எல்லோர் வீட்டு வாசலிலும் இருக்கக்கூடிய இந்த 2 இலைகள் போதும். உங்களுடைய சரும பிரச்சனைகளுக்கு 1 ரூபாய் செலவு இல்லாமல் தீர்வு கிடைக்கும்.

face10
- Advertisement -

உங்களுக்கு அழகான சருமம் இருந்தாலும் அந்த அழகை பாதுகாப்பதற்கு, முகத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தாலும் அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு, எங்கெங்கோ போய் தீர்வை தேடுவோம். ஆனால் நம் வீட்டின் அருகில் நம் கண் முன்னால் இருக்கக்கூடிய இந்த இரண்டு இலைகளை மறந்துவிட்டோம். முகத்தில் இருக்கும் தேவையற்ற பிரச்சனைகளை நீக்கி, முகத்தை பொலிவாக்க, நிரந்தரமான இயற்கையான ஒரு தீவை தரக்கூடிய ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பெரியதாக இதற்கு நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டாம். உங்கள் பட்ஜெட்டுக்குள் சூப்பர் ரெமெடிங்க.

முதலில் நம் வீட்டின் வாசலிலேயே கிடைக்கக்கூடிய அந்த 2 பொருள் என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம். துளசி, வேப்பிலை பெரும்பாலும் இந்த இரண்டும் நமக்கு சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். தேவையான அளவு துளசி இலைகள். தேவையான அளவு வேப்ப இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். கடைகளில் 10 ரூபாய் கொடுத்து ஒரு பாக்கெட் கிரீன் டீ வாங்கினால் கூட போதும்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். 10 துளசி இலைகள், 5 வேப்பிலை இலைகளை லேசாக கையாலேயே நுனிக்கி கூட போட்டுக்கொள்ளலாம். அதன்பின்பு கிரீன் டீ தூளை – 1/2 ஸ்பூன் இந்த தண்ணீரில் சேர்த்து விடுங்கள். இந்த 3 இலைகள் தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வேண்டும். இந்த இலைகளில் இருக்கும் அந்த எசன்ஸ் தண்ணீரில் முழுமையாக இறங்கவேண்டும். 1/2 டம்ளர் தண்ணீர், 1/4 டம்ளர் தண்ணீருக்கும் குறைவாக சுண்டி வர வேண்டும்.

இந்தத் தண்ணீரை ஆற வைத்து ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 4 டேபிள்ஸ்பூன் இலிருந்து 5 டேபிள்ஸ்பூன் அளவு இந்த மூலிகை தண்ணீர் கிடைத்தால் கூட போதும். அதில் 1 ஸ்பூன் அலோ வேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்தால், நமக்கு ஒரு சீரம் போல கிடைத்துவிடும். இதை அப்படியே ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் பயன்படுத்தலாம்.

- Advertisement -

தினமும் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த ஜெல்லை எடுத்து உங்கள் முகத்தில் சீரம் போல ஆங்காங்கே லேசாக ஒவ்வொரு சொட்டு வைத்துவிட்டு, அப்படியே தடவி விட்டால் உங்களுடைய முகம் இந்த ஜெல்லை உறிஞ்சிக் கொள்ளும். முகத்தை கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடுங்கள். 5 மணி நேரமோ, 6 மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால் போதும். (ஆனால் இந்த ஜெல்லை கையால் தொட்டு எடுத்து பயன்படுத்தினால் சீக்கிரம் கெட்டுப் போய்விடும். ஒரு பிரஷை பயன்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.)

உங்களால் இந்த ஜெல்லை இரவு நேரத்தில் அப்ளை செய்து கொள்ள முடிந்தால் இன்னும் சிறப்பு. இரவில் முகத்தில் இந்த ஜெல்லை தடவிக்கொண்டு, மறுநாள் காலை எப்போதும் போல முகத்தை கழுவிக் கொள்ளலாம். தினமும் இதை செய்து வர உங்களுடைய முகத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு 7 நாட்களில் இருந்து 10 நாட்களுக்குள் உணரமுடியும். மொத்தமாக எல்லாம் சரியாகி இருக்காது. படிப்படியாக குறைவது உங்களுக்கு தெரியும். தொடர்ந்து இதைப் பயன்படுத்தி பாருங்கள்.

உங்களுடைய முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றாலும் வாரத்தில் 2 நாட்கள் இப்படி செய்தால் எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வராமல் இருக்கும்.

ஒருவேளை நீங்கள் இருக்கும் இடத்தில் துளசி இலை கிடைக்காது. வேப்ப இலை கிடைக்காது. என்னும் பட்சத்தில் இந்த இரண்டு பொருட்களும் பவுடராக கிடைக்கின்றது. துளசி இலை பவுடர், வேப்ப இலை பவுடரை வாங்கி ரெமிடிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த இயற்கையான குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -