நினைத்த காரியம் நிறைவேற தேங்காய் தீபம்

vinayagar dheepam
- Advertisement -

நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற பழமொழி அனைவரும் தெரிந்ததே. நாம் என்னவெல்லாமோ செய்ய ஆசைப்படுவோம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். ஆனால் நடப்பது வேறொன்றாக இருக்கும். அதையும் நாம் எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு கடந்து விடுவோம். இது தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருக்கும் யதார்த்தமான உண்மை.

நாம் கேட்கும் விதத்தில் கேட்டால் நிச்சயம் நினைத்த யாவும் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அதற்கான வழிபாட்டு முறைகளை நாம் சரியாக கடைபிடிக்க வேண்டும் அவ்வளவு தான். அந்த வகையில் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற எடுக்கும் முயற்சிகளோடு இந்த ஒரு வழிபாட்டையும் செய்யும் போது நிச்சயம் அது நிறைவேறும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன என்பதை இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

நினைத்த காரியம் நிறைவேற

இந்த வழிபாட்டை நாம் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமாளுக்கு தான் செய்ய போகிறோம். எந்த ஒரு செயலை தொடங்குவதாக இருந்தாலும் முதலில் அவரை வணங்கிய பிறகு தான் செய்ய வேண்டும். ஏன் மற்ற தெய்வங்களை வணங்குவதாக இருந்தாலும் அவரை வணங்கிய பிறகு தான் வணங்குவோம்.

அத்தகைய சக்தி வாய்ந்த விநாயகரை நம்முடைய தேவைகள் நிறைவேற எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இந்த பரிகாரத்தை செய்ய புதன்கிழமை காலையில் செய்வது தான் சிறந்தது. அதே போல் இந்த வழிபாட்டை நாம் ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த தீபத்தை ஏற்ற ஒரு முழு தேங்காய் உடைத்துக் கொள்ளுங்கள். தேங்காயில் இருக்கும் தண்ணீரை வெளியே ஊற்றி விடுங்கள். அடுத்து தேங்காய்க்கு மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து தேங்காய் கீழே விழாதவாறு அடியில் அகல் வைத்து அதன் மேல் தேங்காயை நிறுத்தி அதை சுற்றி மலர்கள் வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு பாகத்திலும் இரண்டு திரிகளை போட வேண்டும். இந்த திரிகள் பெருக்கல் குறி போல போட்டுக் கொள்ளுங்கள்.

ஒரு முடியில் இரண்டு தீபம் அப்படியானால் மொத்தம் நான்கு தீபம் எரிய வேண்டும். இப்போது தேங்காயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சி திரி போட வேண்டும். விநாயகருக்கு முன்பு இந்த தீபத்தை ஏற்றி வைத்து விட்டு உங்களுடைய கோரிக்கையை வையுங்கள். ஒரு நேரத்தில் ஒரு கோரிக்கை மட்டும் தான் வைக்க வேண்டும். அது நிறைவேறிய பிறகு அடுத்த கோரிக்கை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: பண தேவையை பூர்த்தி செய்ய பரிகாரம்

இப்படியாக 5 வாரங்கள் தொடர்ந்து செய்யும் போது உங்களுடைய இந்த கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்று நம்பப்படுகிறது. எளியவருக்கெல்லாம் இறங்கி வந்து அருள் புரியும் விநாயகர் பெருமானை நினைத்து ஏற்றப்படும் இந்த தெய்வம் உங்களுடைய வேண்டுதலையும் நிறைவேற்றும் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -