உங்கள் வாழ்க்கையில் நீங்கள் விரும்பிய குறிக்கோளை விரைவாக அடைய அரகஜாவை நெற்றியில் இப்படி இட்டுக் கொண்டால் போதும்.

thilagam
- Advertisement -

நம்முடைய மனது பார்க்கக்கூடிய பொருட்களின் மீது எல்லாம் ஆசைப்படும், விருப்பப்படும். இஷ்டப்படக்கூடிய எல்லா விஷயங்களையும் வாழ்க்கையில் அடைந்து விட முடியுமா என்று கேட்டால், அது நிச்சயமாக முடியாது. நம் தகுதிக்கு ஏற்ற பொருட்களின் மீது மட்டும் நாம் ஆசை வைக்க வேண்டும். நம் தகுதிக்கு மீறிய ஆசைகளை நம் மனதிற்குள் கொண்டுவரக் கூடாது. உதாரணத்திற்கு நாம் சாதாரண நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றால், நம்முடைய வருமானத்திற்கும், நம்முடைய வசதிக்கும் ஏற்றவாறு நமக்கு என்னென்ன ஆசைகள் இருக்க வேண்டுமோ, நியாயமான அந்த ஆசைகள் கனவுகள் மட்டும் தான் இருக்க வேண்டும். அதை விடுத்து கோடி ரூபாய்க்கு வைரமும் பொன்னும் பொருளும் சேர்க்க வேண்டும் என்ற பேராசை நிச்சயம் இருக்கக் கூடாது.

இதற்காக கனவுகளும் லட்சியங்களும் மேலோங்க கூடாதா. நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் பணக்காரர்களாக மாற கூடாதா என்று விதாண்டவாதமான கேள்விகளை எழுப்ப வேண்டாம். எல்லோரும் எல்லா விஷயத்திற்கும் ஆசைப்படலாம். ஆனால் நடைமுறை வாழ்க்கைக்கு எது சாத்தியமாகும் என்பதையும் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.

- Advertisement -

மாணவர்களுக்கு குறிப்பிட்ட படிப்பின் மீது ஆசை இருக்கும். சிலருக்கு நன்றாக படித்து கலெக்டராக வேண்டும். டாக்டராக வேண்டும். இன்ஜினியராக வேண்டும் என்ற ஆசை கூட இருக்கலாம். விரும்பிய வேலை கிடைக்க விரும்பிய மன வாழ்க்கை அமைய இந்த பரிகாரத்தை செய்யலாம். நம் தகுதிக்கு தகுந்த விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த பரிகாரம் கைமேல் பலனை கொடுக்கும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான ஒரே ஒரு பொருள். அரகஜா. நிறைய நாட்டு மருந்து கடைகளில் இப்போது கிடைக்கின்றது. தரம் வாய்ந்த அரகஜாவை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கி வந்த அரகஜாவை வீட்டிற்கு கொண்டு வந்து பூஜையறையில் வைத்து விட வேண்டும். அரகஜா டப்பாவை திறந்தபடி பூஜை அறையில் வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் காமாட்சி அம்மன் விளக்கு கஜலட்சுமி விளக்கு இருந்தால் அந்த விளக்குக்கு பக்கத்தில் இந்த அரகஜாவை வைத்துவிட்டு மூன்று நாட்கள் காலையோ அல்லது மாலை நேரத்திலோ ஏதாவது ஒரு வேளையில் அந்த விளக்கை ஏற்றி வைத்து, உங்கள் குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு அந்த அரகஜாவுக்கு உண்டான தெய்வ சக்தியை கொடுத்து விடுங்கள்.

- Advertisement -

விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விளக்கின் முன்பாக அமர்ந்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்தால் போதும். அரகஜாவுக்கு இறைசக்தி நிறைவாக கிடைத்துவிடும். இப்போது நெற்றியில் இட்டுக் கொள்ள அரகஜா தயாராக உள்ளது. இதை பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள்.

தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு உங்களுடைய விருப்பம் என்னவோ நீங்கள் வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்களோ நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்களோ அதை நினைத்து இந்த அரகஜாவை வலது கை மோதிர விரலால் தொட்டு சிறிதளவு நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். நெற்றியில் வைத்தால் எல்லோருக்கும் தெரியும் அலுவலகம் செல்பவர்கள் என்றால் இதை லேசாக உச்சந் தலையில் இட்டுக் கொள்ளலாம். தினமும் இந்த அரகஜாவை எதை நினைத்து உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறீர்களோ அந்த காரியம் சீக்கிரம் கைகூடி வரும்.

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் குறிப்பிட்ட அந்த காண்ட்ராக்ட் எனக்கு கையொப்பமாக வேண்டும். இன்றைக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும். இப்படி எந்த குறிக்கோள் இருந்தாலும் அதற்காக நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறாக யாரையும் வசியம் செய்வதற்காகவோ அல்லது அடுத்தவர்களை உங்களுக்கு அடிமைப்படுத்திக் கொள்வதற்காகவோ இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் அது பலிக்காது. நல்லதற்காக மட்டுமே பரிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -