எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்

astrology in Tamil
- Advertisement -

கிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடியவர் புதபகவான். இவர் ஒரு ராசிக்காரர்களை பார்த்து விட்டால் அவர்கள் கல்வி ஞானம் அறிவு என அனைத்திலும் சிறந்து விளங்கக் கூடிய ஆற்றலை பெறுவார்கள். அத்தகைய புதபகவான் ஆனவர் இன்று கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறார். இவர் ஒரு மாத காலம் வரை கும்ப ராசியில் இருப்பார்.

இதற்கு முன்பே கும்ப ராசியில் சூரியனும் சனி பகவானும் சஞ்சரித்து வருகிறார்கள். இத்துடன் புதன் பகவானும் இணைவது சில ராசிகளுக்கு நற்பலனை தந்தாலும் சில ராசிகளுக்கு கெடு பலன்கள் தர இருக்கிறது. ஜோதிட சாஸ்தித்திரத்தில் ஒவ்வொரு கிரகங்களின் இடப்பெயர்ச்சியும் 12 ராசிக்காரர்களுக்கும் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும்.

- Advertisement -

அந்த வகையில் புதபகவானின் இந்த பெயர்ச்சியால் இன்னல் அனுபவிக்க போகும் அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை ஜோதிடம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

கிரக சேர்க்கையால் எச்சரிக்கையாக இருக்க
வேண்டிய ராசிக்காரர்கள்

மேஷ ராசி

கும்ப ராசியில் புதன் சஞ்சரிப்பதால் இந்த காலக்கட்டத்தில் மேஷ ராசியினருக்கு கடுமையான சூழலாக இருக்கும். தொழிலில் சுணக்கம் ஏற்படும். பொருளாதார தடைகள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு சோர்வு உண்டாகும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் உடனடியாக கிடைக்காது. கவனக் குறைவினால் நஷ்டங்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு உண்டு. ஆகையால் எந்த செயலையும் நிதானமாகவும் கவனமாகவும் செய்வது நல்லது

- Advertisement -

மீனம்

கும்ப ராசியில் புதன் புலம்பெயர்வதால் மீன ராசியினருக்கு அதிக செலவுகள் உண்டாகும். பணி சுமை அதிகரிக்கும் பணியிடத்தில் பிரச்சனைகள் உருவாகும். ஆகையால் பொறுத்துப் போனால் மட்டுமே அமைதியான சூழ்நிலையை பெற முடியும். பொருளாதாரத்தில் தடைகள் ஏற்படும் காரிய தடைகளும் ஏற்படும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கன்னி ராசி
இந்த ராசியினரை பொறுத்த வரையில் மன உளைச்சலுக்கு ஆளாக கூடிய வாய்ப்புகள் அதிகம். வேலையில் அதிக பனிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரிக்கும். உடல் உபாதைகள் உருவாகும். நிதி நிலைமை மோசமாக கூடிய வாய்ப்புகள் உண்டு இதனால் கடன் அதிகமாக வாங்க கூடிய சூழ்நிலை உருவாகும். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது.

- Advertisement -

விருச்சகம்

கும்ப ராசியில் நிகழக்கூடிய இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையினால் விருச்சக ராசியினருக்கு தொழில் சற்று சுணக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு. கடினமாக உழைத்தாலும் கூட உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வெற்றி கிடைக்காது. பணியிடத்தில் சுமைகள் அதிகரிக்கும். இதனால் மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள். பணத்தடை காரியத்தடை அனைத்தையும் சந்திப்பீர்கள். எதையும் சிந்தித்து செயலாற்றுங்கள்.

மகரம்

மகர ராசியினருக்கும் புதனின் இந்த சஞ்சாரத்தினால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க கூடிய வாய்ப்பு உண்டு. சேமிப்புகள் குறையும் செலவுகள் அதிகரிக்கும் குடும்பத்திற்குள் சண்டை சச்சரவுகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே உண்டாகும் வாக்குவாதங்களில் நிதானமாக கையாள்வது நல்லது தொழில் நல்ல முன்னேற்றம் என்பது சற்று குறைவு தான். இந்த காலக்கட்டத்தை பொறுமையாக கடப்பது தான் நல்லது.

இதையும் படிக்கலாமே: சனி புதன் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது தான். கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படக் கூடிய இந்த மாற்றங்கள் ஒரு புறம் இருந்தாலும் நம்முடைய நம்பிக்கையும் விடாமுயற்சியும் என்றும் வீணாகாமல் அதற்கான பலனை தரும் என்ற தகவலுடன் பதிவினை முறை முடிவு செய்து கொள்வோம்.

- Advertisement -