வெள்ளெருக்கு பிள்ளையார் வழிபாடு.

vellerukku vinayagar
- Advertisement -

எந்த ஒரு செயலை யார் செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் வெற்றியடைவதற்காக விநாயகரை வழிபடுவார்கள். இதை நாம் புராணங்களிலும் கேட்டிருக்கிறோம். அப்படி விநாயகரை வழிபட்டு நாம் செய்யும் செயல்கள் எந்தவித தடைகளும் இன்றி வெற்றியடையும் என்பது அனுபவபூர்வமாக பலரும் கண்ட உண்மை. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நம் வாழ்வில் நன்மைகள் உண்டாக வெள்ளெருக்கு பிள்ளையாரை எப்படி வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

அனைவரும் விரும்பி வணங்கக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழக்கூடியவர்தான் விநாயகர் பெருமான். நாம் நினைக்கும் நேரத்தில் நினைத்த இடத்தில் நினைத்த பொருளை பிள்ளையாராக பிடித்து வைத்து நம்மால் வழிப்பட முடியும். அப்படி வழிபட்டாலும் நம்முடைய பக்தி கேற்ப பலனை வாரி வழங்குபவர் தான் பிள்ளையார். ஒவ்வொரு பொருளுக்கு ஏற்றவாறு நமக்கு பலன்களை தருபவர் விநாயகப் பெருமான்.

- Advertisement -

குடும்பத்தில் அனைத்து விதமான நன்மைகளையும் தருவதற்கு வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். ஒரு வெள்ளெருக்கு விநாயகரை வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு அந்த விநாயகருக்கு முழுமையாக மஞ்சளை தடவ வேண்டும். பிறகு சந்தனம் குங்குமம் வைத்து ஒரு தாம்பாளத்தில் வைத்து விட வேண்டும். மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். பிறகு பஞ்ச பாத்திரத்தில் இருந்து மூன்று முறை தீர்த்தத்தை எடுத்து விநாயகருக்கு முன்பாக இட வேண்டும்.

அடுத்ததாக விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அருகம்புல்லை வைத்து விநாயகரின் 16 நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெள்ளெருக்கு இலை கிடைத்தால் அந்த இலையை வைத்தும் 16 முறை அர்ச்சனை செய்யலாம். நமக்கு கிடைத்த மலர்களை வைத்து 16 முறை அர்ச்சனை செய்யலாம். எதுவும் கிடைக்கவில்லை என்னும் சூழ்நிலையில் தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் அல்லது ஒரு ரூபாய் நாணயங்கள் இவற்றில் ஏதாவது 16 நாணயங்களை வைத்து விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்கு நெய்வேத்தியமாக கற்கண்டு வைத்து வழிபடலாம். பிறகு மூன்று முறை தலையில் கொட்டிக்கொண்டு மூன்று தோப்புக்கரணம் போட வேண்டும். அர்ச்சனை செய்த மலரையோ அல்லது நாணயத்தையோ விநாயகரின் பிரசாதமாக நினைத்து நம்முடன் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு தினமும் பூஜை செய்து வர வேண்டும்.

தொழில் செய்பவராக இருந்தால் இந்த பூஜையை தொழில் நடக்கும் இடத்தில் செய்ய வேண்டும். வெள்ளெருக்கு என்பது செல்வங்களை வாரி வழங்கும் மூலிகை ஆகும். நோய் நொடிகளை தீர்க்கும் அற்புதமான மூலிகை. மேலும் நன்மைகள் அனைத்தையும் தரக்கூடியதாகவும் இது திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகருக்கு நாம் தொடர்ந்து இந்த முறையில் பூஜை செய்து வந்தோம் என்றால் நம் வாழ்வில் அனைத்து விதமான நன்மைகளும் நமக்கு கிடைக்கும். தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் செய்யும் பொழுது தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி தொழில் லாபகரமாக நடக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வ செழிப்பு பெற பெருமாள் வழிபாடு.

இந்த எளிமையான விநாயகர் வழிபாட்டை நாமும் மேற்கொண்டு நம் வாழ்வில் பல நன்மைகளை பெறுவோம்.

- Advertisement -