வாழ்வில் வெற்றி பெற வெற்றிலை பரிகாரம்

mahalshmi7
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்திற்காக முயற்சி செய்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதில் சில பேருக்கு எடுத்த முயற்சியில் உடனடியாக வெற்றி கிடைக்கிறது. சிலருக்கு எடுத்த முயற்சியில் தோல்வி தோல்வி தோல்வி மட்டும் தான் மிஞ்சுகிறது.

நாளை நான் மேற்கொள்ள போகும் முயற்சியில் எனக்கு வெற்றி கிடைக்குமா? தோல்வி கிடைக்குமா? இன்று நான் அதை எப்படி தெரிந்து கொள்வது? ஒரு வெற்றிலையை வைத்து தெரிந்து கொள்ள முடியும். அது எப்படி? நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்திலேயே சொல்லி வைத்த ஒரு பழமையான முறையை தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாமும் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

வெற்றியைத் தரும் வெற்றிலை

வெற்றிலைக்கு இன்னொரு பெயர் உண்டு. வெற்றி இலை. ஐந்து ரூபாய்க்கோ அல்லது பத்து ரூபாய்க்கோ காசு கொடுத்து, கடையில் வெற்றிலை வேண்டும் என்று கேளுங்கள். கடைக்காரர் உங்களுக்கு வெற்றிலையை கொடுப்பார். எத்தனை வெற்றிலை வேண்டும் என்று நீங்கள் எண்ணிக்கையில் சொல்லக்கூடாது.

இந்த ரூபாய்க்கு வெற்றிலை தேவை என்று கேட்டால் மட்டும் போதும். அவர்கள் உங்களிடம் வெற்றிலையை கொடுத்து விடுவார்கள். அந்த வெற்றிலையை வாங்கி எண்ணிப் பாருங்கள். ஒற்றைப்படையில் உங்கள் கைக்கு வெற்றிலை வந்திருந்தால், நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்கள் வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும் என்பது அர்த்தம். ஒருவேளை இரட்டைப்படையில் வெற்றிலை உங்கள் கைக்கு வந்திருந்தால் உங்களுக்கு வாழ்க்கையில் காரியத்தடை வந்து கொண்டே இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுக்கும் வாழ்க்கையில் நிறைய குழப்பங்கள், நிறைய காரிய தடைகள் இருக்கிறது. அடுத்து எடுக்கக்கூடிய முயற்சியிலாவது நான் வெற்றி காண வேண்டும் என்பவர்கள், ஒரு செயலை செய்வதற்கு முன்பு,  இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்து பாருங்கள். சரி வெற்றிலை ஒற்றைப்படையில் வந்து விட்டால் நான் வாழ்க்கையில் ஜெயித்து விடுவேன் என்னுடைய முயற்சிகள் வெற்றி அடையும். ஒரு வேலை இரட்டைப்படையில் வெற்றிலை வந்து விட்டால். மீண்டும் நான் வாழ்க்கையில் தோற்றுத்தான் போக வேண்டுமா. என்ன செய்வது.

கவலைப்படாதீங்க நீங்கள் வாங்கிய வெற்றிலையிலிருந்து ஒரு வெற்றிலையை மட்டும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மிளகு 3 வைத்து மடித்து ஒரு நூல் போட்டு கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் தோல்வி வரக்கூடாது என்று குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். மூன்று நாள் கழித்து இந்த வெற்றிலை பொட்டலத்தை அப்படியே கொண்டு போய் ஓடும் தண்ணீரில் அல்லது ஏரி குளங்களில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

தண்ணீர் பாங்கான இடம் உங்கள் வீட்டு பக்கத்தில் இல்லை எனும் பட்சத்தில் இதை ஏதாவது ஒரு கால் படாத இடத்தில், மனிதர்கள் அதிகம் நடமாடாத ஊருக்கு ஒதுக்கப்புறமான இடத்தில் கொண்டு போய் போட்டுவிட்டு உங்களுடைய முயற்சிகளை மேற்கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் இன்டர்வியூ இருக்கு, அடுத்த வாரம் திருமணத்திற்காக வரன் பார்க்க போறோம். அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு செல்ல இன்டர்வியூ இருக்கு. ஒரு முக்கியமான காண்ட்ராக்ட் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் இப்படி நிறைய முக்கியமான விஷயங்கள் நமக்கு முன்கூட்டியே தெரிய வரும். அந்த வேலை சக்ஸஸ் ஆகுமா என்று தெரிந்து கொள்ள மேல் சொன்ன முறையை நீங்கள் பின்பற்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் குலதெய்வ வழிபாடு

பொதுப்படையாக இதை நம்முடைய முன்னோர்கள் அந்த காலத்தில் சொல்லி வைத்துள்ளார்கள். தேவை என்பவர்கள் இதை முயற்சி செய்து பார்க்கலாம். அதற்காக முழுசாக இதையே நம்பி இரட்டைப்படையில் வெற்றிலை வந்து விட்டது எனக்கு வாழ்க்கையில் பிரச்சனை வந்துவிடும் என்று உடைந்து போகக்கூடாது. கடவுள், வரக்கூடிய பிரச்சனையை காட்டிக் கொடுப்பதற்காக இப்படி ஒரு பரிகாரத்தை கொடுத்திருக்கின்றான் என்ற தைரியத்தோடு வாழ்க்கையை நகர்த்திச் செல்லுங்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -