தீராத வேதனையை தீர்த்து வைக்கும் விநாயகர் வழிபாடு

pillaiyar3
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒவ்வொரு விதமான வேதனை தீராத காயமாய் இருந்து தான் வருகிறது. பிரச்சினைக்கு தீர்வு காண தினம் தினம் போராடி வருகின்றோம். சில பேருக்கு பணத்தால் பிரச்சனை, சில பேருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சனை, சில பேருக்கு கடனால் பிரச்சனை, சில பேருக்கு வாழ்க்கை துணை பிரச்சனை, சிலருக்கு வேலையில் தொழிலில் பிரச்சனை, சில பேருக்கு நோய் நொடி பிரச்சனை.

இப்படி பிரச்சனைகளில் பல வகைகள் இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் சரி, அந்த பிரச்சனையால் மனது ரணமாகி வேதனை பட்டுக்கொண்டிருந்தால், உடனடியாக விநாயகரை இந்த நாளில் போய் வழிபாடு செய்யுங்கள். அது எந்த நாள் தெரியுமா. தெரிஞ்சுக்க இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.

- Advertisement -

வேதனை தீர்க்கும் விநாயகர் வழிபாடு

காலண்டர் பாருங்க. அஸ்வினி நட்சத்திரம் என்னைக்கு வருகிறது என்று. மாதத்தில் ஒரு நாள் அஸ்வினி நட்சத்திரம் வரும். அந்த நட்சத்திரத்தன்று விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். காலை 6:00 மணிக்கு விநாயகர் கோவிலுக்கு சென்று உங்கள் கையால் விநாயகருக்கு அருகம்புல் மாலை கட்டி போட்டு விநாயகரை மனதாரப் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

விநாயகர் முன்பு சிறிது நேரம் அமர்ந்து உங்களுடைய பிரச்சனைகளை சொல்லி வேண்டுதல் வையுங்கள். விநாயகருக்கு மூன்று தோப்புக்கரணம், பிள்ளையார் கொட்டு வைத்து விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். இதே போல மாதம்தோறும் வரக்கூடிய அஸ்வினி நட்சத்திரத்தன்று விநாயகரை அருகம்புல் வைத்து வழிபாடு செய்யவும்.

- Advertisement -

இந்த அஸ்வினி நட்சத்திரத்தில் விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு வேதனை உடனே விலகிடும். கஷ்டங்கள் உடனே தீரும். நீங்கள் என்ன வரம் கேட்டாலும் விநாயகரிடம் இருந்து சுலபமாக பெற்றுக் கொள்ளலாம். சொல்லப்போனால் மற்ற தெய்வங்களை வழிபாடு செய்வதைவிட, இந்த விநாயகர் வழிபாடு ரொம்ப ரொம்ப எளிமையானது. இவரை வழிபாடு செய்வதற்கு நேரமும் கிடையாது காலமும் கிடையாது.

எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வழிபாடு செய்யலாம். காலை ஆறு மணி என்பது வழிபாடு செய்வதற்கு ரொம்ப ரொம்ப உகந்த நேரம் என்பதால் அந்த நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களால் அந்த நேரத்தில் கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் இந்த அஸ்வினி நட்சத்திரம் இருக்கக்கூடிய நாளில் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் விநாயகரை சென்று வழிபாடு செய்யலாம். அதிலும் எந்த தவறும் கிடையாது.

- Advertisement -

முடிந்தால் உங்கள் பிரச்சனை தீர்ந்த பின்பு, உங்களுடைய வேண்டுதலை விநாயகர் நிறைவேற்றி வைத்த பின்பு, இதே அஸ்வினி நட்சத்திரத்தன்று உங்கள் கையால் எள் சேர்த்த பூரண கொழுக்கட்டையை செய்து விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக கொடுங்கள்.

இதையும் படிக்கலாமே: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

பரிபூரண ஆசீர்வாதம் விநாயகரிடம் இருந்து கிடைக்கும். உங்கள் பிரச்சனை தீராத வேதனை எல்லாம் தீர்ந்து, குடும்பம் சுபிட்சம் அடையும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -