ஒரே நாளில் வியாபாரம் ஓவென்று சூடு பிடித்து கல்லாப்பெட்டி பணத்தாலே நிரம்பி வழிய ஒரே ஒரு அரச இலை இப்படி செய்து உங்க கல்லாப்பெட்டியில் வைத்து விடுங்கள் போதும்.

- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் வேலை கிடைப்பது என்பதே பெரிய செயல். இதனாலே பலரும் தங்களால் இயன்ற அளவு சின்ன சின்ன வியாபாரம் தொழில் போன்றவற்றை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இப்படி முன்னேற்ற பாதையில் செல்லும் அனைவரும் முன்னேறுகிறார்களா என்றால் அது சந்தேகம் தான். முன்னேற வேண்டும் என்றால் அயராது பாடுபட்டு உழைப்பதோடு நமக்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் நேரமும் சரியாக அமைய வேண்டியதும் அவசியம்.

சரி அதிர்ஷ்டமும் நேரமும் சரியாக அமைந்திருக்கிறது என்று கடையோ, தொழிலையோ தொடங்கி நாம் வெறுமனே அமர்ந்திருந்தாலும் முன்னுக்கு வர முடியாது. இவை அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை தான். ஒன்று இல்லாமல் மற்றொன்று செயல் புரியாது. ஆகையால் வியாபாரம் தொடங்கி அயராது பாடுபடுபவர்கள் அத்துடன் சேர்த்து இந்த ஒரு எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்யும் பொழுது கடைக்கு ஆட்கள் வரத்து அதிகரித்து வியாபாரம் பெருகும். அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வியாபாரம் சிறக்க பரிகாரம்
இந்த பரிகாரத்தை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு முன்பாக இதை செய்து விடுவது சிறந்தது. இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு தாம்பாள தட்டு, வெற்றிலை பாக்கு இதற்கு உடைக்காத முழு நிலையில் உள்ள பாக்கு ஒன்று, ஒரு ஐந்து ரூபாய் நாணயம், இரண்டு ஊதுபத்தி, ஒரு கற்பூரம் இதையெல்லாம் தயாராக எடுத்துக் கொள்ளுங்கள்.

சனிக்கிழமை காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணிக்குள் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது எடுத்து வைத்திருக்கும் இந்த பொருளை எல்லாம் உங்கள் கையில் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். ஆனால் வீட்டில் இருந்து கிளம்பும் போது எதுவும் பேசக் கூடாது. பேசாமல் நேராக அரச மரத்தடிக்கு சென்று இந்த வெற்றிலை பாக்கு நாணயம் அனைத்தையும் தட்டுடன் மரத்தடியில் வைத்து கற்பூரம் ஊதுபத்தி எல்லாம் ஏற்றி வழிபட்டு நாளை வந்து உங்களை எடுத்துக் கொள்கிறேன். நீங்கள் என்னுடன் வந்து என் வியாபாரத்தை செழிப்படைய செய்யுங்கள் என்று அரச மரத்தை பார்த்து மனதிற்குள்ளேயே வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகும் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும். இது சனிக்கிழமை அன்று செய்ய வேண்டியது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு அப்போதும் யாரிடமும் பேசாமல் நேராக அரச மரத்தடிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று நீங்கள் வெற்றிலை, பாக்கு, நாணயம் எல்லாம் வைத்திருந்த இடத்திற்கு சென்று தொட்டு வணங்கிய பிறகு ஒரே ஒரு இலையை மட்டும் கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். அந்த இலையில் சிறிதும் ஓட்டையோ அல்லது இலை கிழிந்தோ இருக்கக் கூடாது நல்ல இலையாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது இந்த இலையை எடுத்துக் கொண்டு நேராக நீங்கள் வியாபாரம் அல்லது தொழில் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள். அங்கு கல்லாப்பெட்டியில் ஒரு பேப்பரில் இந்த இலையை வைத்து மடித்து போட்டு விடுங்கள். இவ்வளவு தான் பரிகாரம். இந்த வேண்டுதலுடன் கூடிய அரச இலை நம்முடன் இருக்கும் பொழுது கடைக்கு ஆட்கள் வருவது அதிகரித்து வியாபாரம் பெருகும். அதுவும் இந்த இலை கொண்டு வந்த அன்றே இதற்கான மாற்றம் உங்களுக்கு தெரியும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை வீட்டில் இந்த திசையில் தீபத்தை ஏற்றினால், வாழ்க்கையில் நீங்க நம்பி ஏமாந்த பணம், பொருள், சொத்து, வாழ்க்கை என இழந்த அனைத்தும் மீண்டும் உங்களை நிச்சயம் வந்தடையும்.

இந்த இலையை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. இலை நன்றாக காய்ந்து சருகாக மாறி உதிரும் சூழ்நிலையில் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு, வேறு இலை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதுவும் இதே போல் சனி ஞாயிறு கிழமைகளில் தான் செய்ய வேண்டும். உங்களின் அயராத உழைப்பு விடா முயற்சியுடன் இந்த தாந்திரீக பரிகாரத்தையும் செய்து நல்ல முறையில் வியாபாரத்தை பெருக்கிக் கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -