வெள்ளிக்கிழமை இந்த தூபத்தை போட்டால் போதும். காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட காணாமல் ஓடி போகும்.

dhupam
- Advertisement -

காற்றோடு காற்றாக கலந்து வரும் கஷ்டங்கள் கூட நம் வீட்டு நிலை வாசலுக்குள் வரக்கூடாது. அந்த அளவிற்கு தெய்வ சக்தி நம் வீட்டில் நிலையாக நிற்க வேண்டும். அதற்கு வாரம்தோறும் வீட்டில் வெள்ளிக்கிழமை இறை வழிப்பாடு செய்ய வேண்டும். தீபம் ஏற்றி வைத்து விட்டு குலதெய்வத்தை நினைத்து, மகாலட்சுமியை நினைத்து வீட்டில் இருக்கும் பெண்கள் கட்டாயமாக சின்ன பூஜையை மேற்கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று கூட தெய்வ வழிபாடு செய்யாத வீட்டில் நிச்சயமாக தெய்வங்கள் தங்காது.

இந்த வெள்ளிக்கிழமை வழிபாட்டோடு சேர்த்து நிச்சயமாக எல்லோர் வீட்டிலும் வாசம் நிறைந்த தூரத்தை போடும் வழக்கம் இருக்கும். அந்த தூபத்தில் இன்னும் சிறப்பாக மாற்ற ஒரு சிறிய குறிப்பு உங்களுக்காக. பின் சொல்லக் கூடிய பொருட்களை போட்டு தூபம் போடும் போது இதிலிருந்து வெளிவரும் வாசனையின் மூலம் வீட்டில் இருக்கும் துர்சக்திகள் வெளியேறிவிடும். வீட்டிற்குள் எந்த ஒரு கெட்டசக்தியும் நுழையாமல், எந்த ஒரு கஷ்டமும் நுழையாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு கைப்பிடி சோம்பு, ஒரு கைப்பிடி சீரகம், ஒரு கைப்பிடி கருப்பு உப்பு, இந்த மூன்று பொருட்களையும் முதலில் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். சோம்பு சீரகத்தை முழுசாசாக கலந்து கொண்டாலும் சரி, அல்லது இடுக்கியில் போட்டு லேசாக ஒன்றும் இரண்டுமாக நசுக்கி வைத்துக் கொண்டாலும் சரி. அதை நம்முடைய விருப்பம் தான்.

நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் வாசனை நிறைந்த சாம்பிராணி பொடி முதலில் போட வேண்டும். அதன் பின்பு வெள்ளைக் குங்கிலியம் சிறிதளவு போடவேண்டும். நன்றாக புகை வர தொடங்கும் அப்போது. நாம் தயார் செய்து வைத்திருக்கும் சோம்பு சீரகம் கருப்பு உப்பு கலவையை அதன் மேலே தூவி இந்த வாசத்தை வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். (நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உப்பு என்று கேட்டால் கொடுப்பார்கள்.)

- Advertisement -

வீட்டிற்கு உள்ளே இருந்து வெளியே இந்த புகையை காட்டிக் கொண்டு செல்ல வேண்டும். வெளியிலிருந்து தூபத்தை போட்டுக்கொண்டு உள்ளே எடுத்து வரவேண்டாம். இந்த புகையை வீடு முழுவதும் காண்பிதீது இறுதியாக அப்படியே நிலை வாசலுக்கு வெளியில் வைத்து விடுங்கள். வெளிப்பக்கம் முழுவதும் இந்த புகை பரவி இருக்கட்டும். குறிப்பாக நிலை வாசலில் தங்கியிருக்கும் அனைத்து கெட்ட சக்திகளும் வெளியேற இந்த தூபத்தின் புகை வழிவகுக்கும்.

வாரத்தில் ஒரே ஒரு நாள் வெள்ளிக்கிழமை மட்டும் இந்த தூரத்தை போட்டால் போதும். இந்த வாசம் ஒரு வாரம் முழுவதும் உங்கள் வீட்டில் நிலைத்து தங்கும். அடுத்த வாரம் வியாழக்கிழமை வீட்டை சுத்தம் செய்துவிட்டு மீண்டும் வெள்ளிக்கிழமை இந்த தூபத்தை போட்டுவிடுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். காற்றின் மூலமாக கூட கெடுதல் உங்கள் வீட்டிற்கு உள்ளே ஊடுருவ வாய்ப்பு இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -