இனி வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்க உடம்பில் தெம்பு இல்லையா? ஒரு கை பிடி வேப்பிலையை நெருப்பில் இப்படி போட்டால் கஷ்டங்கள் அனைத்தும் பொசுங்கி விடும்.

amman2
- Advertisement -

வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்து அனுபவித்து வாழ்க்கையே கசந்து போய் விட்டது. வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை. இதற்கு மேல் துன்பமும் தலைமேல் வந்து அமர்ந்தால் அதை சமாளிக்க முடியாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள், அந்த சக்தி தேவியை நினைத்து இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்கள் அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பொசுக்கி விடும். வாழ்க்கையில் இன்பம் என்ற புதுமலர் நிச்சயம் கூடிய விரைவிலேயே பூக்கத் தொடங்கும்.

amman3

கஷ்டங்கள் என்பது எப்போதுமே மனிதனுக்கு நிரந்தரமல்ல. ஒரு நாள் இல்லை என்றாலும் ஒரு நாள் கஷ்டத்தில் இருந்து வெளிவந்து நாமும் சந்தோஷமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை தொடங்குவோம். இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு தேவையான பொருட்கள் என்னென்ன. முதலில் வேப்ப இலைகளை ஒரு கைப்பிடி அளவு, அதாவது இரண்டு கொத்து வேப்பிலை இருந்தால்கூட போதும். ஒரு ரூபாய் நாணயம், சதுர வடிவில் இருக்கும் ஒரு மஞ்சள் நிற துணி, இதை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு வெள்ளிக்கிழமை அன்று இந்த பூஜையை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை மாலை நேரம் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை பூஜை செய்யும்போது இந்த பரிகாரத்தையும் அதனுடன் செய்து கொள்ளலாம்.

veppilai-agal-deepam

உங்கள் குல தெய்வத்தையும், சக்தி தேவையும் மனதார வேண்டிக் கொண்டு தயாராக எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் துணியில் இரண்டு கொத்து வேப்பிலைகளை உருவி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வேப்பிலையோடு ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து இந்த மஞ்சள் துணியை ஒரு சிறிய முடிச்சாக முடிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு உங்களுடைய வலது உள்ளங்கையில் இருக்க வேண்டும். அந்த அம்பாளை மனதார பிரார்த்தனை செய்துகொண்டு உங்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் கசப்பான கஷ்டங்கள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கையில் இருக்கும் முடிச்சை உங்களுடைய தலையை வலது பக்கமாக மூன்று முறை சுற்ற வேண்டும். அதன் பின்பு இந்த முடிச்சை உங்கள் பூஜை அறையில் ஏதாவது ஒரு அம்மனின் படத்திற்கு முன்பு வைத்துவிடுங்கள்.

veepilai

வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்து முடித்து உங்கள் தலையை சுற்றி வைத்து விட்டீர்கள். அடுத்தபடியாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் இந்த மூடிச்சு உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே இருக்க வேண்டும். அம்மனின் பாதங்களில் இருக்கட்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு முடிந்து வைத்திருக்கும் முடிச்சை எடுத்து அதில் இருக்கும் ஒரு ரூபாய் நாணயத்தை ஏதாவது ஒரு அம்மன் கோவிலில் செலுத்தி விடுங்கள்.

praying-god1

அந்த முடிச்சுக்கு உள்ளே லேசாக காய்ந்த வேப்பிலைகள் இருக்கும் அல்லவா. அதை எடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்திலேயே உங்களுடைய வீட்டில் தூபம் போடுவது போல, சாம்பிராணி தூபம் போட்டு அந்த நெருப்பில் இந்த வேப்பிலையை போட்டு இந்த புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பித்து விடுங்கள் போதும்.

dhupam

இந்த கசப்பு வேப்பிலைகளை நெருப்பில் போட்ட உடனேயே உங்களுடைய கஷ்டங்கள் எல்லாம் பொசுங்கி விடும். வாழ்க்கையில் துன்பங்கள் தொலைந்து இன்பங்கள் நடக்க ஆரம்பிக்கும். ஒரே ஒரு வாரம் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைவதை நிச்சயமாக உணர்வீர்கள்.

- Advertisement -