கிருத்திகை நட்சத்திரத்தில் செய்ய வேண்டிய முருகன் வழிபாடு

murugan2
- Advertisement -

பிரச்சனைகளை தீர்க்கும் முருகர் வழிபாட்டை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இன்றைய நாளுக்கு என்ன சிறப்பு இருக்கிறது என்று முதலில் நாம் தெரிந்து கொள்வோம். முருகனுக்கே உரிய சஷ்டி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வந்திருக்கக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த நாள் தான் இன்று.

முருகனுக்கே உரியதான இந்த திதி நட்சத்திரங்கள், மங்களம் பொருந்திய வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாளில் பிரபஞ்ச சக்தியானது ரொம்ப ரொம்ப அதிகமாக இருக்கும். இந்த நாளில் முருகரை வேண்டி நாம் என்ன பிரார்த்தனை செய்தாலும் அது உடனே பலிக்கும். இன்றைய தினம் உங்களுடைய கஷ்டங்கள் தீருவதற்கு செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பிரச்சனைகள் தீர முருகர் வழிபாடு

இந்த பதிவை பார்த்த பிறகு, இன்று உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டிற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் 1 வெற்றிலை, 1 பச்சை கயிறு. உங்கள் கையில் கட்டும் அளவுக்கு பச்சைக் கயிறு எடுத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு முருகப் பெருமானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வெற்றிலையின் மீது இந்த கயிறை வைத்து விடுங்கள்.

முருகனை நினைத்து அந்த கயிறை எடுத்து ஆறு முடிச்சுகள் போட வேண்டும். ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை சொல்லி 6 முடிச்சுகளையும் போட்டுக்கோங்க. முடிச்சுகள் போட்ட அந்த கயிறை வெற்றிலையின் மேல் வைத்து விடுங்கள். வெற்றிலையோடு சேர்த்து எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை முருகப்பெருமானிடம் சொல்லுங்கள்.

- Advertisement -

நிறைய பிரச்சனைகளை சொல்லி குழப்பிக் கொள்ள வேண்டாம். கடன் பிரச்சனை அதிக தொல்லை கொடுக்கிறதா, அல்லது ஆரோக்கிய பிரச்சனை அதிக தொல்லை கொடுக்கிறதா, அல்லது வேலையில் பிரச்சனையா, எந்த பிரச்சினை இப்போது உங்களுக்கு முதலில் சரியாக வேண்டும். அந்த பிரச்சனைக்காக பிரத்தியேகமாக இந்த வேண்டுதலை வைத்து, அந்த பச்சை நிற கயிறை உங்களுடைய வலது கையில் கட்டிக் கொள்ளுங்கள்.

உங்களுக்காக நீங்களே இந்த வழிபாட்டை செய்தாலும் சரி, அல்லது உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்காக நீங்கள் இந்த வழிபாட்டை செய்து, இந்த பச்சை கயிறை கொண்டு போய் யாருக்கு பிரச்சனையோ, அவர்களுடைய கையில் கட்டி விட்டாலும் சரி, உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். என்னுடைய பிள்ளைக்கு பிரச்சனை, கணவருக்கும் பிரச்சனை, என்ன செய்வது.

- Advertisement -

இரண்டு பேருக்கும் இரண்டு கயிறு வைத்து மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்து இரண்டு பேருக்கும் தாராளமாக இந்த கயிறை கட்டிவிடலாம். இந்த பச்சை கயிருக்கு 48 நாள் வரை பவர் இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த காரியம் நிச்சயம் 48 நாட்களுக்குள் பலிக்கும். 48 நாள் கழித்து இந்த பச்சைக் கயிறு கழட்டி ஏதாவது ஒரு மரத்தில் கட்டி விட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்கம் வாங்க தங்கமான நாள்

கால் படாத இடத்திலும் போடலாம் தவறு கிடையாது. முருகன் மீது அளவு கடந்த பக்தி கொண்ட முருகர் பக்தர்களுக்கு இந்த பரிகாரம் ஒரு வர பிரசாதம்‌. நம்பிக்கையோடு செய்தால் முருகன் உங்களை கைவிடமாட்டான் என்ற இந்த தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -