வேண்டுதல் நிறைவேற பெருமாள் வழிபாடு

pray perumal
- Advertisement -

நம்முடைய வழிபாடு முறைகளில்தெய்வங்களுக்கு வேண்டுதல் வைத்துக் கொள்வது நாம் காலம் காலமாக பின்பற்றி வரும் முறை தான். தெய்வங்களிடம் ஏதேனும் ஒரு கோரிக்கை வைத்து அதை நிறைவேற்றினால் காணிக்கை செலுத்துவதாக நாம் வேண்டிக் கொள்வது உண்டு. இது அனைத்து தெய்வ வழிபாட்டிலும் உண்டு.

பெரும்பாலும் குலதெய்வத்திற்கு இது போன்ற வேண்டுதல்கள் செய்வார்கள். அடுத்ததாக பெருமாள் வழிபாடு செய்பவர்கள் இந்த முறையில் காணிக்கை முடிந்து வைத்து வேண்டுதல் வைத்துக் கொள்வார்கள். நாம் நினைத்தது நடக்க அது போன்றதொரு காணிக்கை வழிபாட்டு முறையை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வேண்டுதல் பலிக்க பெருமாள் வழிபாடு

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்ற கூற்றும் உண்டு. அதே போல் மூன்று முறை திருப்பதி பெருமாளை தரிசனம் செய்து வந்தவர்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத மாற்றங்கள் நிகழும் என்றெல்லாம் சொல்வார்கள். எல்லோராலும் நினைத்தவுடன் திருப்பதி செல்ல முடியாது அல்லவா! அப்படி இருக்கையில் சக்தி வாய்ந்த இந்த பெருமாளை வீட்டில் இருந்து எப்படி காணிக்கை வழிபாடு செய்வது என்பது பற்றி தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த வழிபாட்டிற்கு காணிக்கையாக 11 ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நாணயத்தின் மீது புனுகு தடவி ஒரு வெள்ளை நிற துணியை மஞ்சளில் முக்கி காய வைத்து அந்த துணியில் இந்த நாணயத்தை வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இது தான் காணிக்கை முடிச்சு. இதையெல்லாம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு அங்கு அமர்ந்து தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த முடிச்சை உங்கள் வீட்டில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு பெருமாள் ஆலயத்திற்கு கொண்டு சென்று பெருமாள் பாதத்தில் இதை வைத்து உங்களுடைய வேண்டுதல் எதுவோ அதை நிறைவேற வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுங்கள். அந்த வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் இந்த காணிக்கை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கிறேன் என்றும் வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு இதை காணிக்கை முடிச்சை கருடாழ்வார் பாதத்திலும் வைத்து வணங்க வேண்டும். அதன் பிறகு பெருமாள் ஆலயத்தில் உள்ள கொடிமரத்தின் முன்பு நின்று இந்த முடிச்சை உங்கள் இடது கையில் வைத்து வலது கையை அதன் மேல் வைத்து மூடி அப்போதும் இதே போன்ற வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வேண்டுதல் முடித்த பிறகு ஆலயத்தை சுற்றி வந்து நேராக வீட்டுக்கு வந்து விடுங்கள். வீட்டிற்கு வந்து இந்த முடிச்சை பூஜை அறையில் உள்ள பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்படி வழிபாடு செய்யும்பொழுது உங்களுடைய வேண்டுதல் விரைவில் பெருமாள் நிறைவேற்றி தருவார் என்பது ஐதீகம்.

நீங்கள் ஒவ்வொரு நாளும் பூஜை செய்யும் பொழுது இந்த காணிக்கை கையில் வைத்து பெருமாளை மனதார நினைத்து ஆலயத்தில் வேண்டியது போலவே தொடர்ந்து வேண்டிக் கொண்டே வந்தால் உங்கள் வேண்டுதல் சீக்கிரத்தில் நடக்கும் அதிசயத்தை நீங்களே காண்பீர்கள். கேட்டதை அருளும் பெருமாளிடம் இந்த முறையில் வரத்தைக் கேளுங்கள் நிச்சயம் அவர் தருவார்.

இதையும் படிக்கலாமே: மங்களம் உண்டாக, பொன் பொருள் சேர பரிகாரம்

எந்த ஒரு வேண்டுதலும் வழிபாடு பரிகாரம் அனைத்தையும் முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் இந்த வேண்டுதலோடு உங்களின் அயராத உழைப்பையும், முயற்சியும் செலுத்தினால் சீக்கிரத்தில் அதில் நிறைவேறும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -