வெள்ளிக்கிழமைகளில் இதையெல்லாம் செய்தாலே போதும். உங்கள் வீட்டில் எப்போதும் பணம் இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. வீடு முழுக்க எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

lakshmi-cash
- Advertisement -

பொதுவாகவே மனிதர்களாகிய நாம் வருமானத்தை எப்படியாவது அதிகரிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதிலும் தடையில்லாமல் பண வரவு இருக்க வேண்டும் என்று யோசிப்பது மனித இயல்பு. ஆனால் ஏதோ ஒரு வகையில் பண வரவு என்பது அவ்வப்போது தடைபட்டு கொண்டுதான் இருக்கும் . இது போன்ற பண பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு கை நிறைய சம்பாதிக்க மகாலட்சுமியின் கடாட்சம் நமக்கு மிக முக்கியம். அதேபோல் குபேரனின் அருளும் இருக்க வேண்டும். இவர்கள் இருவரின் அருளையும் ஒரு சேரப்பெற்று செல்வ செழிப்போடு வாழ நமது வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யக்கூடிய சில அற்புதமான பரிகாரங்களை இந்த ஆன்மீக பதிவில் பார்ப்போம்.

இன்றைய சூழலில் பணத்தாசை என்பது ஏழைகளுக்கும் இருக்கிறது பணக்காரர்களுக்கும் இருக்கிறது. பணக்காரர்கள் ஒரு கோடியை எப்படி பல குடிகளாக மாற்றுவது என்று யோசிக்கிறார்கள். ஏழைகள் ஆயிரம் ரூபாயை எப்படி பத்தாயிரம் ரூபாயாக மாற்றுவது என்று யோசிக்கிறார்கள் ஆக பணத்தாசை என்பது மனிதர்களாகிய நம் எல்லோரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

- Advertisement -

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று கிராமங்களில் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் குபேரன் மட்டும் ஒருவரது வீட்டில் அமர்ந்து விட்டால் செல்வமானது தானாக வந்து சேரும். அதே போல் லட்சுமி கடாட்சமும் இருக்கும். இதற்க்கு வெள்ளிக்கிழமைகளில் சிலவற்றை செய்தாலே போதும்.

மகாலட்சுமியின் அருளை பெறுவது எப்படி:
பொதுவாகவே சுமங்கலி பெண்களின் மனம் குளிர்ந்தால் மகாலட்சுமியின் அருள் வீடு தேடி வரும். ஆகையால் வெள்ளிக்கிழமையில் நமது வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு முதலில் அருந்துவதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டருகில் காய்கறி விற்பவர்களோ, பழம் இருப்பவர்களோ பெண்களாக இருந்து அவர்கள் வரும் பட்சத்தில் கூட நீங்கள் இதை தொடர்ந்து செய்யலாம். அவர்கள் அருந்தும் நீரால் அவர்கள் வயிறு எப்படி குளிர்கிறதோ அதே போல மகாலட்சுமியின் மனம் குளிரும்.

- Advertisement -

அதேபோல் வெள்ளிக்கிழமைகளில் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பதன் மூலமும் மகாலட்சுமியின் அருளை பெற முடியும். அதேபோல வெள்ளிக்கிழமையில் மொச்சை கொட்டையை வேக வைத்து அதை சுண்டலாக செய்து வீட்டில் இருக்கும் பூஜை அறையில் அதை மகாலட்சுமிக்கு நிவேதியமாக படைத்து வீட்டில் உள்ள அனைவரும் அதை உண்ண வேண்டும். இதன் மூலமும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

பெருமாளின் இருதயத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமியை குளிர்விக்க வீட்டில் தினமும் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ரநாமம் போன்றவற்றை ஒலிக்க செய்யலாம். அதே போல் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமையில் மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிப்பதன் மூலமும் மகாலட்சுமியின் கடாட்சத்தை நாம் பெற முடியும்.

- Advertisement -

சிவனுக்குரிய வில்வ மரத்திற்கு வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர ஓரையில் சிறிதளவு பால் ஊற்றி வழிபட்டு வர செல்வ வளம் பெருகும். அதே போல் வெள்ளிக்கிழமையில் குளிக்கின்ற போது மகாலட்சுமியின் அம்சமான பசுவின் கோமியத்தை நாம் குளிக்கும் நீரில் சிறிது அளவு கலந்து குளிப்பதன் மூலமும் மகாலட்சுமியின் அருளை பெற முடியும் என்று கூறுகிறார்கள் ஆன்றோர்கள்.

வீட்டில் ஊறுகாய் நிச்சயம் இருக்க வேண்டும் என்றும் முன்னோர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். இதற்கு முக்கிய காரணம் குபேரனுக்கு ஊறுகாய் என்பது மிக மிகப் பிடித்தமான ஒன்று ஆகையால் வீட்டில் உள்ள ஊறுகாய் ஜாடியில் எப்போதும் ஊறுகாய் இருப்பது போல் பார்த்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் எளிதில் குபேரன் அருளை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: உங்க பீரோவில் இதை மட்டும் தெரியாம கூட வச்சிராதீங்க. அப்புறம் பணம் சேரவே சேராது. பணமானது வீண் விரயமாகி கடன் சுமை அதிகரிக்க இதுவே காரணமாகி விடும்.

இவை எல்லாவற்றையும் விட மேலாக வருடா வருடம் நிச்சயம் குலதெய்வ கோயிலுக்கு சென்று குலதெய்வத்திற்கு அவரவர்கள் முறைப்படி முறையாக பொங்கலிட்டு வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் நாம் எந்த பரிகாரம் செய்தும் எந்த புண்ணியமும் இல்லை என்பது ஐதீகம். ஆகையால் வெறும் பரிகாரத்தை மட்டும் செய்துவிட்டு குலதெய்வ பூஜை செய்ய வில்லை என்றால் எதுவும் நடக்காது என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

- Advertisement -