உங்கள் கைக்கு பணம் வருவதை தடுத்து நிறுத்தும் தரித்திரத்தை துரத்தியடிக்க இந்த 2 இலைகளை ஒன்றாக சேர்த்து பீரோவில் இப்படி வைத்தாலே போதும்.

vetrilai-cash
- Advertisement -

சில பேருக்கு வாய்ப்புகளும் வருமானமும் வாசல்படி வரை வரும். ஆனால் வீட்டிற்கு உள்ளே வராது. ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு வந்த நல்ல வாய்ப்பு பறிபோய்விடும். நம்மை விட தகுதி குறைவானவர்களுக்கு போய்விடும். நம்மைவிட பட்டியலில் அடுத்து உள்ளவர்களுடைய கைக்கு சென்று விடும். என்ன காரணம். நம்மைப் பிடித்திருக்கும் ஏதோ ஒரு தரிதிரம் தான். அதாவது கெட்ட நேரம். கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றி, நம் வீட்டிற்குள் வர விருக்கும் மகாலட்சுமியை எந்தவித தடையும் இல்லாமல் வரவேற்க இந்த ஒரு சிறிய பரிகாரம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். காலை 6 மணிக்கு செய்வது மிகவும் சிறப்பு. முடியாதவர்கள் உங்களுக்கு எப்போது நேரம் இருக்கிறதோ அப்போது செய்து கொள்ளுங்கள். மதியம் உச்சிப் பொழுது தவிர. இந்த பரிகாரத்திற்க்கு 1 வெற்றிலை, 1 அரசய இலை நமக்கு தேவைப்படும். அதன் பின்பு ஒரு சிறிய கட்டி பச்சை கற்பூரம்.

- Advertisement -

பூஜையறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டி முதலில் ஒரு வெற்றிலையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு அரச இலையை வைத்து, அரசை இலைக்கு மேலே ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, சுருட்டி அப்படியே இதை மடித்து ஒரு நூலைப் போட்டு கட்டிக் கொண்டாலும் சரிதான். இந்த முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு பணம் வருவதில் இருக்கக்கூடிய எல்லா தடைகளும் விலக வேண்டும் என்று.

இந்த முடிச்சை நீங்கள் பணம் வைக்கும் பெட்டியில் எடுத்து வைத்து விட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் திங்கள் செவ்வாய்க்கிழமை இந்த முடிச்சு பணம் வைக்கும் பெட்டியில் இருக்கட்டும். புதன்கிழமை இந்த வெற்றிலை முடிச்சை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இதே போல இந்த பரிகாரத்தை செய்து வரும் பட்சத்தில் உங்கள் வீட்டை பிடித்த தரித்திரம் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று அமாவாசை வந்தால் அந்த நாளை தவறவிடாதீர்கள். அந்த நாளில் இந்த பரிகாரத்தை நம் வீட்டில் செய்யும்போது அதற்கான பலன் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.

உங்கள் வீட்டில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டிருக்கும் பிடையும் தரித்திரமும் வீட்டை விட்டு வெளியே ஓடி சென்று விடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த பரிகாரம் தான் இது. சுலபமான பரிகாரமாக இருந்தாலும் நம்பிக்கையோடு செய்யும்போது இதன் மூலம் நிறைய பலனை அடைவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -