தம்பதியர்கள் ஒற்றுமையுடன் வாழ பரிகாரம்.

happy couple
- Advertisement -

குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன் மனைவி என்ற இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தால் தான் அந்த குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அதே சமயம் விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் அந்த குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்திச் செல்ல முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் இந்த சூழ்நிலை இல்லாமல் போய்விட்டது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கணவன் மனைவிகள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். சண்டை சச்சரவுகள் எதுவும் ஏற்படாது. குழந்தைகள் நன்றாக வளருவார்கள். வாழ்க்கையில் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்ல முடியும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அந்த பிரச்சனைகளை புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுத்தால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். கருத்து வேறுபாடுகள் காரணத்தினாலோ அல்லது ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத சூழ்நிலையாலோ மேலும் பல தீய சக்திகளாலோ கணவனுக்கும் மனைவிக்கும் இடையே இருக்கும் உறவுகள் விரிசல் அடையும்.

- Advertisement -

அந்த விரிசலை கூடிய விரைவில் அடைத்து விட்டால் அது சரியாகிவிடும். ஆனால் உடன் இருப்பவர்கள் அதை மேலும் மேலும் அதிகரித்து அந்த விரிசலை பிளவாக மாற்றி விடுவார்கள். ஒருவரின் மனதை புரிந்து கொள்ளாமல் மற்றொருவர் விலகி சென்றாலும், பிரிந்து விட்டாலும், விவாகரத்தே ஆகிருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். மேலும் ஒரே வீட்டில் இருந்து கொண்டு மனதளவில் பிரிந்து இருந்து பேசாமல் இருப்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். எப்படிப்பட்ட பிரிவாக இருந்தாலும் அவை அனைத்தையும் ஒன்று சேர்க்கக் கூடிய அற்புதமான பரிகார முறை தான் இது. எந்த வீட்டில் இந்த பரிகாரம் செய்யப்படுகிறது அந்த வீட்டில் இருக்கக்கூடிய கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் நிம்மதியாக வாழ்வார்கள்.

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை அன்று மாலை நேரத்தில் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்திற்கு எலுமிச்சம் பழம், குங்குமம், கிராம்பு இதை மூன்றும் தான் தேவை. ஒரு நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கரும்புள்ளிகள் எதுவும் இருக்கக் கூடாது. அதை சரி பாதியாக நறுக்க வேண்டும். பிறகு அந்த எலுமிச்சம் பழத்தில் குங்குமத்தை முழுவதுமாக தடவ வேண்டும். தடவிய பிறகு ஒவ்வொரு எலுமிச்சம் பழத்திலும் ஆறு கிராம்பு என்ற வீதம் இரண்டிலும் 12 காம்புகளை வட்ட வடிவில் சொருகி வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இந்த எலுமிச்சம் பழத்தை வீட்டின் நிலை வாசலில் மாலை 6:00 மணிக்கு மேல் வைக்க வேண்டும். இவ்வாறு வாரம் வாரம் செய்ய வேண்டும். அடுத்த வாரம் செய்யும் பொழுது பழைய எலுமிச்சம் பழத்தை எடுத்து கால் படாத இடத்தில் வெளியே தூக்கிப் போட்டு விட வேண்டும். இந்த பரிகாரத்தை ஆண் பெண் என்று யார் வேண்டுமானாலும் செய்யலாம். இப்படி செய்து கொண்டு வரும் பொழுது பிரிந்து சென்ற தம்பதிகளாக இருந்தால் அவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள். மன ஒற்றுமையுடனும் நிம்மதியுடனும் சந்தோஷமாக இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: செய்வினையை தடுத்து நிறுத்த பரிகாரம்

இந்த எளிமையான பரிகாரத்தை அனைவரின் இல்லங்களிலும் செய்து கணவனும் மனைவியும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

- Advertisement -