படும் இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நீங்களும் இதை நம்பிக்கையுடன் செய்து வழிபடலாம்.

- Advertisement -