சோர்வு, சோம்பல், நீங்கி சுறுசுறுப்பை தரும் சுக்குத் தாயத்து. முருகப்பெருமானை வேண்டி இதை மட்டும் கழுத்தில் கட்டிக் கொண்டால் வெற்றி, பெயர், புகழ், பதவி, எல்லாம் உங்களைத் தேடி வரும்.

murugan1
- Advertisement -

உன்னால் ஒரு காரியத்தை கூட உருப்படியாக செய்ய முடியாது. நீ எதை தொட்டாலும் அது தோல்விதான். நீ ஒரு சோம்பேறி, தத்தி என்று கூட சில பேரை திட்டுவோம். இப்படி உதவாக்கரையாக உள்ளவர்களை கூட, உறுதிப் படைத்தவர்களாக மாற்றக்கூடிய ஒரு குறிப்பு தான் இது. எல்லோரும் உங்களை கைவிட்டு விட்டார்கள். நீங்கள் வாழ்க்கையில் தோற்பதற்காகவே பிறந்திருக்கிறீர்கள் என்றால் கூட, இந்த பரிகாரத்தை செய்தால் வெற்றி, பெயர், புகழ், பதவி உங்களை தேடி வரும். அந்த முருகப்பெருமானை நினைத்து இந்த பரிகாரம் செய்யக்கூடிய நீங்கள் குப்பையில் இருந்தாலும் ஒரு சில நாட்களிலேயே, கோபுரத்தின் உச்சியில் நிச்சயம் அமர்வீர்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை யாருமே மிஸ் பண்ணாதீங்க.

இந்த சமூகத்தில் நீங்கள் வாழவே தகுதி இல்லை, அருகதை இல்லை என்று சொல்லி ஒதுக்கி ஒதுக்கி வைக்கப்பட்டு, வாழ்க்கையை வெறுத்திருக்கக்கூடிய நிலையிலிருந்து கூட முன்னேற்றம் அடையலாம் இந்த பரிகாரத்தை செய்தால். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் சுக்கு. ஒரு தாயத்து அவ்வளவுதான்.

- Advertisement -

சுக்கை ஒரு உறலில் போட்டு நசுக்கி கொஞ்சம் பொடியாக எடுத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தாயத்துக்கு உள்ளே போட முடியும். முருகப்பெருமானை வேண்டி தான் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு சுக்குப்பொடியை தாயத்துக்கு உள்ளே போட்டு மூடி, ஒரு சிவப்பு நூலிலோ மஞ்சள் நூலிலோ கோர்த்து தயார் செய்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். தயார் செய்த சுக்கு தாயத்தை முருகப்பெருமானின் பாதங்களில் வைத்து விடுங்கள். ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.

அதன் பின்பு நீங்கள் தரையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து கொண்டு முருகனை மனதார வணங்கி, முருகனது மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். ‘ஓம் முருகா’ என்ற சொல்லலாம். ‘ஓம் சரவணபவ’ என்று சொல்லலாம். அது உங்களுடைய விருப்பம் தான். முருகனின் எந்த ஒரு நாமத்தை 108 முறை உச்சரித்தாலும் சரி. அந்த முருகப்பெருமானின் சக்தி தாயத்தில் இறங்கி இருக்கும். அதன் பின்பு இந்த தாயத்தை எடுத்து தேவை என்றால் நீங்கள் கட்டிக் கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி இல்லை உங்களுடைய கணவருக்கு, உங்களுடைய பிள்ளைக்கு, சுறுசுறுப்பு வேண்டும். அவர்கள் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அவர்களுடைய கையில், கழுத்தில் இடுப்பில் இந்த தாயத்தை கட்டி வைக்கலாம் தவறு கிடையாது. இந்த தாயத்தை கட்டியவர்கள் உடம்பில் அந்த முருகப்பெருமானை குடி வந்து சில அதிசயங்களை செய்ய தொடங்கி விடுவார்.

படிப்பில் மந்தமாக இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு இந்த தாயத்தை கட்டினால் அவர்கள் உடனடியாக படிப்பில் சிறந்து விளங்குவார்கள். எப்போதுமே தூங்கிக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருப்பவர்கள் கையில் இந்த தாயத்தை கட்டினால் அவர்கள் உடனடியாக நல்ல வேலைக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் வரும். இதுவரை வாழ்க்கையில் வெற்றியை காணாதவர்கள் இந்த தாயத்தை நம்பிக்கையுடன் கட்டிக் கொண்டால், வெற்றி ஒன்றன்பின் ஒன்றாக பின்னால் வரும்.

இப்படி என்ன தேவை உங்களுக்கு இருக்கிறதோ, அந்த தேவைகளை சரியான நேரத்தில் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தாயத்து தான் இது. சுக்குக்கு மிஞ்சின வைத்தியம் இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள். இந்த வரிகளுக்கு இணங்க, இந்த ஒரு குறிப்பு உங்களுடைய வாழ்க்கையை புரட்டி போடும் அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரமாக இருக்கும். நீங்கள் நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். வாழ்வில் நம்ப முடியாத நிறைய நல்ல மாற்றங்களை சந்திப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -