கோடீஸ்வர யோகம் உங்களைத் தேடி வர வேண்டுமா? இந்த ஒரு வேரை, உங்கள் வீட்டு வாசலில் கட்டி தொங்க விட்டால் போதுமே!

mooligai-ver
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பலவிதமான பிரச்சனைகளுக்கு ஒரே ஒரு வேர் தீர்வாக கிடைக்கிறது என்றால், அது கட்டாயம் நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய வேர் என்றுதான் சொல்ல வேண்டும். கண் திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்றாலும், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றாலும், தொழில் முடக்கம் நீங்கி நல்ல லாபம் பெற வேண்டும் என்றாலும், பணத்தட்டுப்பாடு நீங்க வேண்டும் என்றாலும், இந்த ஒரு வேர் போதும். நம்ப முடியவில்லையா? மேற்குறிப்பிட்டுள்ள பலவகையான பிரச்சனைகளுக்கு எந்தெந்த முறையில், இந்த வேரை பயன்படுத்தலாம் என்பதை பற்றியும், பல விதமான நன்மைகளை நமக்கு தரக்கூடிய அந்த வேர், எந்த வேர்? என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

velleruku

நாம், இந்த பதிவில் வெள்ளெருக்கன் செடியினுடைய வேர் பற்றிய மகிமைகளை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, இந்த வெள்ளெருக்கன் செடியை சிவபெருமானின் அம்சம் என்று கூறுவார்கள். வெள்ளெருக்கன் பூ வானது, விநாயகருக்கு மிகவும் உகந்தது. இந்த வெள்ளெருக்கன் வேரை பயன்படுத்தி பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க, பரிகாரத்தை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் வெள்ளருக்கன் செடியிலிருந்து வேரை எடுப்பதற்கு முன்பு, மஞ்சள் நீர் ஊற்றி, ‘நம்முடைய வாழ்க்கையின் நலனிற்காக தான் அந்த வேறு எடுக்கப்படுகிறது’ என்ற வேண்டுதலோடு, அந்த வெள்ளருக்கன் வேரை செடியிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். காப்பு கட்டி செடியிலிருந்து வேர் எடுக்க தெரிந்தவர்கள், காப்புகட்டி வேரை எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான குறிப்பு. வியாழன், ஞாயிறு இந்த இரண்டு கிழமைகளில் பூசம் நட்சத்திரம் வரும் தினத்தன்றுதான் எருக்கன் செடியில் இருந்து வேர் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் பரிகாரம் பலிக்கும்.

arugampul-vinayagar

இவ்வாறாக வெள்ளெருக்கன் செடியில் இருந்து எடுத்துவரப்பட்ட வேரை முதலில் மஞ்சள் நீரால் கழுவி, அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி, பூஜை அறையில் விநாயகரின் படத்தின் முன்பு வைக்கவேண்டும். அதன்பின்பு உங்களுக்குத் தெரிந்த வினாயகர் மந்திரம், வினாயகர் துதி எதுவாக இருந்தாலும் 108 முறை உச்சரிக்க வேண்டும். ‘ஓம் விக்ன விநாயகா போற்றி’ ‘ஓம் விக்னேஷ்வரா போற்றி’ ‘ஓம் கணபதியே நமஹ’ இதில் எது வேண்டும் என்றாலும் உச்சரித்துக் கொள்ளலாம். அதன் பின்பு, அந்த வேருக்கு தீப, தூப ஆராதனை காட்டி, தீபம் ஏற்றி வைத்து பூஜையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்போது உங்களது கையில் வெள்ளெருக்ககு வேர் பரிகாரத்திற்காக தயாராக உள்ளது. வீட்டில் நிம்மதியற்ற சூழ்நிலை, பணப்பற்றாக்குறை, தேவையில்லாத சண்டை சச்சரவு, கண்திருஷ்டி கோளாறு, கெட்ட சக்தியின் ஆதிக்கம், இப்படிப்பட்ட பலதரப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் பூஜை செய்து தயாராக வைத்திருக்கும் அந்த வெள்ளெருக்கு வேரை, கருப்புத் துணியில் கட்டி, உங்கள் வீட்டு வாசலில் தொங்க விட வேண்டும். தினம் தோறும் காலை வேளையிலோ, மாலை வேளையிலோ தீபம் ஏற்றும்போது விநாயகரை மனதில் நினைத்து கருப்புத் துணியில் கட்டி வைத்திருக்கும் வேருக்கு ஊதுவத்தி தீபம் காட்டினால் மட்டும் போதும்.

thayathu

அடுத்த பரிகாரம் குழந்தைகளுக்கு கண்திருஷ்டி தாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். பூஜை செய்து வைத்திருக்கும் அந்த வெள்ளருக்ககு வேரை எடுத்து புதிதாக வாங்கப்பட்ட, வெள்ளி தாயத்தில் உள்ளே போட்டு, கருப்பு கயிறில் கோர்த்து, குழந்தைகள் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விட்டோமேயானால் எந்த ஒரு கண் திருஷ்டியும் கெட்ட சக்தியும் குழந்தையை தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்பட வேண்டும் என்றால் 11 வெள்ளெருக்கன் பூவை, விநாயகருக்கு வாங்கிக் கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும். எப்போதெல்லாம் நீங்கள் விநாயகர் கோவிலுக்கு செல்கிறீர்களோ அப்போதெல்லாம் 11 வெள்ளருக்கன் பூவை எடுத்துக்கொண்டு போய், உங்கள் குழந்தையின் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்வது இன்னும் சிறப்பானது.

தொழிலில் அதிகப்படியான நஷ்டம் இருந்தாலும், பணத்தட்டுப்பாடு இருந்தாலும், எப்படிப்பட்ட பண சம்பந்தமான பிரச்சனைகள் தீர வேண்டும் என்றால், கடனை திருப்பித்தர வேண்டும் என்றாலும், உங்களுக்கு கடன்தொகை திரும்பிவர வேண்டும் என்றாலும், இந்த வெள்ளருக்கன் வேரை ஒரு சிகப்பு பட்டு துணியால் கட்டி, அலுவலகத்தில் இருக்கும் கல்லாப்பெட்டியிலோ அல்லது வீட்டில் இருக்கும் பீரோவிலோ வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறாக உங்களுக்கு எந்தப் பிரச்சனை தீர வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்தப் பிரச்சினைக்குத் தீர்வாக இந்த வெள்ளெருக்கு வேரை மேற்குறிப்பிட்ட முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம். விநாயகருக்கு மிகவும் பிடித்தமான வெள்ளெருக்கன் பூ பூக்கும், அந்த செடியின் வேருக்கு மகத்துவம் மிக அதிகம் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

Vellerukkam

இது மட்டுமல்லாமல் சிவபெருமானின் அம்சமாகவே கருதப்படும் இந்த வெள்ளருக்கன் செடியை உங்கள் வீட்டு வாசலில் வைத்து வளர்த்து வந்தால் எந்த ஒரு கெட்ட சக்தியும் வீட்டிற்குள் நுழையாது. ஆனால், வெள்ளெருக்கன் செடி இருக்கும் இடத்தை நாம் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் வாழைமரம் இருந்தால் போதும், 10 பிரச்சனைகள் 10 நொடியில் தீர்ந்துவிடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Vellerukku root. Vellerukku ver. Vellerukku mooligai Tamil. Vellerukku plant uses.

- Advertisement -