நிறைவேறாத வேண்டுதலை அம்மனிடம் இப்படி சொன்னால் அது உடனே நடக்கும். உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் படத்திற்கு இந்த மாலை போடுங்கள்.

amman
- Advertisement -

நாம் இறைவனிடம் வைக்கக்கூடிய எல்லா வேண்டுதலும் பலிப்பது கிடையாது. ஒரு சில நேரங்களில் நாம் கேட்கும் வரங்களை அந்த அம்பாள் உடனே கொடுத்து விடுவாள். சில நேரங்களில் சில வரங்களை என்னதான் மன்றாடி கேட்டாலும் அந்த வரத்தை நம்மால் பெறவே முடியாது. அம்பாளின் காதுகளில் நம்முடைய வேண்டுதல் உடனே கேட்க வேண்டும் என்றால் என்ன செய்வது. ஒரு சிறிய ஆன்மீக ரீதியான பரிகாரம் உங்களுக்காக.

என்னுடைய குழந்தைக்கு சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும். என்னுடைய குழந்தைக்கு நோய் நொடி சீக்கிரமாக குணமாக வேண்டும். எனக்கு குழந்தை பாக்கியம் தேவை. எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். எனக்கு கடன் இல்லாத வாழ்க்கை வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும். கணவர் என்னிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இப்படி எந்த வேண்டுதலை வேண்டுமென்றாலும் நீங்கள் அம்மனிடம் தயங்காமல் கேட்கலாம்.

- Advertisement -

எதாவது ஒரு வேண்டுதலாக மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்க்கு நமக்கு 3 வெற்றிலைகள் தேவை. கடைக்கு சென்று கிழிசல் இல்லாத கொஞ்சம் பெரிய அளவில் இருக்கக்கூடிய வெற்றிலையாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள். அந்த வெற்றிலையை வீட்டுக்கு கொண்டு வாருங்கள். முதலில் தண்ணீரில் கழுவி விடுங்கள். வெற்றிலைக்கு உள்பக்கம் மஞ்சளைக் குழைத்து நன்றாகப் பூசிக்கொள்ளுங்கள்.

மஞ்சள் பூசி வைத்துள்ளீர்கள் அல்லவா அந்த இடத்தில் உங்களுடைய வேண்டுதலை ஒரே ஒரு வரியில் சிறியதாக எழுதிக்கொள்ள வேண்டும். தீப்பெட்டி குச்சியை பயன்படுத்தி எழுதலாம். அப்படி இல்லையென்றால், ஊதுவத்தி குச்சியில் உங்கள் வேண்டுதலை அந்த மஞ்சளில் வெற்றிலையின் மேல் எழுத வேண்டும். நீங்கள் எழுதுவது அந்த அம்பாளுக்கு புரிந்தால் போதும். மஞ்சளை தொட்டு எல்லாம் எழுதவேண்டாம். வெற்றிலையின் மேல் இருக்கக் கூடிய மஞ்சளின் மேலேயே வேண்டுதலை எழுதிவிட வேண்டும்.

- Advertisement -

அரிசியின் மேல் நெல்லின் மேல் கையை வைக்க எழுதுவார்கள் அல்லவா. அது போல் தான் இதுவும். மூன்று வெற்றிலைகளிலும் ஒரே கோரிக்கையை எழுதி விட்டீர்கள். மூன்று வெற்றிலையையும் சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூலில் பூ கட்டுவது போல கட்டிக்கொள்ளுங்கள். இதை அப்படியே உங்கள் வீட்டில் இருக்கும் அம்பாளின் திரு உருவப்படம் இதில் மாற்றிவிடுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு, வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு இந்த பரிகாரத்தை செய்து முடித்து விடுங்கள். (எந்த அம்மனின் படம் இருந்தாலும் சரி அதற்கு இந்த மாலையை போடலாம். எங்களுடைய வீட்டில் அம்மனின் படமே இல்லை என்றாலும் காமாட்சி அம்மன் விளக்கு பக்கத்தில் இந்த மாலையை வைத்து விடுங்கள்.)

மூன்று நாட்கள் வெற்றிலை மாலை அந்த அம்பாளின் கழுத்திலேயே இருக்கட்டும். மூன்று நாட்களுக்கு பிறகு அந்த மாலையை எடுத்து செடிகொடிகள் இருக்குமிடத்தில் கால் படாமல் போட்டு விடுங்கள். அந்த மூன்று நாட்களுக்குள் வேண்டுதல் பலிப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை வேண்டுதல் படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதை நினைத்து கவலைப் படவேண்டாம். கூடிய சீக்கிரத்தில் உங்கள் வேண்டுதலை அந்த அம்பாள் நிச்சயம் நிறைவேற்றி வைப்பாள்.

திடீரென்று உங்களுடைய வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை. திடீரென்று சண்டை வந்து விட்டது. திடீரென்று பண கஷ்டம் வந்து விட்டது. அதை சரியாக வேண்டும் என்றாலும் உங்களுடைய கோரிக்கையை இப்படி மஞ்சள் தடவிய வெற்றிலையில் எழுதி அம்பாளிடம் வைக்கலாம். நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலை அந்த அப்பால் நிறைவேற்றி வைப்பாள். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -