எடுத்த காரியத்தில் உங்களுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம். நடத்த முடியாத காரியத்தையும் நடத்திக் காட்ட இந்த 4 பேரை உங்கள் நினைவில் கொண்டு வாருங்கள்.

mantra
- Advertisement -

என்னதான் முயற்சி எடுத்தாலும் கையில் எடுத்த காரியம் தோல்வி. முட்டிமோதி பார்த்தாலும் வாழ்க்கையில் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியவில்லை. என்ன செய்வது. நம்மால் ஒரு விஷயத்தை செய்ய முடியவில்லை என்றால் சிறுவயதில் துணைக்கு நம்முடைய பெற்றோரை அழைப்போம். இது இயல்பு. அப்படி இல்லை என்றால் நம்முடைய நண்பர்கள் யாருடைய உதவியாவது எதிர்பார்ப்போம். இப்படியாக நம்மால் முடிக்க முடியாத ஒரு காரியத்திற்கு, நமக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்முடைய பயணத்தில் எந்த ஒரு தவறும் நடக்காமல், வாழ்க்கை பாதையை நடத்திச் செல்ல வேண்டும் என்றால் நமக்கு இந்த நான்கு பேரினுடைய துணை தேவைப்படுகிறது. அந்த நான்கு பேர் யார் யார். இவர்கள் நமக்கு என்ன நன்மையை செய்யப்போகிறார்கள் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

சிறுவயதில் எப்படிப் பெற்றோர்களின் கையைப் பிடித்துக் கொண்டால் நமக்கு கெடுதல் நடக்காது, நன்மை மட்டுமே நடக்கும் என்ற நம்பிக்கை நமக்குள் இருக்கிறதோ, அதேபோல் தான் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது நாம் சித்தர்களுடைய கையைப் பிடித்துக் கொண்டு பயணம் செய்தோம் ஆனால், வாழ்க்கையில் நிச்சயமாக எந்த கெடுதலும் நடக்காது. உங்களுக்கு நடப்பவை அனைத்தும் நன்மையாக தான் இருக்கும்.

- Advertisement -

ஒருவேளை உங்களுக்கு ஏதோ ஒரு கெடுதல் நடக்கப்போகின்றது. நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை தவறாக செய்யப் போகிறீர்கள் என்றால், அந்த சித்தர்கள் யார் ரூபத்திலாவது வந்து நீங்கள் செய்யக்கூடிய தவறை, உங்களுக்கு வரக்கூடிய கெடுதலை தடுத்து நிறுத்தி விடுவார்கள். சித்தர்களுடைய வழிபாட்டிற்கு அப்படி ஒரு அபரிமிதமான சக்தி உள்ளது.

ஏதாவது ஒரு காரியத்தை நீங்கள் தொடங்குவதற்கு முன்பு சித்தர்களை உங்களுக்கு துணையாக அழைக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. கண்களை மூடிக்கொண்டு நின்ற இடத்திலிருந்தே இந்த மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். 18 சித்தர்களின் ஐக்கியமே இந்த நான்கு வரி மந்திரம். இந்த மந்திரத்தை அரங்க மகா தேசிக சித்தர் நமக்காக அருளியுள்ளார்.

- Advertisement -

ஓம் அகத்தீசாய நம
ஓம் கருவூர் தேவாய நம
ஓம் போக தேவாய நம
ஓம் கோரக்க தேவாய நம

அவ்வளவு தாங்க. ஈசியா மனப்பாடம் செஞ்சு வெச்சுக்கோங்க. ஏதோ ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் செல்கிறீர்கள். நல்ல வாழ்க்கை துணை அமைய பெண் பார்க்க மாப்பிள்ளை பார்க்க செல்கிறீர்கள். அல்லது நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று இன்டர்வியூக்கு போறீங்க. சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்க காண்ட்ராக்ட் தேடி செல்கிறார்கள். படிக்கும் குழந்தைகள் தேர்வுக்கு செல்கிறீர்கள். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று புதிய முயற்சிகளை எடுக்க போகிறீர்கள். அல்லது ஏதாவது ஒரு சிக்கலில் தெரியாமல் சிக்கிக் கொண்டீர்கள் என்றாலும், அந்த சிக்கலில் இருந்து வெளிவர இந்த மந்திரம் உங்களுக்கு உதவும்.

எந்த நேரத்தில் உங்களுக்கு சித்தர்களுடைய துணை வேண்டுமோ அப்போது இந்த மந்திரத்தை உச்சரித்து அவர்களை கூப்பிடுங்கள். அவர்களே உங்கள் கையை பிடித்துக் கொண்டு உங்களுக்கான நல்வழியைக் காட்டி தருவார்கள். நம்பியவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்து இந்த பதிவினை நிறைவு செய்துள்ளோம்.

- Advertisement -