வாழ்க்கையில் ஒரு முறை இந்த 1 பொருளை யாருக்கேனும் தானமாக கொடுத்து விடுங்கள் போதும். வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பண கஷ்டம் வராது.

dhanam
- Advertisement -

வாழ்க்கையில் நமக்கான அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் ஐஸ்வர்யத்தையும் அள்ளி தரக்கூடிய ஒரு பொருளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வீட்டில் தொடர்ந்து பணக் கஷ்டமும் மன கஷ்டமும் வந்துகொண்டே இருக்கின்றது. வீட்டில் இருப்பவர்களுக்கு நல்லது என்ற ஒன்று நடக்குமா என்பது சந்தேகம் தான். தினம் தினம் பிரச்சினைகள், தினம் தினம் சண்டை சச்சரவுகள். வீட்டில் ஐஸ்வர்ய கடாட்சமும் உள்ளதா என்பது கூட சந்தேகம்தான். நம்மை பிடித்த தரித்திரம் நீங்க ஐஸ்வர்யா கடாட்சம் நம் வீட்டில் நிலைத்திருக்க நாம் செய்ய வேண்டியது என்ன? மிக மிக சுலபமான ஆன்மீக ரீதியான பரிகாரங்களை பார்த்துவிடுவோம் வாருங்கள்.

யோகத்திற்கும் அதிர்ஷ்டத்திற்கு அதிபதி என்று சொல்லப்படுபவர் சுக்கிரன். சுக்கிர பகவானுக்கு உரிய பொருள் என்றால் அது வெள்ளி. இன்றைய சூழ்நிலையில் தங்கத்திற்கு நிறைய பேர் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கின்றனர். வெள்ளி என்பது இரண்டாம் பட்சமாக மாறி விட்டது. ஆனால் தங்கத்தை விட நம் வீட்டிற்கு ஐசுவரியத்தை கொடுக்கக் கூடிய சக்தி வெள்ளி உலோகத்தில் உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.

- Advertisement -

தங்கம் என்பது நம்முடைய தகுதியை நிர்ணயிப்பது. ஆடம்பரத்துக்காக வாங்கக்கூடிய பொருள் தான் தங்கம். இதற்காக தங்கத்திற்கு ஐஸ்வர்ய கடாட்சமும் இல்லை என்று சொல்லவில்லை. தங்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தங்கத்தை விட, தங்கம் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை விட, வெள்ளியால் நம்மால் பல மடங்கு அதிகமான அதிர்ஷ்டத்தையும் ஐஸ்வர்யத்தையும் யோகத்தையும் பெற முடியும்.

kolusu

உங்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர, நீங்கள் அதிர்ஷ்டமானவர்களாக மாற நீங்கள் செய்ய வேண்டிய தானம் வெள்ளிக்கொலுசு. உங்களுடைய சக்திக்கு ஏற்ப ஒரு வெள்ளிக் கொலுசை வாங்கி, ஏழைப் பெண்ணுக்கு தானமாக கொடுங்கள். வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட கூடிய குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு வெள்ளிக் கொலுசை தானமாக கொடுத்தால், மிகவும் நல்லது.

- Advertisement -

ஏழையாக இருக்கக்கூடிய கஷ்டப்படக் கூடிய குடும்பத்தில் இருக்கும் பெண்ணுக்கு திருமண சமயத்தின் போது வெள்ளிக் கொலுசும் மெட்டியும் தானமாக வாங்கிக் கொடுத்தால் அந்த புண்ணியம் உங்கள் பரம்பரையை சேரும். முடிந்தால் ஒரு முறையேனும் நீங்கள் இந்த தானத்தை செய்து பலனடையுங்கள்.

metti

நீங்கள் வெள்ளிப் பொருட்களை எந்த அளவிற்கு வாங்கி தானமாக கொடுக்கிறீர்களா, அந்த அளவிற்கு வாழ்க்கையில் சந்தோஷம் வரும். சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை பெற வெள்ளிப் பொருட்களை குறிப்பாக வெள்ளிக் கொலுசை பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

velli vilaku

வீட்டில் இருக்கும் பெண்கள் மகா லட்சுமி கடாட்சத்துடன் காலில் சலங்கை கொண்ட வெள்ளி கொலுசு அணிந்து கொண்டு இருந்தால், அந்த வெள்ளிக் கொலுசின் சத்தத்திற்கு வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகும். தங்க நகை வியாபாரம் செய்யும் வடநாட்டவர்களிடம் எவ்வளவு தான் தங்கம் இருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய கைகளில் கழுத்தில் இடுப்பில் வெள்ளியால் செய்த நகைகளை அணிந்து இருப்பார்கள். காரணம் அவர்களுக்குத் தெரியும் வெள்ளிதான் ஐஸ்வர்யத்தை கொடுக்கும் என்ற ரகசியம்.

silver-savi-kothu

நீங்களும் வெள்ளியில் உங்களால் முடிந்த அளவு நகைகளை வாங்கி வீட்டில் சேருங்கள். உங்களால் முடிந்த வெள்ளிப் பொருட்களை உங்கள் சக்திக்கு தகுந்தவாறு தானம் கொடுங்கள். உங்கள் வீட்டில் ஐஸ்வர்யமும் அதிர்ஷ்டமும் தானாக பெருகுவதை உங்களாலேயே உணர முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -