முருகன் கோவிலுக்கு இந்த நாளில் போய் வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும். கேட்ட உதவியும் உடனே கிடைக்கும்.

muruga sad lady
- Advertisement -

தன் பக்தர்கள் மனம் உருகி உண்மையான பக்தியோடு என்ன கேட்டாலும், அதை வாரி வழங்கக் கூடிய கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அந்த முருகப்பெருமான். தமிழ் கடவுள் முருகனைப் பற்றி எவ்வளவோ விஷயங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. முருகப்பெருமான் வழிபாட்டில் இதுவரை நாம் அறிந்திடாத ஒரு விஷயத்தை தான் இன்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் யாரிடமாவது உதவி என்று போய் நின்றாலே, எப்போதுமே உதாசீனப்படுத்தப்படுவீர்களா. நீங்கள் கேட்ட உதவி, உங்களுக்கு கேட்ட நேரத்தில் கிடைக்கவே கிடைக்காதா. எல்லோராலும் தட்டிக் கழிக்கப்படுபவர்களா நீங்கள். அப்போது நீங்கள் தான் இதை முதலில் படிக்கணும்.

உதாரணத்திற்கு, ரொம்ப நாட்களாக பேங்கில் ஹவுசிங் லோன் முயற்சி செய்து, எனக்கு கிடைக்கவே இல்லை, இந்த வருடத்திற்குள் லோன் கிடைத்தால் உதவியாக இருக்கும் என்பவர்கள், என்னுடைய பிள்ளைக்கு திருமணம் வைத்திருக்கின்றேன், அந்த திருமணத்திற்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை. இவரிடம் கடன் கேட்டிருக்கின்றேன். அடுத்த மாதத்திற்குள் கைக்கு பணம் வந்தால் ரொம்ப உதவியாக இருக்கும். என்னுடைய மகள் திருமணத்தை ஜாம் ஜாம் என நடத்துவேன். இப்படிப்பட்ட பிரச்சனைகள் நம்மில் நிறைய பேருக்கு இருக்கு.

- Advertisement -

மேலே சொன்ன சூழ்நிலை எல்லாம் அடுத்தவர்களை நம்பி இருக்கக்கூடிய சூழ்நிலை. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு மட்டும் கிடையாது. சில நேரங்களில் மருத்துவ உதவி கூட நமக்கு தேவைப்படும். சில பேருக்கு கிட்னி தேவை, இருதய மாற்று அறுவை சிகிச்சை, சில பேருக்கு ரத்தம் தேவைப்படும். இப்படி அடுத்தவர்களை நம்பி நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உதவி கிடைக்காமல் சிக்கி இருப்போம்.

இப்படிப்பட்ட உதவிகள் எல்லாம் அடுத்தவர்களிடமிருந்து நமக்கு கிடைக்க சில சமயம் தாமதமாகும். ஒரு மாதம் என்பது ஒரு வருடம் கூட இழுக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் நீங்கள் வேண்டிய, விரும்பிய உதவியை உடனடியாக பெற, வேண்டும் என்றால் முருகப்பெருமானை எந்த நாளில் வழிபாடு செய்வது.

- Advertisement -

வேண்டிய வரம் கிடைக்க முருகன் கோவில் வழிபாடு:
ஒரு மாதத்தில் மிருகசீரிஷம் நட்சத்திரம் என்றைக்கு வருகிறது என்று பாருங்கள். அந்த மிருகசீரிஷ நட்சத்திரம் வரக்கூடிய நாளில், முருக பெருமான் கோவிலுக்கு போங்க. முருகப்பெருமானுக்கு அரளிப்பூ அல்லது முல்லைப்பூ வாங்கி கொடுத்து, உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: ஒரே நாளில் வியாபாரம் ஓவென்று சூடு பிடித்து கல்லாப்பெட்டி பணத்தாலே நிரம்பி வழிய ஒரே ஒரு அரச இலை இப்படி செய்து உங்க கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள் போதும்.

பிறகு நீங்கள் யாரிடம் போய் உதவி கேட்க வேண்டுமோ, அந்த நபரிடம் போய் கையோடு இந்த மிருகத்திருச்ச நட்சத்திரத்தன்று உதவியை கேட்டால், நீங்கள் கேட்ட உதவியானது உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு சின்ன ஆன்மீகம் சொல்லும் ஜோதிட குறிப்பு தான். ஆனால் அவசரம் எனும் போது இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். நல்லது நடந்தால் நமக்கு சந்தோஷம் தானே. இதில் நம்மிடம் இருந்து இழப்பதற்கு எதுவுமே கிடையாது. முருகப்பெருமான் நிச்சயம் நீங்கள் கேட்டதை உங்களுக்கு கொடுப்பான் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால்.

- Advertisement -