முயற்சிகள் வெற்றி அடைய மரமும் மந்திரமும்

vanni maram
- Advertisement -

நம் வாழ்க்கையில் நாம் பல விஷயங்களை நினைத்து இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் அப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்படுவோம். ஆனால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோமா என்று கேட்டால் கண்டிப்பாக செய்ய மாட்டோம். நாம் நமக்கு தேவையான ஒரு விஷயம் நடைபெற வேண்டும், அதுவும் நியாயமான விஷயம் நடைபெற வேண்டும் என்றால் அது நடைபெறுவதற்கு எந்த மரம் நமக்கு உதவி செய்யும், அதை எப்படி வழிபட வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஆன்மீகத்திற்கும் மரத்திற்கும் மிகுந்த தொடர்பு இருக்கிறது. மரங்களை நாம் தெய்வமாக நினைத்து வழிபடுகிறோம். மேலும் ஒரு ஆலயம் என்று இருந்தால் அந்த ஆலயத்திற்கு என்று தல விருட்சம் என்று ஒரு மரம் இருக்கும். ஆலயத்தில் இருக்கும் மூலவருக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு தல விருச்சத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி இருக்கக்கூடிய தல விருச்சத்திடம் நாம் நம்முடைய நியாயமான கோரிக்கையை வைத்து வழிபட்டு முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அந்தக் கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தல விருட்சத்தில் ஒன்றுதான் வன்னி மரம். இந்த வன்னி மரம் சிவன் கோவில்களில் தலவிருட்சமாக இருக்கும்.

வன்னி மர இலைகள் தங்கமாக மாறிய சம்பவமும் நடைபெற்றிருக்கிறது. கோவில் திருப்பணி செய்ய வந்தவர்களுக்கு கூலி கொடுக்க பணம் இல்லாத காரணத்தால் வன்னி இலைகளை கொடுத்ததாகவும் அந்த வன்னி இலைகள் தங்கமாக மாறியதாகவும் இவ்வாறு தான் விருதாச்சலத்தில் இருக்கக் கூடிய விருதகிரீஸ்வரர் கோவிலை முனிவர் கட்டினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

- Advertisement -

எந்த சிவன் கோவிலில் வன்னி மரம் இருக்கிறது என்பதை கண்டறிந்து நம்முடைய நியாயமான செயல் நடைபெறுவதற்கான முயற்சியை மேற்கொள்வதற்கு முன்பாக அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் சிவபெருமானையும், அம்மனையும் மனதார வழிபட்டு விட்டு கடைசியாக தல விருச்சமான வன்னி மரத்திடம் வரவேண்டும்.

வன்னி மரத்தை வணங்கி விட்டு அதை நம்முடைய இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நம்முடைய நெற்றி அதன் மேல் படும் படி வைத்துவிட்டு ஒரு மந்திரத்தை கூற வேண்டும். அந்த மந்திரம்
“ஓம் பிறங் பிறங் குசாய சிங் சிவாய நம”
இந்த மந்திரத்தை மனதார 27 முறை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி செய்து முடித்துவிட்டு நம்முடைய முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அந்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு நாம் புது முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுதெல்லாம் வன்னி மரத்திடம் சென்று இந்த மந்திரத்தை உச்சரித்து வர நம்முடைய முயற்சிகள் வெற்றி அடையும்.

இதையும் படிக்கலாமே: பணப்புழக்கம் அதிகரிக்க சூட்சமமான பரிகாரம்

நியாயமான முறையில் நமக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காத பட்சத்தில் இந்த வழிபாட்டை மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும் அதற்குரிய முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -