வெளிநாட்டில் வேலை கிடைக்க பரிகாரம்

murugar1
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில், நம்மில் நிறைய பேருக்கு வெளிநாட்டு மோகம் அதிகமாக இருக்கிறது. வெளிநாட்டுக்கு போய் வேலை செய்யணும், வெளிநாட்டில் தங்கி படிக்கணும், கை நிறைய பணம் சம்பாதிக்கணும், என்ற ஆசை. சில பேர் எல்லாம் வெளிநாட்டில் வாழ்பவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

வீட்டில் இருக்கும் அம்மா அப்பா கூட தன் பிள்ளையை வெளிநாட்டில் தான் கட்டிக் கொடுக்க வேண்டும், வெளிநாட்டில் வேலை செய்யும் ஒரு பையன் தான், தான் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட ஆசைகள் எல்லாம் மனிதர்களுக்கு இருப்பது இயல்புதான். இப்படிப்பட்ட ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆன்மீக ரீதியாக சில பரிகாரங்கள் எளிய முறையில் சொல்லப்பட்டுள்ளது. அதை பற்றி தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வெளிநாடு செல்ல செய்ய வேண்டிய விசித்திர பரிகாரம்

இது ஒரு விசித்திரமான பரிகாரம்தான். ஆனால் நம்பிக்கையோடு இதை செய்து வந்தீர்கள் என்றால் நிச்சயமாக உங்கள் கனவு நனவாகும். ஒரு பெண் யானை, தான் போட்ட குட்டியோடு இருக்கக்கூடிய புகைப்படத்தை உங்கள் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக பெண் யானை குட்டியை ஈன்றெடுப்பது போல புகைப்படம் உங்களால் கூகுளில் டவுன்லோட் செய்து எடுக்க முடியும் என்றால், அதை எடுத்து, அந்த புகைப்படத்தை அடிக்கடி பார்த்து வர வெளிநாட்டு வேலை கிடைக்கும்.

வெளிநாட்டில் சென்று மேல் படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டு வரணும் அமைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்படி உங்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அந்த தேவையை நிறைவேற்றிக் கொள்ள மனதில் பிரார்த்தனை வைத்து அடிக்கடி அந்த புகைப்படத்தை பார்க்கணும் அவ்வளவுதான் இது ஒரு விதமான பரிகாரம். இந்த பரிகாரத்தை யார் வெளிநாடு செய்யும் முயற்சி செய்கிறார்களோ அவர்கள் மட்டும் தான் செய்யணும். அவர்களுடைய தாய் தந்தைகள் எல்லாம் இதை செய்யக்கூடாது.

- Advertisement -

இது தவிர முருகர் வழிபாடு இருக்கிறது. அனுமன் வழிபாடு இருக்கிறது. இவர்கள் இரண்டு பேருமே பறந்து செல்வதில் வல்லமை கொண்டவர்கள். முருகர் மயில் ஏறி இந்த உலகத்தை சுற்றி வந்தவர். ஆஞ்சநேயர் கடல் கடந்து பறந்து சென்றவர். இந்த இரண்டு புகைப்படங்களை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.

முருகர் மயில் மீது இருப்பது போல படத்தையும் பூஜை அறையில் வைக்கலாம், அல்லது ஹனுமன் பறந்து செல்வது போலவும் ஒரு படத்தை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யலாம். தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தெய்வத்தின் திருவுருவ படத்திற்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு செல்ல வேண்டிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வேண்டுதலை வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களும் செய்யலாம், அவர்களுடைய தாய் தந்தையரும் செய்யலாம். இந்த பிரார்த்தனையும் உங்களை சீக்கிரம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும். பொதுவாகவே வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், நிறைய படித்தவர்களாகவும், சிறு வயது உடையவர்களாகவும் தான் இருப்பார்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பைரவர் தீப வழிபாடு

அவர்களுக்கு இப்படிப்பட்ட பரிகாரத்தின் மீது நம்பிக்கை இருக்காது. ஆனால் நம்பி இந்த வேண்டுதலை வைப்பவர்களுக்கு நிச்சயம் அந்த இறைவன் அருளாசியை வழங்கி உங்கள் ஆசையை நிறைவேற்றி வைப்பான் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -