பிறரின் தீய எண்ணத்தால் ஏற்படும் பண விரையத்தை தடுக்கும் வெள்ளி மோதிர பரிகாரம்.

- Advertisement -

நாம் நல்ல முறையில் பாடுபட்டு சம்பாதித்த பணம் நம் கையில் தங்காமல் வீண் விரயம் ஆகிக் கொண்டே இருந்தால் எப்படி முன்னேற முடியும். பணம் செலவழியாமல் கையில் தங்கியினாலே போதும் நம் பிரச்சனைகளை ஓரளவிற்கு சமாளித்து கொள்ளலாம். ஆனால் எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காமல் செலவு ஆவது ஒரு புறம் இருந்தாலும், சுற்றி இருப்பவர்களின் இந்த பொறாமையும், போச்சரிப்பும் பாதி நம் முன்னேற்றத்திற்கு தடையாகி விடும். நாம் எப்படி எல்லாம் பாடுப்பட்டு பணத்தை சேர்க்கிறோம் என்று நமக்குத் தான் தெரியும். ஆனால் அடுத்தவர் பார்வைக்கு இவர்களுக்கு என்ன நன்றாக சம்பாதிக்கிறார்கள் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடுவார்கள். அவ்வளவு தான் அடுத்தடுத்து நமக்கு செலவுகள் வந்து கொண்டே இப்படிப்பட்ட பார்வையால் நமக்கு ஏற்படும் வீண் விரையங்களை தடுக்கவும், நல்ல முறையில் சம்பாதிக்கும் பணம் பண்ண மடங்கு பெருகவும் தான் இந்த வெள்ளி மோதிர பரிகாரம். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

இந்த பரிகாரம் செய்வதற்கு நமக்கு வெள்ளி மோதிரம், பச்சை கற்பூரம், வெற்றிலை ஒரு சிறிய கண்ணாடி கிண்ணம் இவை மட்டும் தான் தேவை. நீங்கள் வாங்கும் வெள்ளி மோதிரம் உங்கள் ஆள்காட்டி விரலுக்கு பொருந்தும் படியாக இருக்க வேண்டும் மற்ற விரல்களில் எல்லாம் போடக் கூடாது.

- Advertisement -

இந்த பரிகாரம் வியாழன் அன்று இரவு சாப்பிடும் முன்பு நாம் செய்ய வேண்டும். அதாவது வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள் இரவே இந்த பரிகாரத்தை நாம் செய்து முடித்து விட வேண்டும். இந்த பரிகாரம் செய்ய முதலில் ஒரு சின்ன கண்ணாடி கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வாங்கி வந்த வெள்ளி மோதிரம், ஒரு துண்டு பச்சைக் கற்பூரம், அதன் பிறகு ஒரு வெற்றிலை, இந்த வெற்றிலையை காம்பு நீக்கி இந்த கிண்ணத்தின் மேல் மூடி விட வேண்டும். வெற்றிலையின் காம்பு பக்கம் பூஜை அறையில் வலது பக்கமாக சுவாமி படத்தை பார்த்த படி வைத்து விடுங்கள்.

இது பொருட்கள் வியாழன் இரவு முழுவதும் உங்கள் பூஜை அறையில் அப்படியே இருக்கட்டும். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்து நீங்கள் வேலைக்கு செல்லும் முன் உங்கள் குல தெய்வத்தை வணங்கி விட்டு பூஜை அறையில் உள்ள இந்த மோதிரத்தை ஆள்கட்டி விரலில் அணிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை மோதிரம் உங்கள் வீட்டில் சம்பாதிப்பவர் யாரோ அவர் விரலில் இந்த மோதிரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை இருவருமே சம்பாதித்தாலும், இருவரும் போட் டு கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கழுத்தை நெரிக்கும் கடன் கூட, கைநழுவி செல்ல அனுமனுக்கு இந்த ஒரு மாலையை கட்டி போடுங்கள் போதும்.

இந்த பரிகாரத்தை செய்ய தொடங்கிய சில நாட்களிலே உங்களுக்கு நல்ல மாற்றங்கள் தெரிய வரும். நல்முறையில் சம்பாதித்து வீண் விரையம் ஆகாமல் உங்கள் பணத்தை பல மடங்கு பெருகி நல்லதொரு வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -