இஷ்டப்பட்ட லட்சியத்தை கஷ்டப்படாமல் அடையலாம். வீட்டில் இந்த 1 தீபத்தை மட்டும் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

vetrilai-deepam-lakshmi
- Advertisement -

சில பேர் இஷ்டப்பட்ட விஷயங்களை கஷ்டப்படாமல் அடைந்து விடுவார்கள். சில பேர் இஷ்டப்பட்ட விஷயத்தை, மிக மிக கஷ்டபட்ட பின்பு தான் அடைவார்கள். சில பேரால் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும் இஷ்டப்பட்டதை அடையவே முடியாது. கஷ்டமோ இஷ்டமோ இதையெல்லாம் நமக்கு கொடுப்பது யார். அந்த கடவுள் தான். அந்த கடவுளை இந்த முறையில் வழிபாடு செய்து வேண்டுதல் வைத்து பாருங்கள். நீங்கள் இஷ்டப்பட்டது எல்லாமே கஷ்டப்படாமல் கிடைக்கும்.

இன்று நாம் பார்க்கக்கூடிய வழிபாடு வெற்றிலை தீப வழிபாடு. பெரும்பாலும் இந்த தீபத்தை பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள இந்த ஒரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இரண்டு வெற்றிலைகளாக வாங்கிக் கொள்ளுங்கள். ஒற்றை வெற்றிலையில் தீபம் ஏற்ற வேண்டாம். இரண்டு வெற்றிலைகள் அல்லது அதற்கு மேற்பட்ட வெற்றிலைகள் ஆறு வெற்றிலைகள் வைத்து கூட இந்த தீபத்தை ஏற்றலாம். வெற்றிலைகளை வாங்கி அதை சுத்தமான தண்ணீரில் கழுவி விடுங்கள்.

- Advertisement -

ஒரு பூஜை செய்வதாக இருந்தால், பூஜை அறையை எப்படி அலங்காரம் செய்வீர்களோ அப்படி அலங்காரம் செய்து கொண்டு, ஒரு தாம்பூல தட்டில் இந்த வெற்றிலையை வைத்து, வெற்றிலைக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, இந்த வெற்றிலையின் மேல் மண் அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு இதில் ஏதாவது ஒரு விளக்கை வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

வெற்றிலையை ஒரு வெற்றிலைக்கு மேல், ஒரு வெற்றிலை தான் வைக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது. அழகாக வெற்றிலையை வட்ட வடிவில் அடுக்கி அதன்மேல் தீபத்தை வைத்து ஏற்றுவது பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

- Advertisement -

தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அந்த தீபத்தின் முன்பு அமர்ந்து உங்களுடைய வேண்டுதலை வைத்தால் அந்த வேண்டுதல் கூடிய சீக்கிரத்தில் பலிக்கும். அதோடு மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கக்கூடிய வாஸ்து தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடிய சக்தியும் இந்த வெற்றிலை தீபத்திற்கு உண்டு. சொந்த வீடு வாங்க, கடன் பிரச்சனை தீர, வருமானம் அதிகரிக்க, வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ, நல்ல வேலை கிடைக்க செல்வ செழிப்பு பெருக என்று எந்த வேண்டுதலை வேண்டுமென்றாலும் வைக்கலாம். தொடர்ந்து 48 நாட்கள் இந்த வெற்றிலை விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்வது அவ்வளவு சிறப்பு. தினமும் உங்களால் இந்த பூஜையை செய்ய முடியாது என்றாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒரு நாள் வெற்றிலை தீபம் ஏற்றி வழிபாடு செய்தாலும் அது நல்ல பலனை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வீடு துடைக்கும் தண்ணீரில் அதி சக்தி வாய்ந்த இந்த 1 பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க. பூச்சிகள், கண்ணுக்கு தெரியாத கிருமி, கண்ணுக்கு தெரியாத கெட்ட சக்தி, என்று வீட்டிற்குள் எதுவுமே நுழைய முடியாது.

வழிபாட்டை முடித்துக் கொண்டு இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்த பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வெற்றிலை வாடிய பின்பு அதை எடுத்து கால் படாத இடங்களில் செடி கொடிகளுக்கு அடியில் போட்டு விடலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -