வெறித்தனமா முடி வளர்க்க உங்களுக்கு ஆசையா? அப்போ இந்த வெற்றிலை எண்ணெயை ஒருமுறை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.

hair6
- Advertisement -

சில பேருக்கு முடியின் மேல் ரொம்ப ரொம்ப ஆசை இருக்கும். வெறித்தனமாக முடியை வளர்க்க வேண்டும் என்று ஏதேதோ செய்து பார்ப்பார்கள். ஆனால், முடி கொத்துக் கொத்தாக கொட்டிக்கொண்டே இருக்கும். முடி உதிர்வை நிறுத்தி, முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு சூப்பரான ஆயில் ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாரத்தில் ஒரு நாள் தலைக்கு குளிப்பதற்கு முன்பு இந்த ஆயில் மசாஜ் செய்துகொள்ளுங்கள். முடி உதிர்வு படிப்படியாக குறையும். முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

இந்த எண்ணெய் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள். வெற்றிலை – 3, சின்ன வெங்காயம் – 4 நான்கிலிருந்து 5 தோலுரித்து பொடியாக நறுக்கியது, தேங்காய் எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வையுங்கள். கொதிக்கின்ற தண்ணீருக்கு மேலே ஒரு சிறிய கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெயையும், விளக்கெண்ணெயும் ஊற்றி நன்றாக சூடு செய்யுங்கள். அதன் பின்பு எடுத்து வைத்திருக்கும் வெற்றிலைகளை சிறு சிறு துண்டுகளாக கையாலேயே கிழித்து எண்ணெயில் போட்டு விடுங்கள். அதன் பின்பு சின்ன வெங்காயத்தையும் இந்த எண்ணெயில் போட்டு விட வேண்டும்.

கீழே தண்ணீர் கொதிக்க கொதிக்க மேலே இருக்கும் எண்ணெய் சூடாக்கி நீங்கள் உள்ளே போட்டிருக்கும் பொருட்களிலிருந்து, எண்ணெயில் சாறு இறங்க வேண்டும். டபுள் பாய்லின் மெத்தடில் இந்த எண்ணெயை சூடு செய்யும் போது எண்ணெய் பச்சை நிறத்திற்கு வந்தவுடன், அடுப்பை அணைத்துவிட்டு, எண்ணெயை வெதுவெதுப்பாக சூடு இருக்கும் வரை ஆறவிட்டு அதன்பின்பு, எண்ணெயை மட்டும் வடிகட்டி தலையில் ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டும்.

- Advertisement -

டபுள் பாய்லிங் மெத்தடில் இந்த எண்ணெயை தயார் செய்வதால் கொஞ்சம் நேரம் எடுக்க தான் செய்யும். உங்களுக்கு நேரம் இல்லை என்றால் இதை அப்படியே நேராக அடுப்பில் வைத்து சூடு செய்து கொள்ளலாம். ஆனால் டபுள் பாய்லிங் மெத்தடில் எண்ணெயை காய்ச்சுவது பெஸ்ட் ரெமிடியாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த எண்ணெய் உங்களுக்கு ரொம்பவும் கொஞ்சமான அளவில் தான் கிடைத்திருக்கும். வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் கொடுத்து மசாஜ் செய்து விடுங்கள். இரவு இந்த எண்ணெயை தலையில் வைத்து விட்டு, மறுநாள் காலை தலைக்கு குளித்து விட்டாலும் சரிதான். ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளித்து வரவேண்டும். ட்ரை பண்ணி பாருங்க. முடி வளரக்கனும் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறும்.

- Advertisement -