வெள்ளிக்கிழமை இந்த நேரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபாடு செய்தாலே போதும். தீராத உங்கள் குடும்ப கஷ்டம் அனைத்தும் தீரும்.

amman
- Advertisement -

வெள்ளிக்கிழமை அம்மனை குறிப்பிட்ட இந்த நேரத்தில் வழிபாடு செய்து பாருங்கள். உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும். வாழ்க்கையில் அடுத்தடுத்து உங்களுக்கு எல்லாமே ஜெயம். பொதுவாகவே நம்மிடம் ஒரு பழக்கம் உள்ளது. ‘கடவுள் எனக்கு எதுவுமே கொடுக்கவில்லை. எவ்வளவு தான் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டாலும், கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றது. அந்த கடவுள் எனக்கு என்ன தான் செய்தான்.’ என்ற கேள்வியை நாம் ஒரு முறையாவது இறைவனிடம் கேட்டிருப்போம். நீங்களும் கேட்டிருப்பீர்கள். நானும் கேட்டிருப்பேன்.

ஆனால் கடவுள் நமக்கு என்ன குறையை கொடுத்திருக்கின்றான். கை கால் கண் நன்றாக உள்ளது. சாப்பிட சாப்பாடு உள்ளது. மூன்று வேளைக்கும் பசிப்பட்டினி கிடையாது. உடுத்த ஆடை உள்ளது. இருப்பதற்கு இடமும் உள்ளது. அது வாடகை வீடாக இருக்கட்டும். சொந்த வீடாக இருக்கட்டும். நடுவீதியில் நிற்கவில்லையே. எல்லாம் நமக்கு நல்லதாக நடந்திருக்கின்றது.

- Advertisement -

எப்போதுமே நாம் இருக்கும் நிலையிலிருந்து நமக்கு மேலே இருப்பவர்களை பார்க்கக்கூடாது. நமக்கு கீழே இருப்பவர்களை பாருங்கள். நமக்கு ஆண்டவன் குறைவில்லாமல் எல்லா செல்வத்தையும் கொடுத்துள்ளார் என்பது உங்களுக்கே புரியும். கடவுளை நீங்கள் திட்டுபவர்கள் ஆக இருந்தால், அந்த பழக்கத்தை இன்றோடு விட்டுவிடுங்கள். கடவுள் வாழ்க்கையில் நமக்கு எல்லா செல்வங்களையும் நிறை வாகத்தான் கொடுத்திருக்கின்றான் என்ற திருப்தியோடு பதிவிற்குள் செல்வோம்.

Oorai in Tamil
Oorai in Tamil

வெள்ளிக்கிழமை எந்த நேரத்தில் அம்பாளை வழிபாடு செய்தால் நம்முடைய குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்கள் சீக்கிரத்தில் தீரும். வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஓரை வரும். அது எப்போது என்று தெரிந்து கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை வரும் நேரத்தில் நீங்கள் அம்பாள் கோவிலில் இருக்க வேண்டும். அம்பாளை பார்த்து வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை சுக்கிர ஹோரை. வெள்ளிக்கிழமை மதியம் 1 மணியிலிருந்து 2 மணி வரை சுக்கிர ஹோரை. இதையும் தவிரனால் வெள்ளிக்கிழமை இரவு 8 லிருந்து 9 மணி வரை சுக்கிர ஹோரை உள்ளது. இந்த மூன்று மணி நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் சௌகரியமோ அந்த நேரத்தில் நீங்கள் அம்மன் கோவிலில் அம்மனை பார்த்தவாறு, அம்மனை தரிசனம் செய்ய வேண்டும்.

குறிப்பாக காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் அம்பாளை தரிசனம் செய்வது, மிகமிக சிறப்பான நேரமாக சொல்லப்பட்டுள்ளது. வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஹோரையில் அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் அது உடனடியாக பலிக்கும்.

ஒரே ஒரு வாரம் இந்த வழிபாட்டை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. வாரம்தோறும் தவறாமல் வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு அம்மனை நம்பிக்கையோடு வழிபாடு செய்து வந்தால் ஐந்திலிருந்து ஏழு வாரத்திற்குள், உங்களின் வேண்டுதலுக்கான வரத்தை அம்பாள் சீக்கிரமே கொடுத்து விடுவாள். அதன் பின்பு உங்களுடைய குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம் நிறைவாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறைப்படி வழிபாடு செய்து நல்ல பலன்களை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -