துர்க்கை அம்மனை இப்படி வழிபாடு செய்தால் துன்பங்கள் தூள் தூளாகிவிடும். வெற்றிவாகை சூட சுலபமான ஒரே வழி, இந்த வழி தான்.

durgai
- Advertisement -

வாழ்வில் இருக்கக்கூடிய துன்பங்கள் தொலைந்து போக வேண்டும் என்றாலும், எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றாலும், கண் திருஷ்டியில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றாலும், வெற்றி வாகை சூட வேண்டும் என்றாலும், வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெற வேண்டும் என்றாலும், நாம் செய்ய வேண்டிய ஒரே ஒரு வழிபாடு துர்கை அம்மன் வழிபாடு. எல்லா பிரச்சனைகளையும் துவம்சம் செய்யக்கூடிய சக்தி இந்த துர்கா தேவியிடத்தில் தான் உள்ளது. அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. முறையாக துர்க்கையம்மனை எப்படி வழிபாடு செய்தால் வெற்றி வாகையை சுலபமாக சூடலாம் என்பதை பற்றிய ஒரு அரிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பெரும்பாலும் எல்லா தெய்வத்தையும் நாம் நின்று தான் வழிபாடு செய்வோம். நின்று இரு கை கூப்பி கும்பிடுவோம். இன்னும் கொஞ்சம் மேலே போனால் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்வோம். ஆனால் துர்க்கை அம்மனை மட்டும் நாம் இப்படி எதிரெதிரே என்று வழிபாடு செய்யக்கூடாது. துர்கை அம்மனுக்கு முன்பாக முட்டிப்போட்டு உங்களுக்கு வேண்டிய வரங்களை மனதார நினைத்துக் கொள்ளுங்கள் போதும்.

- Advertisement -

முட்டிப்போட்டு இரு கைகளையும் ஏந்தி வரங்களைக் கேட்கும்போது துர்கை அம்மன் தானாக வரங்களை வாரி வழங்கி விடுவாள். பொதுவாக துர்க்கை அம்மனுக்கு சிறப்பு என்றாலே அது குங்கும அர்ச்சனை தான். இது நாம் எல்லோருக்கும் தெரியும் அல்லவா. செவ்வாய்க்கிழமையில் ராகு கால நேரத்தில் உங்கள் கையால் தாழம்பூ குங்குமத்தை வாங்கி கொடுத்து, துர்க்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். அந்த அர்ச்சனை செய்யப்பட்ட குங்குமத்தில் இருந்து சிறிதளவு வாங்கிக் கொள்ளுங்கள். வீட்டில் கொண்டு வந்து வையுங்கள். வீட்டை எதிர்மறை ஆற்றல் அண்டாது. வீட்டில் கண் திருஷ்டி அண்டாது.

தினமும் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டால் நம்முடன் சக்தி தேவையே பாதுகாப்பாக இருப்பதாக அர்த்தம். வீட்டில் இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு தினமும் இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து விடுங்கள். தொழிலில் எதிரி அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்கள், எதிரி தொல்லை சொந்த பந்தங்கள் இடையே எதிரி தொல்லை, என்று வரும்போது அந்த எதிரிகள் கொடுக்கக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கவும் வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -

வரங்களை எல்லாம் நீங்கள் போய் அந்த துர்கா தேவியிடம் கேட்கவே வேண்டாம். அமைதியாக முட்டி போட்டு மனதை ஒருநிலைப்படுத்தி வாழ்வு வளம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டாலே போதும். வெற்றி உங்கள் கையில் கொடுக்கப்படும். உங்கள் வாழ்க்கையில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களை அவளே தெரிந்து கொள்வாள். பிறகு வரக்கூடிய பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வை அவளை காட்டிக் கொடுத்து விடுவாள்.

அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த இந்த வழிபாட்டை நம்மில் பல பேர் மேற்கொள்வதே கிடையாது. முயற்சி செய்து பாருங்கள். வாரம் தோறும் தொடர்ந்து செவ்வாய் கிழமை ராகுகாலம் துர்க்கை அம்மன் வழிபாடு செய்யலாம். தினமும் துர்கை அம்மன் கோவிலுக்கு சென்று முட்டி போட்டு வழிபாடு செய்பவர்களுக்கும் வாழ்வில் முன்னேற்றம் தடைப்படாமல் இருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -