செல்வ செழிப்பு பெற பெருமாள் வழிபாடு.

selvam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு செல்வ செழிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. இதில் செல்வம் என்று நாம் பார்க்கும் பொழுது அது பணத்தை மட்டும் குறிக்காமல் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வளங்களையும் குறிக்கிறது. இந்த செல்வ செழிப்பை பெறுவதற்கு பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் என்று நம் அனைவருக்கும் தெரிந்தவர் தான் மகாலட்சுமி தாயார். அந்த மகாலட்சுமி தாயாரை மனதிலே நிலையாக நிறுத்தி வைத்திருப்பவர் தான் பெருமாள். தன்னை வணங்கா விட்டாலும் தன் கணவரை வணங்கினாலேயே அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்கக் கூடியவர் தான் மகாலட்சுமி தாயார். அந்த வகையில் இன்று அனைத்து செல்வங்களையும் பெறுவதற்கு பெருமாளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு நமக்கு பெருமாளின் புகைப்படம் தேவை. இந்த வழிபாட்டை வளர்பிறையில் வரக்கூடிய நல்ல நாளாக பார்த்து செய்ய ஆரம்பிக்க வேண்டும். குறிப்பு அந்த நாள் நம்முடைய ராசி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். அந்த நாளில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் பெருமாள் புகைப்படத்தை துடைத்து அதற்கு சந்தனம் குங்குமம் இட வேண்டும். பூஜையை ஆரம்பிப்பதற்கு முன்பாக முதலில் விநாயகர் பெருமானை வழிபட வேண்டும்.

அடுத்ததாக பெருமாள் புகைப்படத்தை எடுத்து ஒரு மனையில் மா கோலம் போட்டு அதன் மேல் வடக்கு பார்த்தவாறு வைக்க வேண்டும். பிறகு வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். வெள்ளி விளக்கு இல்லாதவர்கள் மண் விளக்கை தேர்வு செய்யலாம். ஒரு கிண்ணத்தில் 108 நாணயங்களை எடுத்து சுத்தமாக கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக காய்ச்சிய பசும்பாலில் ஒரு ஏலக்காய் மற்றும் ஏதாவது ஒரு இனிப்பை கலந்து பெருமாளுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்பொழுது நாம் எடுத்து வைத்திருக்கும் 108 நாணயங்களை ஒன்றொன்றாக எடுத்து குங்குமத்தில் தொட்டு பெருமாளின் பாதங்களில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது நமக்கு தெரிந்த ஏதாவது ஒரு மந்திரத்தை உச்சரித்தவாறு செய்ய வேண்டும். மந்திரங்கள் ஏதும் தெரியாது என்பவர்கள் “ஓம் நமோ நாராயணா” என்னும் மந்திரத்தை மனதார கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 90 நாட்கள் நாம் வழிபாடு செய்து வந்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ செழிப்பில் மேல் ஓங்கி பல முன்னேற்றங்களை அடைய முடியும்.

இதையும் படிக்கலாமே: குழப்பங்கள் நீக்கும் சிவ ரட்சை.

இந்த எளிமையான பெருமாள் வழிபாட்டை நாமும் நம் இல்லங்களில் தொடர்ந்து செய்து அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -