வற்றாத பண வரவிற்கு இந்தக் கிழமையில் இந்த நிற ஆடை உடுத்த வேண்டுமா? அள்ள அள்ள குறையாத பணத்தை ஈர்க்கும் இந்நிறத்தின் ரகசியம் என்ன?

- Advertisement -

வற்றாத பண வரவிற்கு எப்பொழுதும் இந்தக் கிழமையில் இந்த மாதிரியான நிறத்தை உடுத்திக் கொள்வது நல்லது என்று ஆன்மீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிழமையிலும் அந்த கிரகத்திற்கு உரிய ஆடைகளை உடுத்துவது என்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஒரு அற்புதமான விஷயம் ஆகும். அதனால் கிரக தோஷங்கள் போக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அது போல வற்றாத செல்வத்தை ஈர்க்க, அள்ள அள்ள குறையாத பணவரவை பெற எந்த கிழமையில்? எந்த நிற ஆடையை உடுத்த வேண்டும்? என்கிற ரகசியத்தை இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய அதிர்ஷ்ட நிறங்கள் உண்டு. அந்த நிறங்களை அந்தந்த நாட்களில் நாம் அணிந்து கொள்வதால் நமக்கு கிரக தோஷங்கள் நீங்கி அன்றைய நாள் வரக்கூடிய பிரச்சனைகளிலிருந்து தவிர்த்து, நல்ல பலன்களை அனுபவிக்க கூடும் என்பது நம்பிக்கை. ஒரு சிலருக்கு கருப்பு நிற உடை அணிந்தால் ஆகவே ஆகாது. அது அவர்களுடைய குடும்பத்திற்கே ஆகாது என்றெல்லாம் கூறுவது உண்டு.

- Advertisement -

கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டால் அன்றைய நாளில் ஏதாவது ஒரு வகையில் அடிபடுவது அல்லது ரத்தம் சிந்துவது ஏற்படுவது உண்டு. இது அவரவர்களின் குடும்ப வழக்கப்படி கடைபிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும். அது போல புதன் பகவானுக்கு உரிய பச்சை நிற உடையை புதன் கிழமையில் அணிந்து கொண்டால் புத்தி காரகன் நமக்கு புத்தி கூர்மையை அதிகரிக்க செய்வார். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவான ஒரு சிந்தனை பிறக்கும் என்கிற நம்பிக்கை உண்டு. அது போல வெள்ளிக்கிழமையில் இந்த நிற ஆடையை அணிந்து கொண்டால் அள்ள அள்ள குறையாமல் பணம் என்பது சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது சூட்சுமமான பரிகாரம் ஆகும்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த கிழமையாக இருக்கிறது. மற்ற கிழமைகளை காட்டிலும் வெள்ளிக்கிழமையில் கண்டிப்பாக வீட்டில் தீபம் எரிய விட வேண்டும். பூஜை அறை ஒளிர வேண்டும் என்பது நியதி! எனவே அன்றைய நாளில் பூஜை அறையில் கட்டாயம் ஒரு விளக்காவது ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அதே போல அன்றைய நாளில் நீங்கள் எந்த உடை அணிவதாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குங்கும நிறத்தில் உடை அணிந்து பாருங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டம் மழை பொழியும்.

- Advertisement -

மங்களகரமான இந்த சிவப்பு அல்லது குங்கும நிற உடைகள் வெள்ளிக்கிழமையில் நாம் அணிய நம்மிடம் இருக்கும் தரித்திரங்கள் அனைத்தும் விலகி, நாம் அதிர்ஷ்டக் காரர்களாக, ராசிக்காரர்களாக மாறக்கூடும் என்கிறது ஜோதிடம், எனவே வெள்ளிக்கிழமையில் இனி சிகப்பு அல்லது குங்கும நிற அடர்த்தியான உடைகளை அணிந்து மகாலட்சுமியை வணங்கி பாருங்கள், உங்களுக்கும் அதிர்ஷ்ட காற்று வீசும்.

எந்த வேலையை எடுத்தாலும் நெற்றியில் குங்குமம் இட்டுக் கொண்டு செல்லுங்கள். அது போல குங்கும நிற கைக்குட்டை, குங்கும நிற பொருட்கள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம். பெண்கள் வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு 108 முறை குங்கும அர்ச்சனை செய்து வழிபட குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். சண்டை, சச்சரவுகள் ஏதுமின்றி மகிழ்ச்சி அதிகரிக்கும். நம்பிக்கையுடன் கடைபிடிச்சு பாருங்க நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

- Advertisement -