வேலை தொடர்பான வேண்டுதல்கள் நிறைவேற பரிகாரம்.

office job
- Advertisement -

சமுதாயத்தில் ஒருவரின் அந்தஸ்தை உறுதி செய்யக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் வேலை. ஒருவர் என்ன வேலையை செய்கிறார் என்பதை பொறுத்துதான் அவருக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது. அப்படிப்பட்ட வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக இந்த பரிகாரம் சனிபகவானுக்குரிய பரிகாரமும் அதே சமயம் ஆஞ்சநேயருக்குரிய பரிகாரமாகவும் கருதப்படுகிறது. சனிபகவானால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் மிகவும் முக்கியமானது ஒன்றாக இருப்பதுதான் வேலை தொடர்பான பிரச்சனை. அந்த வேலை தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு சனிபகவானுக்கு நாம் செய்யக்கூடிய ஒரு பரிகாரமாக இது திகழ்கிறது. மேலும் அதே சமயம் சனிபகவானால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத அளவிற்கு நம்மை பாதுகாக்கும் தெய்வங்களில் ஒருவராக திகழ்பவர் தான் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கும் இந்த பரிகாரம் உகந்ததாக திகழ்கிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். மேலும் இந்த பரிகாரத்தை காலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள்ளும் செய்து முடிக்க வேண்டும். இந்த பரிகாரத்திற்கு ஒரு கருப்பு நிற துணி தேவைப்படும். மேலும் ஒரு கிலோ நிலக்கரி தேவைப்படும். இஸ்திரி செய்பவர்களிடம் இருந்து கேட்டு நாம் நிலக்கரியை வாங்கிக் கொள்ளலாம். இதோடு சேர்த்து ஒரு கிலோ கருப்பு உளுந்து அதாவது தோல் நீக்கப்படாத உளுந்து தேவைப்படும்.

இந்த இரண்டையும் அதாவது நிலக்கரியையும் கருப்பு உளுந்தையும் கருப்பு நிற துணியில் நன்றாக ஒரு மூட்டை போல கட்டிக் கொள்ள வேண்டும். அந்த துணியை கட்டுவதற்கு கருப்பு நிற கயிறையோ அல்லது கருப்பு நிற துணியை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு இன்னும் ஒருவரின் துணை தேவைப்படும். இப்பொழுது யாருக்கு வேலை தொடர்பாக வேண்டுதல் இருக்கிறதோ அவர்கள் மேற்கு திசை பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை வீட்டில் இருக்கும் வேறு ஒரு நபர் எடுத்துக்கொண்டு படுத்திருப்பவரை இடமிருந்து வலமாக, அதாவது ஆன்டி கிளாக் வைஸ் சுற்ற வேண்டும். இவ்வாறு 21 முறை சுற்றிய பிறகு அந்த மூட்டையை கீழே வைத்து விட வேண்டும். பரிகாரத்தை செய்பவர் எழுந்து முடிந்த அளவுக்கு குளித்து விட வேண்டும்.

முடியாத பட்சத்தில் முகம் கை கால்களை கழுவியப் பிறகு இந்த மூட்டையை எடுத்துக்கொண்டு போய் ஏதாவது ஒரு நீர் நிலையில் போட்டு விட வேண்டும். அவ்வாறு போடுவதற்கு முன்பாக ஆஞ்சநேயரை மனதிற்குள் நினைத்து தன்னுடைய வேலை தொடர்பான வேண்டுதல் என்னவோ அதை மனதார வேண்டிய பிறகே அந்த மூட்டையை தண்ணீரில் போட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்.

இவ்வாறு ஒரே ஒருமுறை மட்டும் செய்தாலே வேலை தொடர்பான எப்பேற்பட்ட வேண்டுதலாக இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -