வெள்ளிக்கிழமை பெண்களின் கையால் இந்த கோலம் போட்டால், வீட்டு கஷ்டம் சொல்லாமல் கொள்ளாமல் ஓடியே போய்விடும்.

kolam5
- Advertisement -

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரிய தினம். சுக்கிர பகவானுக்கு உரிய தினம். வீடு மங்களகரமாக இருக்க வேண்டிய தினம். நம் வீட்டில் இருக்கும் தீராத கஷ்டம் தீர இந்த வெள்ளிக்கிழமை நாளில் எந்த கோலம் போட்டு, எப்படி வழிபாடு செய்து வேண்டுதல் வைக்க வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த கஷ்டத்திற்கு தான் இந்த வழிபாடு என்று சொல்ல முடியாது. உங்கள் வாழ்வில் எந்த கஷ்டம் இருந்தாலும் அதை சரியாக்க இந்த ஆன்மீகம் வழிபாட்டை செய்யலாம். வாங்க அந்த வழிபாடு என்ன என்று நாமும் தெரிந்து கொள்வோம்.

வெள்ளிக்கிழமை ஸ்வஸ்திக் சின்ன கோலம் வழிபாடு:
வெள்ளிக்கிழமை என்று சொன்னதுமே நம் நினைவிற்கு வருவது வாசலில் போடப்படும் அழகான கோலம். சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து வீட்டில் இருக்கும் பெண்கள் வாசலை கூட்டி தண்ணீர் தெளித்து மங்களகரமாக உங்கள் விருப்பம் படி ஒரு அரிசி  மாக்கோலம் போட்டு அந்தக் கோலத்துக்கு நடுவில் மஞ்சள் குங்குமத்தை வைத்து விடுங்கள். நிலை வாசலில் மறக்காமல் இரண்டு பூக்களை இரண்டு பக்கமும் வைத்து, நிலை வாசலை வணங்கி வீட்டிற்குள் மகாலட்சுமியை அழைத்து வருவோம்.

- Advertisement -

பிறகு காலை 6:00 மணியிலிருந்து 7.00 மணிக்குள்ளாகவே இந்த பூஜையை செய்து முடித்து விட வேண்டும். அதற்கு நீங்கள் முந்தைய நாள் இரவே பூஜை அறையை சுத்தம் செய்து, பூஜை பாத்திரங்களை எல்லாம் தேய்த்து தயார் செய்து வைத்துவிட வேண்டும். காலை எழுந்து சுவாமி படங்களுக்கு புதுசாக பூக்களை போட்டு நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்து சாக்பீசிலோ அரிசி மாவில் சரியான ஸ்வஸ்திக் சின்ன கோலத்தை பூஜை அறையில் போட்டு அதற்கு நடுவே ஒரு பூ வையுங்கள்.

இந்த ஸ்வஸ்திக் சின்னம் கோலத்துக்கு பக்கத்தில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வையுங்கள். குலதெய்வத்தை வேண்டுங்கள். உங்கள் கஷ்டத்தை சொல்லுங்கள். ஏதாவது ஒரு கஷ்டமாக இருக்கட்டும். ஒட்டுமொத்த கஷ்டத்தை சொல்லி கடவுளை குழப்ப வேண்டாம். உங்களையும் நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். அந்த ஒரு கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இந்த வழிபாட்டை விடாமல் செய்யுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாட்டை 5 வெள்ளிக்கிழமை அல்லது 7 வெள்ளிக்கிழமை செய்யும்போதே ஒரு நல்ல மாற்றம் உங்கள் வாழ்க்கையில் தெரிய தொடங்கும். பிறகு நீங்களே நினைத்தாலும் இந்த வழிபாட்டை நிறுத்த மாட்டீங்க. குடும்பத்திற்கு அவ்வளவு மனநிறைவு கொடுக்கக் கூடிய வழிபாடு தான் இது. அவ்வளவு சந்தோஷத்தை கொடுக்கக்கூடிய வழிபாடு இது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமையில் இதை மட்டும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் எரித்தால் போதும். இதுவரை வராத பணம் நகை எல்லாமே எப்படி வந்தென்று தெரியாமல் தானாகவே உங்களை தேடி வரும்.

இந்த வழிபாட்டை செய்ய செய்ய உங்கள் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள் ஒன்றாக புறவாசல் வழியாக சென்று விடும். வீட்டிற்குள் சந்தோஷம் நுழையும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சின்ன எளிமையான பூஜையை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்துடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -