சிரமமே இல்லாமல் முடியை சீக்கிரம் வளர்த்து விடலாம். இந்த சிவப்பு எண்ணெயை வாரம் ஒரு முறை தலையில் தடவினாலே போதும்.

hair9
- Advertisement -

ஹேர் பேக் போடும் சிரமம் இருக்கக் கூடாது. கஷ்டப்பட்டு தலை முடி வளர்ச்சிக்காக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. அதிகம் செலவும் ஆகக்கூடாது. அதேசமயம் முடியும் வளர வேண்டும். தலையில் பேன் பொடுகு தொல்லையும் இருக்கக் கூடாது. இப்படிப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க இன்று ஒரு குறிப்பை பார்க்க போகின்றோம். இயற்கையான முறையில் தயாரிக்கப் போகும் எண்ணெய் தான் இது. ஆனால் இந்த எண்ணெயை வாரம் ஒரு முறை பயன்படுத்தி வந்தால் கூட மூன்றே மாதத்தில் முடி வளர்ச்சியில் நம்ப முடியாத ஒரு மாற்றம் தெரியும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த குறிப்பு என்ன என்பதை பார்த்து விடுவோம்.

இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் வேம்பாளம் பட்டை. வேம்பாளம் பட்டை 10 லிருந்து 15 கிராம், விளக்கு எண்ணெய் 100 ml, தேங்காய் எண்ணெய் 100 ml, பச்சைக் கற்பூரத்தூள் 1/2 ஸ்பூன், இந்த பொருட்கள் மட்டும் போதும். மிகக் குறைந்த அளவில் முதலில் இந்த எண்ணெயை தயார் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு சிறிய பவுலில் வேம்பாளம் பட்டையை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்துப் போட்டு அதில் பச்சை கற்பூரத்தை போட்டு, எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயையும், விளக்கு எண்ணெயையும் ஒன்றாக ஊற்றி, கலந்து ஒரு மூடி போட்டு ஒரு நாள் அப்படியே ஊற வைத்து விடுங்கள். மறுநாள் எடுத்துப் பார்த்தால் அந்த எண்ணெய் நன்றாக சிவப்பு நிறமாக மாறியிருக்கும். அடுத்து இரண்டு நாள் இந்த எண்ணெயை நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.

உங்களுடைய வீட்டில் வெயில் இல்லை என்றால் டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்யலாம். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட்டு அந்த தண்ணீருக்கு மேலே இந்த எண்ணெயை ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து, பத்து நிமிடம் போல சூடு செய்து அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். எண்ணெய் நன்றாக சூடானால் மட்டும் போதும். பிறகு இந்த எண்ணெயை நன்றாக ஆறவிட்டு வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சிவப்பு நிறத்தில் நன்றாக திக்காக இருக்கும் இந்த எண்ணெயை தினம் தோறும் பயன்படுத்த முடியாது. அது சிரமம். விளக்கெண்ணெய் சேர்த்து இருப்பதால் தலை ரொம்பவும் பிசுபிசுவென மாறிவிடும். வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ விடுமுறை நாட்கள் இருக்கும்போது இந்த எண்ணெயை ஒரு காட்டன் பஞ்சில் தொட்டு ஸ்கேல்பில் நன்றாக படும்படி வைத்து மசாஜ் செய்ய வேண்டும். உங்களுடைய கையை கொண்டு தலையில் எண்ணெயை அப்ளை செய்து அப்படியே மசாஜ் செய்து கொண்டாலும் சரிதான். இந்த எண்ணெய் ஸ்கால்ப்பில் நன்றாக பட வேண்டும். 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் இந்த எண்ணெயை தலையில் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். வேலை முடிந்தது. (ஸ்கூலுக்குப் போகும் பெண் பிள்ளைகளுடைய தலையில் நிறைய ஈரும் பேன் சேர்ந்து இருக்கும். அவர்களுக்கு இந்த எண்ணெயை போட்டால் கூட பேன் தொல்லையிலிருந்து ஒரு சில நாட்களிலேயே விடுதலை கிடைக்கும்.)

மூன்று மாதம் தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வர வேண்டும். வாரம் ஒரு முறை பயன்படுத்த வேண்டும். உங்களுக்கு ரொம்பவும் அலர்ஜி இருக்கிறது. புதியதாக எதை சேர்த்துக் கொண்டாலும் உடம்புக்கு செட்டாகாது என்றால் இந்த எண்ணெயை லேசாக பேட்ச் டெஸ்ட் எடுத்துக்கோங்க. நெற்றியின் ஓரமாகவோ அல்லது கழுத்துப் பகுதியின் கீழ் பக்கமாகவோ தடவிப் பாருங்கள். அரிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றால் மட்டும் இதை தலைக்கு தடவிக் கொள்ளலாம்.

இந்த எண்ணெயில் நாம் பச்சை கற்பூரம் சேர்த்திருக்கின்றோம். பச்சை கற்பூரம் உங்கள் தலையில் வரும் பொடுகை, இன்ஃபெக்ஷனை தடுப்பதற்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு பொடுகு இல்லை. பேன் தொல்லை இல்லை என்றால் இந்த பச்சை கற்பூரத்தை நீங்கள் இந்த குறிப்பில் சேர்க்காமல் ஸ்கிப் செய்து கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான். ஆனால் மேம்பாளம் பட்டை, விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், கட்டாயம் சேர்த்து இந்த சிவப்பு எண்ணெயை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். வளராத முடி கூட சீக்கிரத்தில் வளர்வதை கண்கூடாக காணலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -