இந்த ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். நாளை ஆடி முதல் நாள், அம்மன் பாதங்களில் இந்த 1 பொருளை மட்டும் வைத்து வேண்டுதல் வையுங்கள்.

amman4
- Advertisement -

நிறைவேறாத வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ள கோவில் கோவிலாக சென்று வேண்டுதலை வைத்திருப்போம். செய்யாத பிரார்த்தனைகள் கிடையாது, நிறைவேற்றாத நேர்த்திக்கடன் கிடையாது. ஆனால், வேண்டுதல் மட்டும் நிறைவேறாமலே இருக்கும். உதாரணத்திற்கு சில வீடுகளில் சுபகாரிய தடை இருக்கும். தங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல வரன் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருவார்கள். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் இருக்காது, அல்லது திருமணம் ஆன கணவன் மனைவி சண்டை சச்சரவோடு குடும்பத்தை நடத்திக் கொண்டு இருப்பார்கள். அது மட்டும் இல்லாமல் திருமணம் ஆனவர்கள் பிரிந்து வாழக்கூடிய சூழ்நிலையும் இருக்கும். இப்படி குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது சரியாக நாளைய தினம் அம்பாளிடம் எப்படி வேண்டுதல் வைக்கலாம்.

குடும்ப சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாமல், சில பேருக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள், சில பேர் உடல்ரீதியாக ஆரோக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவார்கள். இப்படிப்பட்டவர்களும் நாளைய தினம் அம்பாளை வேண்டிக் கொண்டால் உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும். சரி நாளைய தினம் அம்பாள் பாதங்களில் வேண்டுதலை எப்படி வைப்பது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற ஆடி மாத முதல் நாள் வழிபாடு:
ஒரு மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சுருட்டி முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதை வேண்டுதல் கப்பனம் என்று சில பேர் சொல்லுவார்கள். இந்த முடிச்சை அம்பாள் பாதங்களில் வைத்து நம்பிக்கையோடு சரணாகதியுடன் வேண்டிக் கொள்ளுங்கள். ஒரே ஒரு வேண்டுதலை அம்பாளிடம் சொல்லுங்கள். பல பிரச்சினைகளை சொல்லி குழப்ப வேண்டாம். முதல் தேவை காண வேண்டுதலை மட்டும் வைத்து அந்த வேண்டுதல் நிறைவேற மனம் உருகி அம்மனை பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த ஆடி மாதம் முழுவதும் அந்த ஒரு ரூபாய் நாணயம் உங்கள் வீட்டில் பூஜை அறையில் அம்பாளின் பாதங்களிலேயே இருக்கட்டும். கட்டாயம் ஏதாவது ஒரு அம்மனின் திருவுருவப்படம் உங்களுடைய வீட்டில் இருக்கும் அல்லவா. அந்த அம்மன் பாதங்களில் இதை வைக்கவும். உங்களுடைய வீட்டில் அம்மன் படமே இல்லை என்றால் காமாட்சி அம்மன் விளக்கு, கஜலட்சுமி விளக்குக்கு பக்கத்தில் இந்த முடிச்சை வைத்து விடுங்கள்.

- Advertisement -

வேண்டுதல் நல்லபடியாக நிறைவேற வேண்டும். இந்த ஆடி மாதம் முடிந்த பிறகு நல்ல செய்தி செவிகளில் எட்ட வேண்டும் என்று அம்பாளிடம் உறுதியாக சொல்லி விடுங்கள். வேண்டுதல் நல்லபடியாக நடந்தவுடன் இந்த ஒரு ரூபாய் காணிக்கையை கொண்டு வந்து அம்மன் கோவில் உண்டியலில் சேர்ப்பதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அந்த முடிச்சை எக்காரணத்தைக் கொண்டும் அவிழ்க்க கூடாது.

ஆடி மாதம் முடிந்த பிறகு உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறிய பிறகு இந்த ஒரு ரூபாயை அப்படியே மஞ்சள் நிற முடிச்சோடு சேர்த்துக் கொண்டு போய் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள். ஆடி மாதம் முடிவதற்குள் உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டாலும் சரி, அந்த ஒரு ரூபாய் நாணயம் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். ஆடி மாதம் நிறைவடைந்த பிறகு ஒரு வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று அதை உண்டியலில் சேர்க்கவும்.

இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

இது ஒரு எளிமையான வழிபாடு தான். ஆனால் ரொம்பவும் சக்தி வாய்ந்த வழிபாடு. நாளைய தினம் இதை செய்பவர்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். எவ்வளவோ போராட்டங்களில் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் நடத்தி வந்திருந்தாலும் அந்தப் போராட்டங்களில் இருந்து விடுபட நாளைய தினம் அம்பாள் வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளுங்கள். அம்பாளின் அருள் ஆசியை முழுமையாக பெறுவீர்கள். சந்தோஷமான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -