அழகை அள்ளித் தரும் வெந்தயம்

vendhayam beauty tips
- Advertisement -

அழகை அள்ளித் தரக்கூடிய பல பொருட்கள் நம்மிடமே இருக்கிறது. அதை உணராமல் கடைகளில் இருந்து கெமிக்கல் நிறைந்த பொருட்களை வாங்கி உபயோகப்படுத்தி நம்முடைய அழகை நாம் கெடுத்துக் கொள்கிறோம். கடைகளில் இருந்து வாங்கும் பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது மட்டும்தான் அது நன்றாக இருப்பது போல் தெரியும். சிறிது நாட்கள் கழித்து அதனுடைய ரசாயன கலவையால் பலவிதமான பக்க விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதை தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் நம் அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய வெந்தயத்தை எப்படி பயன்படுத்தினால் அழகாக மாற முடியும் என்றுதான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய சமையலறையில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருளாக வெந்தயம் திகழ்கிறது. வெந்தயத்தால் பல மருத்துவ நன்மைகள் நமக்கு கிடைக்கும். வெந்தயத்தை நாம் சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கிறது. மூட்டு வலி சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகிறது. எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை இதற்கு உள்ளது. மலச்சிக்கலை தடுக்கிறது. இப்படி கூறிக்கொண்டே செல்லலாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட வெந்தயத்தை நம்முடைய தலைக்கு உபயோகப்படுத்தும் பொழுது தலைமுடி ஆரோக்கியமாக இருக்கிறது. அதே வெந்தயத்தை நம்முடைய முகத்திற்கு நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம்முடைய முகத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். இப்பொழுது நாம் பார்க்க போகும் அனைத்து விதமான அழகு குறிப்பிற்கும் வெந்தயத்தை குறைந்தது 2 மணி நேரமாவது ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

முகப்பரு நீங்க ஊற வைத்திருக்கும் வெந்தயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக அரைத்து பருக்கள் இருக்கும் இடத்தில் தடவுவதன் மூலம் பருக்கள் முற்றிலும் நீங்கி பருக்களால் ஏற்பட்ட வடுக்களும் மறைந்துவிடும்.

- Advertisement -

சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை நீங்குவதற்கு ஊற வைத்த வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் தயிரை சேர்த்து நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக தயார் செய்து முகம் கை கால்கள் என்று எந்த இடத்தில் கருமை இருக்கிறதோ அந்த இடத்தில் தேய்த்து அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கருமை நீங்கி சரும நிறம் அதிகரிப்பதை உணர முடியும்.

வயதான தோற்றத்தை தரக்கூடிய முகசுருக்கம் நீங்குவதற்கு ஊற வைத்த வெந்தயம் ரெண்டு டேபிள் ஸ்பூன் எடுத்து அதனுடன் காய்ச்சாத பசும்பால் சேர்த்து பேஸ்ட் ஆக அரைத்து இந்த பேஸ்ட்டை நம்முடைய முகத்தில் தடவி அரைமணி நேரம் அப்படியே வைத்திருந்து பிறகு கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கங்கள் மறைந்து முகம் இளமையாக தோற்றம் அளிக்கும்.

இதையும் படிக்கலாமே: முகம் பளிச்சுன்னு பிரகாசமா மாற ஃபேஸ் பேக்

ஒரே ஒரு பொருளான இந்த வெந்தயத்தை வைத்து நம் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இருக்கக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்பதை உணர்ந்து செயலாற்றுவோம்.

- Advertisement -